states

“2002-ல் ‘அவர்களுக்கு’ தக்க பாடம் கற்பிக்கப்பட்டது”

அகமதாபாத், நவ.26- “2002-இல் ‘அவர்களுக்கு’ பாடம் கற்  பித்த பிறகு, 2002 முதல் 2022 வரை அவர்கள் வன்முறையில் ஈடுபடுவதைத் தவிர்த்து விட்டனர்” என்று ஒன்றிய உள்துறை அமைச்  சர் அமித்ஷா பேசியுள்ளார். சட்டமன்றத் தேர்தலையொட்டி அமித்ஷா குஜராத்தில் பிரச்சாரம் மேற் கொண்டு வருகிறார். வெள்ளியன்று கேடா  மாவட்டத்தின் மஹுதா நகரில் அவர் உரை யாற்றினார்.  அப்போதுதான், “2002-இல் அவர்  களுக்கு ஒரு பாடம் கற்பித்த பிறகு, அவர் கள் 2002 முதல் 2022 வரை வன்முறையில் ஈடுபடுவதைத் தவிர்த்தனர். வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடு மையான நடவடிக்கை எடுத்து குஜராத்தில்  பாஜக நிரந்தர அமைதியை நிலைநாட்டியுள்  ளது” என்று அமித்ஷா கூறியுள்ளார். யாருக்கு “பாடம் கற்பிக்கப்பட்டது” அல்லது எப்படி பாடம் கற்பிக்கப்பட்டது என்பதை அமித் ஷா விவரிக்கவில்லை. எனி னும், 2002 வன்முறையின்போது முஸ்லிம் களே கடுமையாக ஒடுக்கப்பட்டனர். கடந்த 2002-ஆம் ஆண்டு, குஜராத் மாநி லத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்த போது, கோத்ரா ரயிலில் தீ விபத்து சம்ப வம் நடைபெற்றது. இதில் 59 இந்து யாத்ரீ கர்கள் பலியாகினர். அப்போது, இஸ்லாமி யர்கள்தான் ரயிலுக்கு தீ வைத்ததாகக் கூறி குஜராத் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக சங்-பரிவாரங்களால் பெரும் வன்  முறை அரங்கேற்றப்பட்டது.

பின்னாளில் 2005-ஆம் ஆண்டு இது தொடர்பாக ஒன்றிய அரசு அமைத்த விசா ரணை ஆணையம், ரயில் பெட்டிக்கு உள்  ளேயே யாத்ரீகர்கள் சமையல் செய்ததாக வும், அப்போது ஏற்பட்ட தீ விபத்து காரண மாகவே பலர் உயிரிழந்ததாகவும், வெளி யிலிருந்து யாரும் ரயிலுக்கு தீ வைக்க வில்லை என்று கண்டறிந்தது. எனினும், பழிவாங்கும் நடவடிக்கை என்ற பெயரில் 2002-இல் உடனுக்குடன் குஜராத்தில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் நரவேட்டையாடப்பட்டனர். 20 ஆயிரம் இஸ்  லாமியர்களின் வீடுகள், கடைகள், மசூதி கள் சூறையாடப்பட்டன. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் படியே, 2002 வன்  முறைச் சம்பவங்களில் 790 முஸ்லிம்களும், 254 இந்துக்கள் கொல்லப்பட்டிருந்தனர். சிறுபான்மையினருக்கு எதிரான வன் முறையின் பின்னணியில் அன்றைய முதல்  வர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இருந்ததாக குற்றச்  சாட்டு எழுந்தது. வழக்குகளும் தொடரப் பட்டன. ஆனால், அந்த வன்முறைக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற வாதத்தையே அவர்கள் முன்வைத்து வந்தனர். வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டனர்.  இந்நிலையில், “2002-இல் ‘அவர் களுக்கு’ பாடம் கற்பித்த பிறகு, 2002 முதல்  2022 வரை அவர்கள் வன்முறையில் ஈடுபடு வதைத் தவிர்த்து விட்டனர்” என்று பேசி, குஜராத் வன்முறையின் பின்னணியில் தாங்கள்தான் இருந்தோம் என்பதை அமித் ஷா-வே ஒப்புதல் வாக்குமூலமாக அளித் துள்ளார்.