states

அமைதியான கோவையே மக்களின் தேவை

கோயம்புத்தூர், செப்.24-  அமைதியான கோவையே மக்களின் தேவை என்கிற நிலையில் கடந்த சில நாட்க ளாக வகுப்புவாத அமைப்புகளின் நடவ டிக்கை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்  சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்ட றிந்து காவல்துறையினர் கடும் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை யிலான அனைத்துக் கட்சியினர் காவல்துறை கூடுதல் இயக்குநர், மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் நேரில் வலி யுறுத்தினர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்க ளாக வகுப்புவாத அமைப்புகளின் நடவ டிக்கைகள் தொடர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அமைதியான கோவையே மக்க ளின் தேவை எனும் முறையில் கோவை மக்க ளவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலை மையில், காவல்துறை கூடுதல் இயக்குநர், கோவை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல்  துறை ஆணையர், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஆகியோரை நேரில் சந்தித்து கோவையின் அமைதி வலியுறுத்தப்பட்டது.  இந்த சந்திப்பின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்ட பேரவை  உறுப்பினர் எம்.ஆறுமுகம், மாவட்டச் செய லாளர் சிவசாமி, மதிமுக நிர்வாகி சேதுபதி, தபெதிக தலைவர் கு.ராமகிருட்டிணன், விடு தலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ஜோ.இலக்கியன், திவிக தலைவர் நேருதாஸ், தமிழ் புலிகள் கட்சி இளவேனில் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் சந்தித்தனர்.  அப்போது, மண்ணெண்ணெய் குண்டு வீசியவர்களை உடனடியாக கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவையில் வரும் 29 ஆம் தேதி மாநில தலைவர்கள் பங்கேற்கும் பேரணி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது என தெரி விக்கப்பட்டுள்ளது.

;