states

சட்டப்பேரவை துளிகள்...

இந்தி எதிர்ப்பு போராட்டம்:  இன்று விவாதம்

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை யிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு, குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ள தனது அறிக்கையில், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும். ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை இடம் பெறச் செய்ய வேண்டுமென்றும் பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதனையடுத்து, ஒன்றிய அரசின் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் இந்தி மொழியே பயிற்று மொழியாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு திமுக,  காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கான ஒரு அறிக்கை தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் செவ்வா யன்று (அக்.18) கொண்டுவரப்படுகிறது. இதன் மீது விவாதம் நடத்தப்படுகிறது  என்று செய்தியாளர்களிடம் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

2 நாட்கள் மட்டுமே பேரவைக் கூட்டம்!

தமிழ்நாடு சட்டப்பேரவை அக்.17 அன்று காலை 10 மணிக்கு கூடியது. மறைந்த உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒத்தி வைக்கப் பட்டது. அதன்பிறகு, அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பேரவைத் தலைவர் மு.அப்பாவு,“சட்டப்பேரவை அக்.18 அன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடுகிறது. அன்றைய தினம் கூடுதல் செலவினத்திற்கான மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதன் மீது விவாதமும் வாக்கெடுப்பும் நடத்தப்படும். புதன்கிழமை (அக்.19) அன்று கூடுதல் செலவினத் திற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு அமைச்சர் பதில் அளிக்கிறார். இரண்டு நாள் கூட்டத்தில், ஆறுமுகசாமி, அருணா ஜெகதீசன் குழுக்கள் அளித்துள்ள அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படும்” என்றார்.

துப்பாக்கி சூடு - ஜெ. மரணம்...

ஆறுமுகசாமி அறிக்கை, அருணா ஜெகதீசன் ஆணை யத்தின் அறிக்கைகள் சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப் படுகிறது. முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை அமைத்து  2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி தமிழக அரசு  உத்தரவிட்டது. மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.  பிறகு, அவகாசம் 14வது முறையாக நீட்டிக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆணையத்தின் அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதேபோல், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்த மாக மூடக்கோரி நடந்த போராட்டத்தின் போது அதிமுக ஆட்சியின்போது நடந்த துப்பக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக்குழு 3000 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை கடந்த மே மாதம் 18 ஆம்  தேதி முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த இரண்டு  அறிக்கைகள் குறித்தும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில்  விவாதிக்கப்பட்டது. ஆனாலும், எந்த விபரமும் வெளியாகவில்லை. இந்த நிலையில், இரண்டு ஆணையமும் அளித்த பரிந் துரைகள் என்ன? என்ன? அதன் மீது அரசு மேற்கொண் டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து சட்டப் ்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படுவதை பேரவைத் தலைவர் மு.அப்பாவு உறுதிசெய்தார்.

அலுவல் ஆய்வுக்குழு நீட்டிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு 2021ஆம் ஆண்டு ஜூன்  17 ஆம் தேதி புதிதாக அமைக்கப்பட்டது. பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையிலான அந்த  குழுவின் உறுப்பினர்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, இ.பெரியசாமி, க.பொன்முடி, பேரவைத் துணைத் தலைவர்  கு.பிச்சாண்டி, அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன்,  எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி.வேலுமணி (அதிமுக), க.செல்வ பெருந்தகை (காங்.) ஜி.கே.மணி (பாமக), விபி.நாகைமாலி  (சிபிஎம்) டி. இராமச்சந்திரன் (சிபிஐ), ம.சிந்தனை செல்வன் (விசிக), நயினார் நாகேந்திரன் (பாஜக) ஆகியோருடன் சட்டப் பேரவை செயலாளர் கி.சீனிவாசன், கூடுதல் செயலாளர் பா.சுப்பிரமணியம், துணைச் செயலாளர் கோ.கணேஷ் ஆகி யோரது பதவிக்காலம் அக்.17 அன்று நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரைக்கும்  நீடிக்கப்பட்டுள்ளது. (இதில் ஓ.பன்னீர்செல்வம் எதிர்க் கட்சி துணைத் தலைவர் என்று குறிப்பிடவில்லை)

அதிமுக புறக்கணிப்பு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் அக்.17 அன்று காலை 10 மணிக்கு  கூடியது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அவருடன்  வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், உசிலம்பட்டி அய்யப்பன் ஆகிய எம்.எல்.ஏ.க்களும் அவரவர் இருக்கையில் அமர்ந்தனர். ஆனால் எடப்பாடி தலை மையிலான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு வரவில்லை. அதன் கூட்டணி கட்சியான புரட்சி பாரதம் கட்சி எம்எல்ஏவும் கூட்டத்தை புறக்கணித்தார்.

ஓ.பி.எஸ். இருக்கை விவகாரம்

அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் முடிந்த பிறகு, பேரவைத்  தலைவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில் வருமாறு:- அலுவல் ஆய்வுக் குழு உறுப்பினராக இருப்பதால் இன்றைய (அக்.17) ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றார். சட்டப்பேரவை இருக்கை, எதிர்க் கட்சி துணைத் தலைவர் பதவி விவகாரம் தொடர்பாக ஒரு கடிதம் அல்ல 6 கடிதம் தந்துள்ளனர். இதற்கெல்லாம் சட்டமன்றத்தில் தான் பதில்  கூறமுடியும். பொது வெளியில் பேட்டிகொடுப்பது பொருத்த மாக இருக்காது.  யாரும் கேள்வி எழுப்பாமல் நானாக எப்படி பதில் சொல்ல  முடியும்? அதிமுகவினர் பேரவைக்கு வந்து கேள்வி எழுப்ப  உரிமை உள்ளது. மக்கள் பிரச்சனையை பேசத்தான் சட்டமன்றம். எனவே, அங்கு எனது பதிலை தெரிவிப்பேன்.  இவ்வாறு தெரிவித்தார்.