states

மனிதனை மனிதன் சுமக்கும் அநாகரிகத்திற்கு முற்றுப்புள்ளி :கி.வீரமணி

சென்னை, மே 10- தருமபுர ஆதீன பட்டினப் பிரவே சத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, `மனிதனை மனிதன் சுமக்கும் அநாகரி கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்லக்கை தூக்கு பவர்களே விரும்பி தூக்கி சுமக்க முன் வருவதாக கூறப்படும் விளக்கம்  அறிவுப்பூர்வமாகவோ, சட்டப்பூர்வமா கவோ ஏற்கத்தக்கதல்ல. கை ரிக்‌ஷாவை இழுத்தவர்கள் அவர்களா கவே விரும்பித்தான் ஓட்டுகிறோம் எனக் கூறி இன்று இழுத்தால் அதை  சட்டம் அனுமதிக்குமா? மக்களாட்சி யில் சில முடிவுகளை ஆட்சியாளர்கள் மறுபரிசீலனை செய்வது, தவிர்க்க இயலாததுதான். அப்படிப்பட்ட மறு பரிசீலனைகள் அடிப்படை மனித உரிமைகளையும், சமத்துவ நெறிகளையும் பாதிப்பதாக அமைந்து விடக் கூடாது.

மேலும் மன்னார்குடி ஜீயர், அமைச் சர்களையும், எம்.எல்.ஏ.,க்களையும் நடமாட விட முடியாது என்று பகிரங்க மாக சவால் விடுகிறார். தி.மு.க. ஆட்சி யின் முற்போக்கு திட்டங்களை மிரட்டிப் பணிய வைத்து முடக்கும் ஒரு  காவித் திட்டம். இதில் ஓட்டை போட்டுவிட்டால், மற்ற திட்டங்களில் நாம் வெற்றி அடையலாம் என்பதற்கான ஓர் ஒத்திகை என்பதை தமிழ்நாடு அரசுக்கு, முதலமைச்சருக்கு கொள்கை உணர்வு காரணமாக சுட்டிக்காட்டுகிறோம். தவத்திரு குன்றக்குடி அடிகளார் சுட்டிக்காட்டியது போல், பெரும் பான்மை மக்கள் நலனுக்கும், சமூக நீதிக்கும் எதிரானவர்கள்தான் இந்த ஆன்மீக போர்வை போர்த்திய ‘நரியர் கள்’.  மனிதர்களை தூக்கிச் சுமப்பதற்கு ஒரு விசித்திரமான புதிய வாதம் முன்  வைக்கப்படுகிறது. அது, `தூக்குபவர் களே விரும்பி வந்துதான் தூக்கிச் சுமக்க  முன் வருகிறார்களாம், இது  அறிவுப்பூர்வமாகவோ, சட்டப்பூர்வமா கவோ ஏற்கத்தக்கதா? பெண் குழந்தைகளை கள்ளிப்பால் தந்து குடும்பத்தினரோ, தாயோ அழிக்க முன்  வந்தால், சட்டமும், அரசும் அனுமதிக் குமா? மனித உரிமை மலிவான விலைச்  சரக்கா?  இந்த அரசு சிலரைத் ‘திருப்தி’ செய்வதற்காக அளவுக்கு அதி கமாக ‘ஆன்மீகம்‘,‘ஆன்மீகம்‘ என்று ‘தம்பட்டம்‘ அடிக்க வேண்டுமா? ஆன்மீகம் என்ற பெயரில் மனித உரிமை மீறலை அரசு அனுமதிக்கலாமா  என்றும் கி.வீரமணி அந்த அறிக்கை யில் வினவியுள்ளார்.