சென்னை, ஏப். 11- தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள், சட்டத் துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம், புதுக் கோட்டை, தூத்துக்குடி, சைதாப் பேட்டை, அரியலூர் ஆகிய இடங்க ளில் வழக்கறிஞர்கள் கொலை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது போல் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், கச்சத்தீவை மீட்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்றும் கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ரகுபதி, கச்சத்தீவு விவகாரத்தில் நிச்ச யமாக நடவடிக்கை எடுக்கும் வகை யில் வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கு நடத்தப்படும் என்றார். வழக்க றிஞர் பாதுகாப்பு சட்டத்தைப் பொறுத்தவரை, ராஜஸ்தானில் உள்ள நிலைமை வேறு. இது தொடர்பாக ஒன்றிய அரசு சட்டம் இயற்றவுள்ளது. ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், தில்லி ஆகிய மாநிலங்களில் கொண்டுவரப்பட்ட சட்டங்களும் வரைவு நிலையில்தான் உள்ளன. வழக்கறிஞர்கள் நலனைப் பொறுத்தவரை, தகுந்த நேரத்தில் தகுந்த சட்டத்தை அரசு இயற்றும் என்றும் அவர் தெரிவித்தார். அதிமுக உறுப்பினர் இசக்கி சுப்பையா, மக்கள் அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அனைத்து சட்டப் புத்தகங்களையும் தமிழில் கொண்டு வரவேண்டும் என்றார்.
கைதிகள் விடுதலை
மனிதநேய மக்கள் கட்சி தலை வர் ஜவாஹிருல்லா பேசுகையில், 37 இஸ்லாமியர்கள் ஆயுள் சிறை வாசிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை முன்கூட்டியே விடு தலை செய்யாதது இஸ்லாமியர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தி யுள்ளது என்றார். இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர், அண்ணாவின் 113ஆவது பிறந்த நாளையொட்டி 505 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப் பட்டனர். நீங்கள் கேட்டுக்கொண்ட தின் அடிப்படையில் அதற்காக ஆதிநாதன் கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்டவர்க ளில் 15 பேர் விடுதலை பெற வாய்ப்பு உள்ளது என்றார். இவ்வாறு விவாதம் நடை பெற்றது.