states

img

“வர்க்கச் சுரண்டலுக்கு எதிராக கலை, இலக்கிய வடிவங்களில் களமிறங்குவோம்”

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலை அரங்க மாநில பயிற்சி முகாம் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் நவ-19,20 தேதிகளில்  நடைபெற்றது.  பாடகர்கள் உமா, வசந்தி, நாடக கலைஞர் நடராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் பயிற்சி முகாமை  தொடக்கி வைத்து பேசினார். கலை யரங்க செயற்பாட்டாளர் பிரளயன் நோக்கவுரையாற்றினார்.  வர்க்க அரசியலும் வர்க்க அணி திரட்சிக்கான இலக்குகளும் என்ற தலைப்பில் மாநில செயற்குழு உறுப்பி னர் என். குணசேகரன், கலையும் சமூகமும் என்ற தலைப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் ஆகியோர் பேசினர். பண்பாட்டு தளத்தில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்து முற்போக்கு எழுத்தாளர் கே. வேலாயுதம் பேசினார்.  முன்னதாக முகாமை துவக்கி வைத்து மாநில செயலாளர் கே. பால கிருஷ்ணன் பேசியதாவது:   முதலாளித்துவம் மக்களை ஒடுக்க பண்பாடு, கலாச்சாரம், இலக்கி யம், இசையை கையில் எடுக்கிறது. மக்களை மூளைச் சலவை செய்து மாற்றுகின்றனர். உழைப்பாளிகள் மீதான சுரண்டலைத் தடுக்க மக்கள் ஜனநாயகப் புரட்சி நடத்தவேண்டும். ஒரு சமூகத்திற்கான போராட்டம் வர வேண்டும் என்றால் மாற்றுப் பண்பாடு, மாற்றுக் கலாச்சாரத்தை கொண்டுவரவேண்டும். திரு மணத்தில் பழமையான முறை, இறப்பில் பிற்போக்கான மத சடங்கு களை காலம் காலமாக பின்பற்றி வருகின்றனர்.  பல ஆண்டுகால பழக்க வழக்கங்கள் மக்கள் சிந்தனையை அடிமைப்படுத்துகின்றன.

பண்பாடு, கலாச்சாரத்தில் மாற்றம் கொண்டுவர எழுத்தா ளர்கள், கலைஞர்கள், நாடக கலை ஞர்களின் மகத்தான பங்களிப்பு முக்கியம்.  மத்தியில் ஆளும் பாஜகவின் தாய் அமைப்பான இந்துத்துவா, ஆர்எஸ்எஸ், விடுதலைப் போராட்டக் காலத்தில் இருந்தே இந்தியாவை இந்துத்துவ நாடாக்க கடுமையான முயற்சி எடுத்தது. சனாதன இந்து  என்று சொன்ன மகாத்மா காந்தி தீண்டாமையை ஏற்றுக்கொள்ள வில்லை. இந்தியாவில் மதம் இருக்க லாம். ஆனால் மதச்சார்பற்ற அரசு இருக்கவேண்டும் என காந்தி விருப்பப்பட்டார். அதனால்தான் மகாத்மா காந்தியை ஆர்எஸ்எஸ் கொடியவர்கள் படுகொலை செய்தனர். இந்தியாவின் பன்முகத் தன்மையை சீரழிக்கும் முயற்சியை ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாஜக மேற்கொண்டுள்ளது. மணிப்பூரில் தொடர்ந்து பாஜக அரசின் செயல்பாட்டால் கல வரம் நடந்து வருகிறது. தற்போது அங்கு பாதுகாப்பு பணியில் 5000 இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ள னர். இந்தியாவில் பெரும்பான்மை மக்களும் சிறுபான்மை மக்களும் மோதிக் கொள்ளவேண்டும் என பாஜகவினர் நினைக்கின்றனர். பல்வேறு நாடுகளில் பாசிசத்தை பார்த்திருக்கிறோம்; இந்தியாவில் பாசிச முகத்துடன் பாஜக செயல்படு கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், குடியுரிமை சட்டம் ஆகியவற்றை அமல்படுத்த முயற்சி செய்கின்றனர். 

பாஜகவை முறியடிப்பதே பிரதான பணி. பாஜக அல்லாத வாக்கு களை ஒருங்கிணைக்க வேண்டும்.  மதச்சார்பற்ற சக்திக ளோடு ஒன்றிணைந்து கருத்தியல் ரீதியாக போராட வேண்டும்.  தமிழகத்தில் சாதி ஆணவக் கொலை, சமூக ஒடுக்குமுறை, சாதிய அணி சேர்க்கை சவாலாக உள் ளது. சாதிய ஒடுக்குமுறை, சமூக ஒடுக்குமுறை தொடர்ந்து நடந்து வருகிறது. ஒடுக்குமுறைக்குள்ளான வர்களை தட்டி எழுப்புகின்ற வேலை யை நாம் செய்யவேண்டும். ஆண் - பெண் சமத்துவம் இருக்கின்றதா என்ற கேள்வி இருகிறது. உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண் என்றால் சுயமாக வேலை செய்ய விடுவதில்லை. பட்டியலினப் பெண் தலைவர் என்றால் நாற்காலியில் அமரவிடுவதில்லை. இட ஒதுக்கீட்டில் வந்த பெண்கள் செயல்பட முடியவில்லை. பெண்ணுரிமையை தொடர்ந்து வலியுறுத்த வேண்டியுள்ளது.  தற்போது உழைப்புச் சுரண்டல் அதிக அளவில் நடக்கிறது. தொழிற்சங்கம் வைக்கவே போராட வேண்டிய சூழல் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பெரும்முதலாளிகளால் அதிக அளவு உழைப்பு சுரண்டலுக்கு தொழிலாளர்கள் உள்ளாகியுள்ளனர். தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை, உரிய சம்பளம் இல்லை. எதிர்கால இளைஞர்களின் வேலைவாய்ப்பு கேள்விக் குறியாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அதானி, அம்பானி மட்டும் வளர்ந்து உள்ளனர்.  இந்த சுரண்டலை எதிர்த்து போராட வேண்டியுள்ளது. இந்த எதிர்ப்பை கலை வடிவிலும் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. மேலும் பல ஆயிரக்கணக்கான திறமைவாய்ந்த நாட்டுப்புற கிராமிய கலைஞர்கள் சிறப்பான கலைச் சேவை புரிந்து வருகின்றனர். இவர்களை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இரண்டாம் நாள் நவ.20  பயிற்சி முகாமில் ஆதவன் தீட்சண்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி ஆகியோர் பேசினர்.