கும்பகோணம், டிச.13- தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் அருகே உள்ள திரு மண்டங்குடி திருஆரூரான் சர்க் கரை ஆலை நிர்வாகம் மோசடியாக விவசாயிகளின் பெயரில் வங்கியில் வாங் கிய கடனை திரும்ப செலுத்தி, விவ சாயிகள் பெயரில் உள்ள கடன் களை நீக்க வேண்டும். தமிழக அரசே இந்த ஆலையை நிர்வ கித்து, விவசாயிகளுக்கும் தொழி லாளர்களுக்கும் உறுதுணை யாக இருக்க வேண்டும். இல்லை யெனில், கரும்பு விவசாயிகளிடமே நிர்வாகத்தை ஒப்படைத்து ஆலை யை திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து விவ சாயிகள் போராடி வருகின்றனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயி கள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கம் உள்ளிட்ட பல் வேறு இயக்கங்கள் ஆதரவு தெரி வித்து வருகின்றன.
பேச்சுவார்த்தை தோல்வி
இந்நிலையில் 13 ஆவது நாளாக திங்களன்று நடந்த போராட்டத் திற்கு பிறகு மாலையில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் தலைமையில், கும்ப கோணம் கோட்டாட்சியர் அலுவல கத்தில் கரும்பு விவசாயிகளை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். பேச்சுவார்த்தையில் மாவட்ட ஆட்சியர், கும்பகோணம் கோட் டாட்சியர், கடன் கொடுத்த வங்கி அதிகாரிகள், தற்போது ஆலை யை வாங்கியுள்ள கால்ஸ்டிஸ்ல ரிஸ் நிறுவன அதிகாரிகள் விவ சாயிகளின் கோரிக்கைகளை ஏற்கா ததால், கரும்பு விவசாயிகள் வெளி நடப்பு செய்து எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். இத னால் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில், கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் தங்க.காசிநாதன், திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் நாக.முருகேசன், ராஜேந்திரன், சரபோஜி, செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செவ்வாயன்று 14 ஆவது நாளாக மீண்டும் திருமண்டங்குடியில் போராட்டம் நடைபெற்றது.