states

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற தீர்ப்புக்கு பயிற்சி மாணவர்கள் வரவேற்பு

சென்னை, ஜூன் 29- “அனைத்து இந்துக்கள் அர்ச்சகர் நியமனம் தொடர்பான சென்னை உயர்  நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கி றோம்”என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின்  தலைவர் வா.ரங்கநாதன் விடுத்திருக் கும் அறிக்கையில், ``ஆதிதிராவிடர் முதல் ஸ்மார்த்த பிராமணர் வரையி லான அனைத்து சாதியினரும் முறை யாக படித்து, தங்களைத் தகுதிப்படுத் திக் கொண்டால் அர்ச்சகர் ஆகலாம். சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, அனைத்து இந்துக்களின் அர்ச்சகர் நியமனத்தில் முன்னேற்றத் தைக் காட்டும் தீர்ப்பாகும். முறையான அரசியல் சட்டக் கண்ணோட்டத்தோடு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை சரியான முறையில் இந்தத் தீர்ப்பில்  அணுகியிருக்கிறார். மிக நீண்டகால மாக தெளிவாக்கப்படாத ஆகமத்தின் இரு கூறுகளை நீதிபதி ஆனந்த் வெங்க டேஷ் தெளிவுபடுத்தி இருக்கிறார். குறிப்பாக, ஆகமத்தின் இரு பகுதி களில் ஒன்றான பூஜை, சடங்குகள் தொடர்பான விஷயங்களில் அரசு தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை உறுதி செய்யும் நீதிபதி, ஆகமத்தின் மற்றொரு பகுதியென பிராமண அர்ச்சகர்கள் கூறும் அர்ச்சகர் நியமனம் குறித்து தெளிவுபடுத்தியிருக்கிறார்.

அர்ச்சகர் நியமனம் என்பது மதச்சார் பற்ற நடவடிக்கை, அரசு, கோயில் நிர்வாகம், அறநிலையத்துறை ஆகியவை சாதி வேறுபாடின்றி அர்ச்சகர் நியமனம் மேற்கொள்ளலாம். விண்ணப்பிக்கும் அர்ச்சகர்கள், சம்பந்தப்பட்ட கோவில் ஆகமத்தை படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது மட்டுமே தகுதி என்று நீதிபதி தெளிவுபடுத்தியிருக்கிறார். உச்ச நீதிமன்றத்தில் சேசம்மாள், நாராயண தீட்சிதலு, ஆதித்யன், ஆதி சைவ சிவாச்சாரியார்கள் உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் தீர்ப்புக ளும் முறையாக ஆராய்ந்து, சரியான  பொருளில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக் கிறது.  ஆகமத்தில் குறிப்பிட்ட சாதியினர் மட்டும் தான் கருவறையில் பூஜை  செய்ய முடியும் என்று சொல்லியிருந் தாலும் அது செல்லாது என்று தீர்ப்பு விளக்கம் அர்ச்சகர் நியமனத்தில் முக்கியமானது. பரம்பரை வழி அர்ச்சகர் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் அடிப்படையில் நிராகரித்த நீதிபதி, சாதியும் தகுதியல்ல என்பதை  கூறுகிறார். எளிமையாகச் சொன்னால், ஆதிதிராவிடர், அருந்ததியர் முதல் ஸ்மார்த்த பிராமணர் வரையிலான சாதியினர் எவரும் முறையாக ஆகமம் கற்றுத் தேர்ந்தால் அர்ச்சகர் ஆகலாம் என்பது தீர்ப்பின் சாரம். கோயில்களில் சமத்துவ உரிமைக்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக  போராட வேண்டியிருக்கிறது. அர்ச்சகர்  நியமனங்கள் தமிழ்நாட்டின் பெருங் கோயில்கள் உடனே மேற்கொள்ளப் பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருக் கிறார்.