states

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

மன்னார்குடி, ஜூலை 8- அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய நன்னிலம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான காமராஜ், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2021 வரை உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த காலக் கட்டத்தில் ரூ.58.44 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.  முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வீடுகள், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை நடத்தினர். தமிழகம் முழுவதும் திருவாரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கோயம்புத் தூர், சென்னை உள்பட 49 இடங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு ஒரே சமயத்தில் துவங்கிய இச்சோதனைகள் சனிக்கிழமையும் நீடிக்கலாம் என தெரிகிறது.

முன்னாள் அமைச்சர் ஆர்.காம ராஜின் சொந்த மாவட்டமான திருவாரூரில் மட்டும் பத்து இடங்களில் சோதனைகள் நடைபெற்றது. அவரது சொந்த ஊரான மன்னார்குடியில் உள்ள வடக்கு வீதி வீட்டில் காலை  6 மணிக்கு இச்சோதனை துவங்கிய போது, ஆர்.காமராஜ் வீட்டில்இருந்தார்.  ஆர்.காமராஜ், அவரது இரண்டு மகன்கள் இன்பன், இனியன், அவரது உறவினர்கள், வழக்கறிஞர்கள் உதய குமார், சந்திரசேகரன், கிருஷ்ண மூர்த்தி என 6 பேர் மீது திருவாரூர்  லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை யினர் 120(பி) (குற்றச்சதி) 1988ஆம் வரு டத்திய ஊழல் தடுப்பு சட்டம் பிரிவுகள் 12 (1) 109 13(1)(பி) இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையின்படி 1.4.2015 லிருந்து 31.3.2021 வரை ரூ.58.44 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்து பண வளங்களை முன்னாள்  அமைச்சர் ஆர்.காமராஜ் தனது  அமைச்சர் பதவியை தவறாக பயன் படுத்தி சேர்த்துக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்.காமராஜ் சம்பந்தப்பட்ட அனை வரிடமும் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி னர். குறிப்பாக ஆர்.காமராஜுக்கு மிகவும் நெருக்கமான அதிமுக பிரமுகர் வேட்டைத்திடல் சத்திய மூர்த்தி என்பவரிடமும் விசாரணை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை வடக்கு வீதியில் அவரது வீட்டிற்கு வெளியே அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  பல நகரங்களிலிருந்தும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மாநிலம் முழு வதும் இச்சோதனைகளிலும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.  திருவாரூர் மாவட்டத்தில் நன்னி லம், வலங்கைமான், கோட்டூர், திருத் துறைபூண்டி உள்ளிட்ட பல ஊர்களி லும், மன்னார்குடியில் மட்டும் 10  இடங்களில் சோதனைகள் நடை பெற்றது. கடந்த பத்து ஆண்டுகளில் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்து வைத்திருக்கிறாரா, அவைகள் அசையா சொத்துக்களாகவும், நகைகள், பத்திரங்கள் மற்றும் வேறு இடங்களில் முதலீடுகளாகவும் வைத்திருக்கிறாரா எனவும் சோத னைகள் நடைபெற்று வருகின்றன.

மன்னார்குடியில் காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில், காவல்துறையினர் சட்ட-ஒழுங்கு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு வலங்கைமானில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியினை பல லட்சம்  கொடுத்து விலைக்கு வாங்கிய, முன்னாள் அமைச்சரின் பினாமி என கூறப்படும், அதிமுக நன்னிலம் ஒன்றிய செயலாள ரும் வலங்கைமானில் செயல்பட்டு வரும் சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளருமான பி.சி.ஜி.அன்பு வீட்டிலும் சோதனை நடை பெற்றது. அதிமுக மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளர் இளங்கோவன் உள்ளிட்ட நண்பர்கள் வீட்டிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்றது. 

தஞ்சாவூர்

தஞ்சாவூர் பூக்கார வஸ்தா தெருவில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின் சம்பந்தி, மருத்துவர் மோகன் என்பவரது வீட்டில், வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல் எலிசா நகரில் காமராஜின் மகன்களால் கட்டப்பட்டு, இன்னும் திறக்கப்படாமல் உள்ள ஸ்ரீகாமாட்சி மருத்துவமனையிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் காலை முதல் மதியம் வரை சோதனை நடத்தினர். இந்த இரண்டு சோதனைகளுக்கும் தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி ராஜ் தலைமையில் நடந்தது. இரு இடங்களிலும் தலா  9 பேர் கொண்ட குழுவினர் சோதனை யில் ஈடுபட்டனர். 

சோதனையில் என்னென்ன ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை யினர் ஏதும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இதற்கிடையில் பூக்காரத்தெருவில் மருத்துவர் மோகன் வீட்டின் அருகே அதிமுகவினர் திரண்டு, லஞ்ச ஒழிப்பு  துறையின் சோதனைக்கு எதிர்ப்பு தெரி வித்தும், தமிழக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக கண்டித்தும் முழக்கங்களை எழுப்பி னர்.

திருச்சிராப்பள்ளி

திருச்சி கே.கே.நகர் ஐயர்தோட்டம், 2ஆவது மெயின்ரோடு, 3ஆவது கிராஸ் பகுதியில் உள்ள காமராஜின் நண்பர் பாண்டியன் என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்  துணை கண்காணிப்பாளர் மணிகண் டன் தலைமையில், ஆய்வாளர்கள் உள்ளிட்ட 6 பேர் காலை 7 மணிமுதல் சோதனையில் ஈடுபட்டனர். தொழி லதிபரான பாண்டியன் பூதலூரில் அரிசிஆலை, திருச்சி மாத்தூரில் இண்டஸ்ட்ரீஸ் தொழில் நிறு வனங்களை நடத்தி வருகிறார்.  திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிளாசம் ஓட்டலுக்கு அதிகாலை வந்த லஞ்ச ஒழிப்பு போலீ சார் அங்கிருந்தவர்களை வெளி யேற்றி விட்டு சோதனை நடத்தினர்.  முன்னாள் அமைச்சர் காமராஜர் நண்பரான இளமுருகு என்பவர் இந்த ஓட்டலை நடத்தி வருகிறார். திருச்சி  தில்லைநகர் 7 வது கிராஸ் ராமச்சந்திராநகர் பகுதியில் உள்ள இள முருகு வீட்டிலும் சோதனை நடத்தப் பட்டது. இந்தச் சோதனைகள் சனிக்கிழ மையும், தொடரலாம் எனக் கூறப்படுகிறது.