states

மன்னிப்பு கேட்பேன்.. ஆனால், நயவஞ்சகர்களிடம் அல்ல!

புதுதில்லி, ஜூலை 29 - ‘‘நான் தவறு செய்தேன், ஒப்புக்கொள் கிறேன் அதற்காக குடியரசு தலைவரிடம் மன்னிப்பு கேட்பேன்; ஆனால் நயவஞ்சகர் களிடம் அல்ல..!’’ என்று பாஜக தலைவர் களை ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மறைமுகமாக விமர்சித்துள்ளார். விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி, பண வீக்கம், எதிர்க்கட்சியினர் மீதான அமலாக்கத் துறையினரின் விசாரணை ஆகிய பிரச்ச னைகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலை வர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குடியரசு தலை வர் திரௌபதி முர்முவை, ‘ராஷ்டிரபதி’ என்பதற்குப் பதிலாக ‘ராஷ்டிரபத்னி’ என்று கூறிவிட்டார். வாய்தவறி அப்படிக் கூறி விட்டதாக சவுத்ரி விளக்கம் அளித்தும், இல்லை... இல்லை... வேண்டுமென்றே குடியரசுத் தலைவரை சவுத்ரி அவமரியாதை செய்து  விட்டார் என்றும், இதற்காக காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்தி மன்னிப்புக்  கேட்க வேண்டும் என்றும் நாடாளு மன்றத்தில் ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு, நாடா ளுமன்றத்தையே முடக்கினர். தற்போது தேசிய பெண்கள் ஆணையம் சவுத்ரிக்கு நோட்டீஸூம் அனுப்பியுள்ளது. இந்நிலையில், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி  நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘‘நான் கவனக்குறைவாக ‘ராஷ்டிரபத்னி’ என்ற வார்த்தையை ஒரு முறை பயன்படுத்தினேன், அது நாக்கு நழுவி யது. நான் ஒரு போதும் குடியரசுத் தலை வருக்கு எந்த அவமரியாதையையும் ஏற்படுத்தவில்லை. நான் பெங்காலி, இந்தி  மொழி பழக்கமில்லை. நான் தவறு செய்தேன், ஒப்புக்கொள்கிறேன். நான்  குடியரசு தலைவரிடம் நேரம் கேட்டுள்ளேன், அவரிடம் மன்னிப்பு கேட்பேன். ஆனால் இந்த நயவஞ்சகர்களிடம் (பாஜக) அல்ல. இந்த விவகாரத்தில் ஆளும் கட்சி சிறிய மண் மேட்டை மலையாக உரு வாக்குகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.