states

அரிகொம்பனை கேரளத்திடம் ஒப்படைக்கக் கோரி நீதிமன்றத்தில் முறையீடு

மதுரை, ஜூன் 5-   அரிகொம்பன் யானையால் ஏற்பட்ட சேதத்திற்கு நிவாரணம் வழங்கவும், யானையை கேரளா அரசிடம் ஒப்படைக்கவும், கேரளா அரசு ஏற்க மறுக்கும் பட்சத்தில் வன விலங்கு சட்டத்தின்படி மனித உயிர் மற்றும் பொருள்களுக்கு ஆபத்தை விளைவிப்பதால் யானையை வேட்டையாட உத்தரவிட கோரி தேனியைச் சேர்ந்த கோபால் தொடர்ந்த வழக்கை  திங்களன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சுப்பிர மணியன், விக்டோரியா கௌரி அமர்வு, “ தமிழ்நாடு அரசு தரப்பில், அரிக்கொம்பன் யானையால் ஏற்பட்ட சேதம் கணக்கீடு செய்யப்பட்டு வரு கிறது. அரிக்கொம்பன் யானையை களக்காடு முண்டந்துறை அடர்ந்த காட்டுப் பகுதியில் விடுவதற்கான நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தர விட்டனர். இந்த நிலையில் பிடிபட்ட அரி கொம்பன் யானையை கேரள வனத் துறையில்  ஒப்படைக்க வேண்டும். கள்ளகாடு முண்டத்துறை பகுதியில் இறக்கக் கூடாது இதற்குத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கேரள மாநிலத்தைச்  சேர்ந்த ஜோசப் என்பவர் சார்பில் நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்களன்று வழக்கறிஞர்கள் முறை யிட்டனர்.  முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரி வித்தனர்.