சென்னை, ஜூன் 11- தமிழ்நாட்டில் கொரோன பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருப்ப தால் முகக் கவசம், தனிமனித இடைவெளி கட்டாயம் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியிருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமையன்று (ஜூன்11) தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் கொரோனா தொற்று குறித்தும், எடுக்கப்பட வேண்டிய தொடர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ் நாடு அரசின் பன்முக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப் ்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பல மாநிலங்களில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் மீண்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டு வந்தாலும், தமிழ்நாட்டில் பதிவாகும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைவாகவே உயர்ந்துள்ளது. இதன் தாக்கத்தைக் குறைக்க சுகாதாரத் துறை மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கை கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, தமிழகத்தில் இதுவரை கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டா லும், இதனை மேலும் உயராமல் கட்டுப்படுத்த வேண்டும். கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைக்கவேண்டும். கொரோனா கட்டுப் பாட்டுப் பணிகளை சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை போன்ற துறைகளை ஈடுபடுத்தி உரிய நட வடிக்கையை எடுக்க வேண் டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவுறுத்தினார். தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி போடுவ தால் ஏற்படும் நன்மைகளை விளக்கி, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள் ளும் நிலையை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு மற்றும் துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.