states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கால்நடை இளநிலை  மருத்துவப் படிப்புகளுக் க்கான விண்ணப்பப் பதிவு வெள்ளியன்று நிறைவு பெற்ற நிலை யில், 760 இடங்களுக்கு 22,525 பேர் விண்ணப் பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 30% அதிகம் ஆகும்.

தில்லி அரசு அலுவலர் களை முதல்வர் கட்டுப் படுத்துவதற்கு எதிராக  ஒன்றிய அரசு நிறை வேற்றிய அவசர சட்டத் திற்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தில்லி அரசு மேல்முறையீடு செய்தது. 

உலகக்கோப்பை கிரிக் கெட் தொடருக்காக மைதான உள்கட்ட மைப்பை மேம்படுத்த ஒவ்வொரு மைதானத் திற்கும் தலா ரூ.50 கோடி இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மை யானது என்றால் மொத்தம் 10 மைதா னங்களில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ள நிலை யில், ரூ.500 கோடி செல விடப்படவுள்ளது.

வரும் ஜூலை 4 அன்று நடைபெறும் ஷாங்காய்  ஒத்துழைப்பு கூட்ட மைப்பு உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் காணொலி காட்சி வழி யே பங்கேற்க உள்ளார் என அந்நாட்டு வெளி யுறவு அமைச்சகம் தெரி வித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் குறித்து இலவச திறன் பயிற்சி அளிக்க மைக்ரோசாப்ட் நிறு வனம் திட்டமிட்டுள்ளது.

சட்ட விரோதமாக செயல்படும் குவாரி களின் உரிமத்தை ரத்து செய்யப்பட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி யுள்ளார்.

தில்லியில் திறந்த வெளி  பூங்கா ஒன்றில் 16 வயது சிறுமியை 4 பேர் கொண்ட கும்பல்  பாலியல் பலாத்காரம் செய்த கொடூரமான சம்ப வம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடு பட்ட 4 பேரில் சிறுவன் ஒருவன் உள்ளதாக தில்லி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மெட்ரோவில் நபருக்கு 2 சீல் வைக்கப்பட்ட மது பாட்டில்களை எடுத்துச் செல்லலாம் எனவும்,  பயணிகளுக்கு தொந்த ரவு ஏற்படும் வகையில் மதுபோதையில் அநாக ரீகமாக நடந்து கொண்டால், அவர்கள் மீது சட்ட விதிகள் கீழ்  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இரட்டை குழப்பமான அறிவிப்பை வெளி யிட்டுள்ளது தில்லி மெட்ரோ நிர்வாகம்.

ஒடிசா மாநிலம் கேந்திபாரா பகுதியில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 3 பேரை முதலை  கொன்றுள்ளது. நீர்நிலைகளுக்கு ஓரமாக வயல்வெளிகளில் கூட முதலை நடமாடுவதால் கேந்திரபாரா பகுதி மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி உள்ளனர்.

உலகச் செய்திகள்

புதிதாக 19 எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் திட்டங்களை ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வே அறிவித்துள்ளது. உக்ரைன் நெருக்கடியால் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் பெரும் லாபம் கிடைப்பதால் நார்வே அரசு இந்த முடிவுக்கு வந்திருக்கிறது. தங்களது இந்தத் திட்டங்கள் ஐரோப்பியக் கண்டத்தின் எரிசக்தி பாதுகாப்புக்கு பெரும் பங்களிப்பைச் செலுத்தும் என்று நார்வேயின் எரிசக்தித் துறை அமைச்சர் டார்ஜே ஆஸ்லாண்டு தெரிவித்துள்ளார். 

ஜூலை 6 ஆம் தேதியன்று சிறிய உச்சிமாநாடு ஒன்றிற்கு அமெரிக்க ராணுவக்கூட்டணியான நேட்டோவின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் ஏற்பாடு செய்திருக்கிறார். நேட்டோவில் உறுப்பு நாடாக ஸ்வீடன் சேருவதற்கு துருக்கி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது குறித்து விவாதிப்பதற்காகக் கூட்டப்பட்டுள்ள இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்குமா துருக்கி, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

வயதைக் கணக்கிடும் முறையை தென் கொரியா மாற்றியுள்ளதால் பலரின் வயது குறைந்திருக்கிறது. பிறக்கும்போதே ஒரு  வயது என்று  கணக்கிடும் முறை தென் கொரியாவில் இருந்தது. அதோடு, அதற்கடுத்த ஜனவரி 1 ஆம் தேதியே இரண்டாவது வயதும் நிரம்பிவிடும். அனைவருக்குமே வயதுக்கணக்கு பிறந்த நாள்படி இல்லாமல் ஜனவரி 1ல்  இருந்தே கணக்கிடப்பட்டது. தற்போது அந்த முறை  மாற்றப்பட்டு பிறந்து ஓராண்டு கழித்து ஒரு வயது  என்றும், அவரவர் பிறந்த நாளன்றே அடுத்த வயது கணக்கிடப்படும் முறையும் கொண்டு வரப்பட்டிருக்கிறது.