states

img

வலதுசாரி எதிர்ப்பு மாநாட்டை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடத்த வேண்டும்

மதுரை, ஜூன் 11-  வலதுசாரி எதிர்ப்பு மாநாட்டை தமிழகத்தின் அனைத்துப் பகுதி களிலும் நடத்த வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் சு.வெங்கடேசன் எம்.பி., கூறினார். மக்கள் விடுதலைக் கட்சி சார்பில் வலதுசாரி எதிர்ப்பு அரசியல் மாநாடு ஜூன் 11 சனிக்கிழமையன்று மதுரை விரகனூர் சி. ஆர். மகாலில் கட்சியின் நிறுவனத் தலைவர் -முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சு.க.முருகவேல் ராஜன் தலைமை யில் நடைபெற்றது. மாநிலத் தலை வர் அபி சுரேஷ் மற்றும் மாநில நிர்வா கிகள் முன்னிலை வகித்தார்கள்,  மாநில பொதுச் செயலாளர் இரவி வரவேற்று பேசினார். மாநாட்டில் திமுக விவசாய அணி மாநிலச் செயலாளர்-தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ. கே. எஸ். விஜயன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  ஜவாஹிருல்லா எம்எல்ஏ, ஆதித்தமிழர் பேரவை நிறு வனத் தலைவர் அதியமான்,

திரா விடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அகில இந்திய பார்வர்டு பிளாக் தமிழ் மாநில பொதுச் செயலாளர் பி. வி. கதிர வன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் மதுரை தெற்கு மாவட்ட செய லாளர் இன் குலாப், மாநில துணைச் செயலாளர் கார்த்திக், நீதிக்கான மக்கள் இயக்கம் சிபிஐ (எம்எல்) மாநில தலைவர் சிம்சன் உள்ளிட் டோர் உரையாற்றினர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மாநில செயற்குழு உறுப்பினரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் கலந்து கொண்டு உரையாற்றி னார்.  அவர் பேசியதாவது:  இன்றைக்கு இந்தியாவில் வலதுசாரி எதிர்ப்பு மாநாட்டை துணிந்து நடத்துகிற தைரியம் தமி ழகத்தில் மட்டும் தான் உண்டு. பார்ப் பனிய எதிர்ப்பிலிருந்து சமூக அடித் தட்டு மக்களுக்காக நடத்தப்படும் அரசியல் வல்லமை இன்றைக்கு  தமிழகத்திற்கு மட்டுமே உண்டு. இந்த வலதுசாரி எதிர்ப்பு மாநாடு என்ற சொல்லை சொல்லுவதற்கு கூட ஒரு சுயமரியாதை வேண்டும். அந்த சுயமரியாதை இங்குள்ள தலைவர்களுக்கு உள்ளது. இந்த அடிப்படையில்தான் இன்றைக்கு வலதுசாரி எதிர்ப்பு மாநாட்டை நடத்த வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

புதிய நாடாளுமன்றத்தில் காந்தி படம் இல்லை

எதிர்க்கட்சிகள் எல்லாம்  புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்துவிட்டார்கள். நாடாளு மன்ற திறப்பு விழா முடிந்து இரண்டு தினங்களுக்கு பின் நான்  நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்திற்காக அங்கு சென்றேன். புதிய நாடாளுமன்றத்திற்குள் எதுவெல்லாம் வைக்கக்கூடாது, எதுவெல்லாம் இல்லை என்று ஒரு  மிகப்பெரிய பேட்டி கொடுத்திருந் தேன். அதற்கு மதுரையில் பாஜக வின் தலைவர் சீனிவாசன் ஒரு பேட்டி யினை கொடுத்திருக்கிறார். என்னு டைய கேள்வி ஒன்றுதான், நாடாளு மன்றத்தில் அரசியல் சாசனத்தில் உள்ள 22 படங்களில் 16 படத்தை காட்சிப்படுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளார். அந்த பதினாறு படத்தில் அண்ணல் காந்தி  இல்லை,  அண்ணல் அம்பேத்கர், மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகி யோர்  படங்கள்  அதில் இல்லை. இதைவிட இந்த தேசத்திற்கு மோடி செய்த துரோகம் வேறு என்னவாக இருக்க முடியும்? அதேபோல் மாவீரன் திப்பு சுல்தான் , அக்பர்  படமும் அதில் இல்லை. இப்படி விடுதலை போராட்டத்திற்காக பாடுபட்ட ஒருவர் படமும் அங்கு காட்சிப்படுத்தப்படவில்லை. நாட்டில் நடந்த விடுதலைப் போராட்டத் திற்கான ஒரு படம் கூட இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இல்லை. ஆனால் பாற்கடலை கடைந்த அசுரர்களும் தேவர்களும் இருக்கும் வடிவில் சிலை வடித் துள்ளார்கள். அப்படி விடுதலை போராட்டத்தைப் பற்றி காட்சி இருந்தால் உங்களுக்கு என்ன  ஞாபகம் வரும். வெள்ளைக்காரர் களை எதிர்த்து போராடிய விடு தலை போராட்ட வீரர்கள் தான் ஞாப கத்திற்கு வருவார்கள்.

இந்திய விடு தலைக்காக ஒவ்வொரு சமூகத்தின ரும் எவ்வளவு பாடுபட்டார்கள் என்பது தான் ஞாபகத்திற்கு வரும். அப்படி ஞாபகம் வரும் போது இன்னொன்றும் ஞாபகத்திற்கு வரும். சுதந்திரப் போராட்டத்தில் ஈடு பட்டவர்களை காட்டிக் கொடுத்த வர்கள் ஞாபகத்திற்கு வரு வார்கள். அதனால்தான் மோடி நாடா ளுமன்றத்தில் சுதந்திரப் போராட்டத் திற்கான வரலாற்று படங்களை வைக்கவில்லை. அப்படி வைக்கப் பட்டால் ஆர்எஸ்எஸ்ஸின்  துரோக வரலாறு  மக்களுக்கு தெரிந்து விடும். அதனால் தான் மோடி  புதிய நாடாளு மன்றத்தில் சுதந்திரப் போராட்ட வரலாறுகளை வைக்கவில்லை. விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்களின் வர லாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்வதுதான் நம்முடைய கடமை.  எதையெல்லாம் மக்களுக்கு நினைவூட்டக்கூடாது என்று மோடி நினைத்தாரோ அதையெல்லாம் மக்களுக்கு நினைவுபடுத்துவது தான் நம்முடைய வேலை. வலதுசாரி எதிர்ப்பு மாநாட்டை மதுரையில் மட்டுமல்ல தமிழகத்தில் எல்லா பகுதிகளிலும் நடத்த வேண்டும்.  சு. க. முருகவேல்ராஜன்  இன்றைக்கு இந்த வலதுசாரி எதிர்ப்பு மாநாட்டில் 12 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார். அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார். 

ஒன்றுகூடி செயல்படுவோம்: சு.க.முருகவேல் ராஜன் 

மக்கள் விடுதலை கட்சி நிறுவன தலைவர் சு. க. முருகவேல் ராஜன் நிறைவுரையாற்றினார்.  அவர் பேசுகையில், தேவேந்திர குல சமூகத்தில் இடதுசாரி சிந்தனை உள்ள இளைஞர்களை வலதுசாரி அரசியலுக்கு எதிராக அணி திரட்டி கொண்டிருக்கின்றோம். இன்றைக்கு பல சமூக செயற்பாட்டா ளர்கள், அரசியல் கட்சி தலைவர் களை வலதுசாரி சிந்தனைக்கு எதி ராக அணி திரட்டக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மார்க்சிய தத்துவத்தை வளர்க்க வேண்டும், சாதியத்தை தகர்க்க வேண்டும். அதுதான் என்னுடைய கொள்கை யாக வைத்துள்ளேன். தொடர்ந்து இந்த வலதுசாரி சிந்தனைக்கு எதிராக, சாதிய அடக்குமுறைக்கு எதிராக இளைஞர்களை அணி திரட்ட வேண்டும் என்று நினைக் கிறேன். சாதிய அடக்கு முறையில்  உள்ள ஒன்றரைக் கோடி மக்களை  அணிதிரட்ட வேண்டும் என்றுதான் இன்றைக்கு நாங்கள் உங்களோடு அணிதிரண்டு நிற்கின்றோம். எங்களுடைய கொள்கை லட்சியம் ஒரு நாளும் தோற்காது. ஏனென்றால் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் போன்றோர் கொள்கையின் பின்னால் நிற்கின்றோம். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் பட்டியலின,  பழங்குடியின மக்கள் பாதிக்கப்படுவார்கள், சமூகநீதி பாதிக்கப்படும்.   ஆர்எஸ்எஸ் சங்பரி வார் அமைப்புகளுக்கு எதிராக நாம் ஒன்றுகூடி செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.