சென்னை, மே 31 - பிரதமர் மோடி பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பாஜக-வினர் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணா மலையும் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “நம்பிக்கையின்மையிலிருந்து நம்பிக்கையை நோக்கி, இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி, பறையாவில் இருந்து விஷ்வ குருவாக... (From a pariah to a ViswaGuru) 8 ஆண்டு களை நிறைவு செய்துள்ளார், சமூ கத்தின் ஒவ்வொரு பிரிவையும் அவர் மாற்றி வருகிறார்” என்று பதிவிட்டுள் ளார். இந்நிலையில்தான், அண்ணாமலை குறிப்பிட்ட பறையர் என்பது பட்டியல் சாதியின் பெயர் என்பதால், பறையர் பிரிவினை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டுள்ள அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என சமூக வலை தளங்களில் கண்டனங்கள் எழுந்துள் ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னி யரசுவும் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்ததுடன், “வர்ணாசிரமத்தை ஏற்காத பறையர் குடியை ஒதுக்கி வைத்ததே இந்துத்துவம்தான். அப்படிப்பட்ட மூத்த பறையர் குடியை இழிவுபடுத்தும் சாதிய மனநோயாளி அண்ணாமலை (@annamalai_k) மன்னிப்பு கேட்க வேண்டும் என டுவிட்டரில் குறிப்பிட்டி ருந்தார். ஆனால், “கத்தியை விட நம் புத்தி கூர்மை என்று சொல்லுவார்கள். உங்களுக்காக ஒரு ஆங்கில - தமிழ் அகராதி வாங்கி அனுப்புகிறேன், நான் பதிவிட்ட வார்த்தையின் அர்த்தத்தை பார்க்கவும். வாழ்க வளமுடன்!” என்று பதிவிட்ட அண்ணாமலை, “மேக்மில்லன் சொல் அகராதிப்படி, ‘பறையா’ என்ற சொல்லின் பொருள், ஒரு நபராலோ, அமைப்பாலோ, நாட்டாலோ வெறுக்கப்படுபவர், என்று மட்டுமே அர்த்தம்” என்று தனது கருத்தை மறுபடியும் நியாயப்படுத்தி னார்.
இதையடுத்து, ‘பறையா’ என்பது இழிவுபடுத்த (offensive) பயன்படுத்தப் படும் பெயர் என்று தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. மேலும், பறையா எனும் சொல் அவமதிக்கும் சொல்லாக தென்னி ந்தியாவில் பார்க்கப்படுகிறது என்று ஆக்ஸ்போர்ட் அகராதி குறிப்பிடுகிறது. நீக்ரோ என்று அமெரிக்காவில் பயன்படுத்தினால் அது அவமதிப்பு. பறையாவும் அப்படித்தான்” என்று மீண்டும் உறுதிபடத் தெரிவித்த வன்னி யரசு, மேலும், “பறையா என்பது வர லாற்று அடிப்படையில் தென்னிந்தியா வில் உள்ள தொல்குடி பறையர் சமூ கத்தை சேர்ந்தோரை குறிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. பறையா என்று சொன்னால் தாழ்த்தப்பட்டோர் வன்கொ டுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய லாம் என்பது சட்டம்” என பதிலடி கொடுத்துள்ளார். இதேபோல, பறையா (Pariah) என்ற ஆங்கிலச் சொல்லின் மூலமே, பறையர் எனும் பட்டியல் வகுப்பினரை இழிவுபடுத்தும் சொல்லிலிருந்து எடுக்கப்பட்டவைதான் என்பதால், பாஜக தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு முன்பு பாஜக எம்.பி. சுப்பிரமணியசாமியும் ஒருமுறை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தின் தலைவர் பிரபாகரனை ‘சர்வதேச பறையா’ (International Paraiya) என குறிப்பிட்டு சர்ச்சையில் சிக்கினார். அவர் மீது பட்டியல் வகுப்பினர் - பழங்குடி யினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. வன்னியரசு இதனை யும் சுட்டிக்காட்டி, அண்ணாமலையை எச்சரித்துள்ளார்.