இஸ்லாமாபாத், ஏப்.3- பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஞாயிறு பிற்பகல் கலைக்கப்பட்டது. அங்கு 90 நாட் களுக்குள் தேர்தல் நடைபெறுமென அறி விக்கப்பட்டுள்ளது. இம்ரான்கான் அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மா னம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என துணை சபாநாயகர் காசிம் கான் சூரி அறி வித்தார். ஆனால், நாடாளுமன்றத்தை கலை க்குமாறு ஜனாதிபதி ஆரிப் ஆல்வியை பிரதமர் இம்ரான்கான் கேட்டுக் கொண்டதை யடுத்து, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு கார ணம் எனக் குற்றம்சாட்டி அவர் மீது எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை யில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தன.
342 எம்.பிக்களில் 172 பேரின் ஆதரவை பெற்றால்தான் பதவியில் நீடிக்க முடியும் என்ற நிலை இம்ரான்கானுக்கு இருந்தது. ஆனால், இம்ரான் கானுக்கு அந்த அளவு ஆதரவு இல்லை. எதிர்க்கட்சிகளுக்கு 177 எம்.பிக்கள் ஆதரவு உள்ளது. இதனால், இம்ரான்கான் ஆட்சி கவிழும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானம் ஞாயிறன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இம்ரான்கான் அரசை பதவி நீக்கம் செய்வதற்கான நம்பிக் கையில்லா தீர்மானத்தை நிராகரிப்பதாக துணை சபாநாயகர் காசிம் கான் சூரி அறி வித்தார்.
சூரி கூறுகையில், “இம்ரான்கான் அரசு மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கை யில்லா தீர்மானம் அரசியலமைப்புக்கு எதி ரானது. தீர்மானத்தை அரசியல் சாசனத்தின்படி நிராகரிக்கிறேன்” என்றார். ஞாயிறன்று தனது அரசின் எதிர்காலம் குறித்து விவாதிக்கும் தீர்மானத்தை ஏற்க மறுத்த அதே நேரத்தில் பாகிஸ்தானின் ஜன நாயக செயல்பாட்டில் “வெளிநாட்டு சக்தி கள்” தலையிடுகின்றன என்று இம்ரான்கான் குற்றம்சாட்டினார்.
எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தனக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மா னத்தை தாக்கல் செய்ததை அடுத்து, “ராஜி னாமா, நம்பிக்கையில்லா (வாக்கு) அல்லது தேர்தல்” ஆகிய மூன்று விருப்பங்களை தனக்கு “ஸ்தாபனம்” வழங்கியதாக பாகிஸ் தான் பிரதமர் இம்ரான் கான் கூறினார். ஆனால் “ஸ்தாபனம்” என்பதன் அர்த்தம் என்ன என்பதை விளக்கவில்லை. மேலும் இம்ரான்கான் ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற நம்பிக்கையில்லா வாக் கெடுப்புக்கு முன்னதாக வீதியில் இறங்கி போராட்டம் நடத்துமாறு தனது ஆதர வாளர்களைக் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பாகிஸ்தான் அரசியலில் ஏற்பட்ட அடுத்தடுத்த நகர்வுகள் அந்நாட்டில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்திய நிலை யில், இம்ரான்கான் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றத்தை கலைப்பதாக பாகிஸ் தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி அறிவித்தார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அர சியலமைப்பின் 224-ஆவது பிரிவின் கீழ் பிர தமர் தனது கடமைகளை தொடர்வார் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஃபவாத் ஹுசைன் ட்வீட் செய்துள்ளார். பாகிஸ்தானில் 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் ஃபரூக் ஹபீப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், “இம்ரான்கான் அரசு அரசியலமைப்பை மீறியுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்களிக்க அனுமதிக்கவில்லை” எனக் குற்றம்சாட்டி ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தைவிட்டு வெளியேறாமல் போராட்டத்தில் ஈடுபட்டன. அரசியலமைப்பு மீறப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றம் செல்கிறார்கள். பாகிஸ்தானின் அரசியலமைப்பைப் பாதுகாக்க, நிலைநிறுத்த, பாதுகாக்க மற்றும் செயல்படுத்த அனைவரும் ஓரணியில் திரளுமாறு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பிபிபி) தலைவர் பிலாவல் புட்டோ அழைப்பு விடுத்துள்ளார்.