states

ஸ்டெர்லைட் - கருத்தரங்கு அனுமதி கோரிய வழக்கு ஒத்திவைப்பு

மதுரை, ஜன.23-  ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும்  திறப்பதற்கு கருத்தரங்கு நடத்த அனுமதி கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  தியாகராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ஸ்டெர்லைட் தொழிற்சாலை குறித்து அறிவியல் பூர்வமான உண்மை களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில், விளக்க கருத்தரங்கம் நடத்த அனுமதி வழங்க வேண்டும்’’ என குறிப் பிட்டிருந்தார்.  இந்த மனு திங்களன்று உயர்நீதிமன்ற நீதிபதி முரளி சங்கர் அமர்வில் விசா ரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு  அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வழக்கில் ஆஜராக கால அவ காசம் கேட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஜனவரி  25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தர விட்டார்.