states

போக்குவரத்து ஊழியர்களின் மகத்தான சேவை

சென்னை, டிச.23- தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஒட்டுமொத்த பயணிகளின் அன்றாடத் தேவையை பூர்த்தி செய்ய 34ஆயிரம் பேருந்துகள் இயங்கவேண்டும்; ஆனால் தற்சமயம் 20 ஆயிரம் பேருந்து களே இயங்குகின்றன. இதனால் ஏற்படும் சேவை குறைபாடு சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க அரசு கூடுதல் பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் கூறினார். 22.12.2022 அன்று வெளியான தீக்கதிர் நாளிதழ் எட்டாம் பக்கத்தில் இடம் பெற்ற “கட்டணமில்லா பேருந்து பயணம்: களையப்பட வேண்டிய குறை” என்ற செய்திக்  கட்டுரையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள், போக்குவரத்து துறையில் இருக்கும் உண்மை  விவரங்கள் இல்லாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் சேவை குறைபாடு  சார்ந்த பிரச்சனைகளை பொதுமைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இது சரியான பார்வை அல்ல என்று கே.ஆறுமுக நயினார் சுட்டிக்காட்டியுள்ளார். போக்குவரத்துக் கழகங்களின் உண்மை நிலை குறித்து பல முக்கிய விவரங்களை அவர் தெரிவித்துள்ளார். 

வரத்துக் கழகங்களிலும் மொத்தம் 20ஆயிரம் பேருந்துகள் ஓடுகின்றன. அவற்றில் பல நூறு  பேருந்துகள் பல்லாண்டு காலம் ஓடி காலாவதி யானவை. ஒன்றிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி ஒரு லட்சம் பேருக்கு 50 பேருந்துகள் ஓட வேண்டும். தமிழகத்தின் மக்கள் தொகைக்கு ஏற்றவிதத்தில் தற்போதைய எண்ணிக்கை எந்தவிதத்திலும் பொருந்தாது.  எனவேதான் அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் தமிழகத்தில் குறைந்தபட்சம் 35ஆயிரம் பேருந்துகளாவது ஓட வேண்டும் என வலியுறுத்துகிறோம். செனைன மாநகரில் மட்டும் தற்போதைய நெருக்கடிகளை சமாளிக்க குறைந்தபட்சம் 6000 பேருந்துகளா வது ஓட வேண்டும். ஆனால் தற்போது சுமார் 2800 பேருந்துகள்தான் ஓடுகின்றன.  பயணிகளின் எண்ணிகையைப் பொறுத்த வரை தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு அரசுப் பேருந்துகளில் மொத்தம் 1கோடியே 70 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். இவர்களில் 20 முதல் 30 லட்சம் பேர் புறநகர் பேருந்து பயணிகள். எஞ்சியுள்ள 1கோடியே 40 லட்சம் பயணிகள் நகர் பேருந்துகளில் பயணிக்கிறார்கள். மொத்தமுள்ள 20 ஆயிரம் பேருந்துகளில் 10 ஆயிரம் பேருந்துகள்தான் நகர்ப் பேருந்துகள். இவற்றில்தான் 35 லட்சம் முதல் 45 வரையிலான பெண்கள், 30 லட்சம் மாணவர்கள் தினந்தோறும் பயணிக்கிறார்கள். 

ஒரு பேருந்தில் ஒரு நேரத்தில் நிற்பவர்களையும் சேர்த்து அதிகபட்சம் 92 பேர்தான் பயணிக்கலாம். ஆனால் பேருந்துகளின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பதால் ஒவ்வொரு நாளும் நெரிசல் மிக கடுமையாக இருக்கிறது.  போக்குவரத்து ஊழியர்கள் இந்த கடுமை யான சூழலை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு  நிமிடமும் எதிர்கொண்டு, பயணிகளுக்கு தங்களது சக்தியையும் மீறிய சேவையை ஆற்றி வருகிறார்கள்.  புதிய பேருந்துகள் வாங்க அரசு உடனடியாக முன்வர வேண்டும். அதேபோல அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் அனைத்து பிரிவிலுமாக சுமார் 40 ஆயிரம் பணி யிடங்கள் காலியாகவுள்ளன. இந்த பணிச் சுமையை தற்போது பணியில் உள்ள தொழி லாளர்களே சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. பேருந்து பராமரிப்பிலும் பெரிய முன்னேற்றம் ஏதுமில்லை.  இவையனைத்தும் சில இடங்களில் போக்குவரத்து ஊழியர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையிலான பிரச்சனைகளாக மாறுகிற சம்பவங்களும் உண்டு.  எனவே தேவைப்படும் அளவிற்கு பேருந்துகளை அதிகரிப்பதும், பராமரிப்பதும் உள்ளிட்ட போக்குவரத்து ஊழியர் சங்கங் களின் ஆலோசனைகளுக்கும் குரலுக்கும் அரசு செவி மடுக்க வேண்டும். அதுவே சரியான தீர்வாகும் என்று கே.ஆறுமுக நயினார் விவரித்துள்ளார்.