சென்னை, ஜூன் 13- நீட் தேர்வுக்கு கருணை மதிப் பெண் வழங்கியது மிகப்பெரிய மோசடி என தமிழக மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பி ரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை யில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியிருப்பதாவது:- கடந்த மே 5 அன்று நடந்த நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. ‘நீட்’ தேர்வு குளறு படியால் நாடு முழுவதும் 23 லட் சம் மாணவர்கள் பாதிக்கப்பட் டுள்ளனர். மருத்துவப் படிப்பில் சேர நீட் எழுதியவர்களில் 31 விழுக் காட்டினர் தான் ஒரே முயற்சியில் தேர்ச்சி பெற்றனர். 2024-இல் மட்டும் 67 மாணவர்கள் முழு மதிப்பெண் கள் பெற்றுள்ளனர். நீட் தேர்வில் 718, 719 மதிப்பெண்கள் என்பது சாத்தியமில்லை. ஒரு கேள்வியை விட்டிருந்தால் 716 மதிப்பெண் தான் கிடைக்கும்; ஒரு கேள்விக்கான பதிலைத் தவ றாக எழுதியிருந்தால் 715 மதிப் பெண் தான் கிடைக்கும். 718, 719 கிடைக்க வாய்ப்பில்லை. எனவே, இதில் முறைகேடுகள் நடைபெற் றுள்ளன. 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கியதில் குளறுபடி நடந்துள்ளது. கடும் எதிர்ப்பை அடுத்து 1523 பேருக்கு தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண்ணை ரத்து செய்துள் ளது. உச்சநீதிமன்றம் எந்த இடத்தி லும் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு தரவில்லை. சட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு தொடர்பான தீர்ப்பை நீட் தேர்வுக்கு பொருத்திப் பார்ப்பது சரியல்ல. சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு ஆன்லைன் மூலம் நடை பெறுகிறது. நீட் தேர்வு நேரடித் தேர்வு. சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு தீர்ப்பு நீட் தேர்வுக்கு பொருந் தாது. எனவே, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கருணை அடிப்படையில் மாண வர்களுக்கு மதிப்பெண் வழங்க முடிவு எடுத்தபோது யாரிடம் அனு மதி பெற்றீர்கள்? லட்சக்கணக்கான மாணவர்களின் மன உளைச்ச லுக்கு காரணமாக இருப்பது தேசிய தேர்வு முகமை. நேரப் பற்றாக்குறை யால் நீட் தேர்வில் கருணை மதிப் பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடி யாது. நீட் தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைத்திட வேண்டும். நீட் தேர்வால் ஏழை, எளிய மாண வர்களுக்கு மருத்துவப் படிப்பு என் பது எட்டாக் கனியாக மாறிவிட்டது. எனவே, நீட் தேர்வை ஒழிக்க ஒன் றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.