states

மரபணு பரிசோதனைக்கு 8 பேரும் எதிர்ப்பு: ஜூலை 4 ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை, ஜூலை 1- வேங்கைவயலைச் சேர்ந்த 8 பேரும் மரபணு பரிசோதனைக்கு நீதி மன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, இது தொடர்பான உத்த ரவை ஜூலை 4 ஆம் தேதிக்கு நீதிபதி எஸ்.ஜெயந்தி ஒத்திவைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் பட்டியல் சமூக குடியிருப்பின் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம்  கடந்த டிசம்பர் 26 அன்று தெரியவந் தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி  வரும் சிபிசிஐடி போலீசார், தொட்டியில் கலக்கப்பட்ட மனிதக் கழிவின் மரபணு வையும், வேங்கைவயல் மற்றும் இறை யூர் பகுதி மக்களின் மரபணுவையும் ஒப்பிட்டுப் பார்க்க முடிவு செய்தனர். இதுதொடர்பாக, கடந்த ஏப்ரலில் 11 பேருக்கு மரபணு பரிசோதனைக்கான ரத்த மாதிரிகளை சேகரிக்க நீதிமன்ற  அனுமதி பெறப்பட்டது.

ஆனால், 3 பேர்  மட்டுமே ரத்த மாதிரிகளைக் கொடுக்க வந்தனர். 8 பேர் வரவில்லை. தொடர்ந்து, அவர்கள் மதுரை உயர் நீதிமன்றக்  கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அந்த  வழக்கில், மனுதாரர்களின் கருத்தையும் விசாரணை நீதிமன்றத்தில் பதிவு செய்து  நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி, புதுக்கோட்டை மாவட்ட எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச்  சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் 8 பேரும் வெள்ளிக்கிழமை ஆஜராயினர். அவர்  களிடம், சிபிசிஐடி போலீசார் மரபணு பரி சோதனை செய்யக் கோருவது குறித்து சனிக்கிழமை பிற்பகலில் ஆஜராகி கருத்  துகளைத் தெரிவிக்கலாம் என கூறப்பட்  டது. இதனைத் தொடர்ந்து 8 பேரும் நீதி பதி எஸ்.ஜெயந்தி முன்னிலையில் சனிக்  கிழமை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஆஜராயினர். மரபணு பரிசோதனையில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என் றும், பாதிக்கப்பட்ட தங்களையே குற்ற வாளிகளாக சித்தரிக்க போலீசார் முயற்  சிப்பதாகவும் தெரிவித்தனர். அவ்வாறு குற்றவாளிகளாக சித்த ரிக்க தாங்கள் முயற்சிக்கவில்லை என் றும், இந்த வழக்கில் இதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை என்றும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இதுகுறித்த உத்தரவை வரும்  ஜூலை 4 ஆம் தேதி அறிவிப்பதாக நீதிபதி  எஸ்.ஜெயந்தி அறிவித்தார்.