states

தீக்கதிர் விரைவு செய்திகள்

மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல்!

பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியே செலுத்தப்படும் இன்ட்ராநாசல் கொரோனா தடுப்பு மருத்துக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸாக இன்ட்ராநாசல் தடுப்பு மருத்தை செலுத்திகொள்ளலாம். முதற்கட்டமாக தனியார் மருத்துவமனைகள் மூலம் இதனைச் செலுத்திக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக Co-WIN இணையதளத்தில் முன்பதிவும் செய்துகொள்ளலாம். இந்த இன்ட்ராநாசல் தடுப்பு மருத்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெற்றிகரமாக முடிந்தது. அந்த முடிவுகளில் இன்ட்ராநாசல் மருந்து மிகவும் பாதுகாப்பானது மற்றும் நோயெதிர்ப்பு சக்தி கொண்டது என்று நிரூபணமானதாக தெரிவிக்கப்பட்டது.

காதுகேட்கும் கருவி விலையிலும் அண்ணாமலை தில்லுமுல்லு!

கோவையில் மாற்றுத் திறனாளிகளுக்கு பாஜக சார்பில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காது கேட்கும் கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டதாக பாஜக தலைவர் கே. அண்ணாமலை பேசியிருந்தார். ஆனால், சைபர் சோனிக் (Cyber Sonic) என்ற நிறுவனத்தின் அந்த சீனா தயாரிப்புக் கருவியின் விலை மொத்தமே 345 ரூபாய்தான் என்றும், ரபேல் வாட்ச் விவகாரத்தைப் போலவே இதிலும் அண்ணாமலை தான் ஒரு பொய்யர் என்பதை நிரூபித்துள்ளார் என்று விமர்சனங்கள் எழுந்தன. அமேசான் விற்பனை தளத்திலிருந்து இதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டனர். இதனால் வசமாக மாட்டிக் கொண்ட அண்ணாமலை தப்பிக்க வழியின்றி, “நாங்களும் விசாரித்தோம்; அதில் விலை 350 ரூபாய்தான் என தெரிய வந்துள்ளது” என்று சரணடைந்துள்ளார்.

ஜூலை மாதமே ‘பிஎப்.7’ வந்து விட்டது

“கடந்த ஜூலை, செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களிலேயே குஜராத் மற்றும் ஒடிசாவில் 4 பேர் ஒமைக்ரான் சப்-வேரியண்ட் பிஎப்.7 (BF.7) தொற்றுப் பாதிப்புக்கு உள்ளாகி விட்டனர்.  ஆனால், அப்போது விட்டு விட்டு, ராகுல் காந்தியின் நடைபயணம் தில்லியில் நுழைய உள்ளதால் தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் ராகுலின் நடைபயணம் தொடரும்” என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். மேலும், “காங்கிரஸ் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்தே வருவதாகவும், நாங்கள் உங்களைப் போல் கொ ரோனாவுக்கு எதிரான போரில் 18 நாள்களில் வெல்வோம் (மகா பாரத போரைப் போல) என்று கூறவில்லை. வீட்டின் பால்கனிக்கு சென்று தட்டுகளில் ஒலியினை ஏற்படுத்தச் சொல்லவில்லை” என்றும் மற்றொரு பேட்டியில் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

அன்று தப்லிக் ; இன்று ராகுலாம்!

“தப்லீக் ஜமாத் முன்பு நாடு முழுவதும் கொரோனா வைர ஸை பரப்பியது. இந்த முறை இந்திய ஒற்றுமை நடை பயணம் மூலம் ராகுல் காந்தி அதையே செய்கிறார். அவர் நடத்து வது இந்திய ஒற்றுமை யாத்திரை அல்ல. கொரோனா பரப்பும் யாத்திரை” என்று அகில பாரத இந்து மகாசபாவின் தேசியத் தலை வர் சுவாமி சக்ரபாணி மகராஜ் வழக்கம்போல பழியைத் தூக்கிப் போட்டுள்ளார். மேலும், “இந்த யாத்திரை நிறுத்தப்பட வேண்டும். ராகுல் காந்தியின் யாத்திரையை தேசிய தலைநகருக்குள் அனு மதிக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மோடி ஓடி ஒளிகிறார்!

“கொரோனாவைக் காரணம் காட்டி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை நிறுத்த ஒன்றிய அரசு சாக்குப் போக்கு கூறுகிறது. ரபேல், ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசினால் எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்கவே ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கிறது. தன்னை எதிர்ப்பவர்களை மோடி எதிர்கொள்ளாமல் வேறு திசையில் ஓடி விடுகிறது. அந்த களத்திலேயே நிற்பதில்லை!” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியுள்ளார்.

சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

சென்னை,டிச.23- அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று  பள்ளிக்கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. தமிழ்நாட்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை (டிச.23) வரை அரையாண்டு தேர்வு நடைபெற்றது. சனிக்கிழமை (டிச.24) முதல் ஜன.1 ஆம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறி விப்பு வெளியிட்டது. மேலும் விடுமுறை  முடிந்து ஜன. 2 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறித்துள்ளது. இந்நிலையில், அரையாண்டு விடு முறையில் மாணவர்களுக்கு சிறப்பு  வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும்  பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு அசைன்மென்ட் மட்டும் அளிக்கலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தொழிலாளர் நல நிதி செலுத்த வேண்டுகோள்

சென்னை,டிச.23- தமிழ்நாடு தொழிலாளர் நலவாரிய  செயலாளர் யாஸ்மின் பேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:- தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறு வனங்கள், மலைத் தோட்ட நிறுவ னங்கள், ஐந்தும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் பணி புரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், தொழிலாளியின் பங்காக ரூ.20, ஒவ்வொரு தொழிலாளிக்கும் வேலை யளிப்பவர் பங்காக ரூ.40-ம் சேர்த்து  ஆக மொத்தம் ரூ.60 வீதம் தொழிலாளர் நலநிதி பங்கு தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும். வருடத்தில் 30 நாட்களுக்கு மேல்  பணிபுரிந்த அனைத்து வகை தொழி லாளர்களுக்கும் தொழிலாளர் நலநிதி  செலுத்த, வேலையளிப்பவர் கடமைப் பட்டவராவார். எனவே 2022 ஆம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதித் தொகையினை 31.1.2023 ஆம் தேதிக்கு முன்பாக செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம், டி.எம்.எஸ்.  வளாகம், தேனாம்பேட்டை, சென்னை -600 006 என்ற முகவரிக்கு வங்கி  வரைவோலை அல்லது காசோலையாக  அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சேலம் இரும்பு உருக்காலை: அழகிரி எச்சரிக்கை

சென்னை,டிச.23- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- சேலம் உருக்காலையைத் தனியாருக்கு விற்பனை செய்வதில் ஒன்றிய அரசு உறுதியாக இருப்பதாக அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அந்த ஆலைக்குச் சொந்தமான 4,000 ஏக்கர் நிலங்களைத் தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடி அரசின் ஒரே நோக்கம்  என்பது அவர்கள் காட்டும் அவசரத்தி லிருந்து தெளிவாகத் தெரிகிறது. சேலம் இரும்பாலைக்குப் புத்துயி ரூட்டுவதற்கு பதிலாக அதை விற்பனை  செய்ய ஒன்றிய அரசு முயல்வது  தமிழகத்துக்குச் செய்யும் அநீதியா கும். தனியாருக்கு விற்றால் அதில்  பணியாற்றும் ஊழியர்கள் நிலையை சற்றும் யோசிக்காத மோடி அரசுக்கு எதிராக தமிழகமே ஓரணியில் திரண்டு போராடும். இவ்வாறு அவர் தெரிவித்திருக் கிறார்.

திருத்தணியில்  ரூ.1 கோடி வசூல்

திருத்தணி,டிச.23- திருத்தணி சுப்பிர மணிய சுவாமி கோவில்  உண்டியல்கள் மலைக் கோவில் மண்டபத்தில், துணை ஆணையர் விஜயா  முன்னிலையில் எண்ணப் பட்டது. கடந்த 41 நாட்களில் மட்டும் ரூ.1 கோடியே 4 லட்சத்து 79 ஆயிரம் ரொக்கப் பண மும், 708 கிராம் தங்கமும், 19 கிலோ வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப் பட்டுள்ளது.

கூட்டுறவு சங்க தேர்தலை  ஏப்ரல் மாதம் நடத்த தமிழக அரசு முடிவு

சென்னை,டிச.23- தமிழ்நாடு முழுவதும் அடுத்த ஆண்டு ஏப்ரலில் கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் கடந்த 2018 ஆம் ஆண்டு  நடைபெற்றது. இதில் அடுத்த ஆண்டு ஏப்ரல்  மாதத்துடன் 5 ஆண்டுகள் முடிவடைய உள்ள 4,600 கூட்டுறவு சங்கங்களுக்கு  தேர்தல் நடத்த கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆணையம் முடிவு  செய்துள்ளது. இந்நிலை யில் கூட்டுறவு சங்கங்களின்  பதிவாளர் அனைத்து  மண்டல பதிவாளர்களுக் கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்த ஏது வாக 5 ஆண்டுகள் பதவிக் காலம் நிறைவடையும் கூட்டுறவு சங்கங்களின் பட்டியலை 28 ஆம் தேதிக் குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத் தியுள்ளார். இதன்படி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல்  தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரவணா நகைக் கடை:  ரூ.66.93 கோடி சொத்துகள் முடக்கம்

சென்னை,டிச.23- சென்னையில் இயங்கி வந்த சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ்  நிறுவனம் கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியன் வங்கியில் ரூ.235 கோடி கடன் பெற்றது. இந்த கடனை  முறைகேடாக பெற்று சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்து மோசடி செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் மீது வங்கியின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி கே.எல். குப்தா சிபிஐயில் புகார் அளித்தார்.  அதன்பேரில் நிறுவனத்தின் பங்கு தாரர்கள் 2 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டது. சட்டவிரோத பணப்பரி மாற்றம்  விவகாரம் என்பதால், அமலாக்கத் துறை சார்பிலும் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, அந்நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.234.75 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை கடந்த ஜூலை மாதம் அமலாக்கத்துறை முடக்கியது. இந்நிலையில், தற்போது ஒரு தனியார் வங்கியை ஏமாற்றி சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனம் மீது  எழுந்த புகாரையடுத்து, அந்நிறு வனத்துக்கு சொந்தமான சென்னை யிலுள்ள ரூ.66.93 கோடி மதிப்பு  அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

ஷ்ரத்தா வாக்கரின் தந்தையுடன் வந்த பாஜக தலைவர்

புதுதில்லி, டிச. 23 - காதலன் அப்தாப் அமீனால் 35 துண்டுகளாக வெட்டி கொல்லப்பட்ட ஷ்ரத்தா வாக்கரின் தந்தை விகாஸ் வாக்கர் தில்லி காவல் தலைமையகத்தில் வெள்ளியன்று ஆஜரானார். அவருடன் பாஜக தலைவர் கிரித் சோமையாவும் ஆஜரானார்.