states

நடித்துக் காட்டுவதற்காக தூக்கு மாட்டிய 11 வயது சிறுவன் பலி

சென்னை, செப். 25- சென்னை அருகே  நடித்துக் காட்டு வதற்காக தூக்கு மாட்டிய 11 வயது சிறுவன் எதிர்பாராத விதமாக உயிரி ழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. சென்னை மாதவரம் அடுத்த புழல்  புத்தகரம் காமராஜர் நகரில் வசிப்பவர் சீனிவாசன். இவருடைய இளைய மகன் கார்த்திக் (11). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் கார்த்திக் மற்றும் அவரது அண்ணன் இரு வரும் தூக்கு போடுவது எப்படி என்று  படுக்கை அறையில் உள்ள மின்விசிறி யில் சேலையால் தூக்கு போட்டு நடித்து  காட்டியுள்ளார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக நடிப்பு நிஜமாகி கார்த்திக் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.  இதையடுத்து அண்ணன்  தன் வீட்டின் அருகே வேலை  செய்திருந்தவரை அழைத்து நடந்ததை கூறியுள்ளார். அதன்பின்னர் அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த புழல் காவல் துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.