states

ரயில் பெட்டிகள் பிரிந்த சம்பவம்: விசாரணைக்கு உத்தரவு

சென்னை,நவ.6- சென்னை சென்ட்ரலிலிருந்து கோவைக்கு சனிக்கிழமையன்று இரவு  10 மணியளவில் சேரன் எக்ஸ்பிரஸ்  புறப்பட்டு சென்றது. எந்திரத்துடன்  சேர்த்து மொத்தம் 23 பெட்டிகள்  இருந்தன. இரவு 11 மணிக்கு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடை வழியாக சென்றது. அப்போது ரயிலின் எஸ்.7  மற்றும் எஸ் 8 ஆகிய 2 பெட்டிகளை இணைக்கும் இரும்பு கொக்கி திடீரென பலத்த சத்தத்துடன் உடைந்தது. இதில் எஸ்.8 பெட்டியுடன் இணைந்து இருந்த 16 பெட்டிகள் தனியாக கழன்று ஓடியது.  ரயில் என்ஜினுடன் சேர்ந்த 7 பெட்டிகள் தனியாக சென்றது. இதனால் ரயிலில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். ரயி லில் இருந்து பயங்கர சத்தம் கேட்டதை உணர்ந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.  இதற்கிடையே தனியாக கழன்று ஓடிய 16 பெட்டிகளும் மெதுவாக 4-வது  நடைமேடையில் வந்து நின்றது. பதட்ட மடைந்த பயணிகள் அலறியடித்து ரயிலி லிருந்து இறங்கினர். இதில் இடிபாடுக ளில் சிக்கி கீழே விழுந்ததில் சில பயணி களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.  ரயில் பெட்டி தனியாக கழன்று  ஓடியது தொடர்பாக ரயில்வே அதிகாரி களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பெரம்பூர் லோகோ பணிமனையிலிருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திருவள்ளூருக்கு விரைந்து வந்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு ரயில்  பெட்டிகள் அனைத்தும் இணைக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து இரவு ஒரு மணிக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் திரு வள்ளூரில் இருந்து தாமதமாக புறப் பட்டு சென்றது. ரயில் பெட்டிகளின் இணைப்பு கொக்கி துண்டானது ஏன்? ஊழியர்கள் சரி  பார்த்தனரா? என்று உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து திருவள்ளூர் ரயில்வே காவல்துறையினரும் விசாரித்து வருகின்றனர்.  இந்நிலையில், இந்த சம்பவம் தொடர் பாக தென்னர ரயில்வே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு இதுகுறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்படும் எனவும் தென்னக  ரயில்வே அறிவித்துள்ளது.அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.