புதுதில்லி, பிப்.11- தன்மீது பங்குச் சந்தை ஊழல் - முறைகேடு குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ள ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொட ருவதற்கு, அதானி குழுமம் முடிவு செய் திருப்பதாகவும், இதற்காக, அமெ ரிக்காவைச் சேர்ந்த காஸ்ட்லியான வழக்கறிஞர் குழுவை நாடியிருப்பதாக வும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது ‘அதானி குழுமம் - ஹிண் டன்பர்க்’ மோதலை அடுத்தகட்டத் திற்கு நகர்த்துவதாக அமைந்துள்ளது. கார்ப்பரேட் உலகில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதானி குழுமம், பங்குச் சந்தை வர்த்தகத்தில் சுமார் ரூ. 17 லட்சத்து 80 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் செய்தி ருப்பதாக, அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ (Hindenburg Research) கடந்த ஜனவரி 24 அன்று 106 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது. “கொரோனாவுக்கு பிந்தைய 2 ஆண்டுகளில் அதானி குழும நிறுவ னங்களின் சொத்து மதிப்பு 819 சத விகிதம் அதிகரித்தது; இதுதொடர்பாக ஆய்வுசெய்தபோது, அதானி குழு மத்தின் வளர்ச்சி நேர்மையான முறை யில் பெறப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
அதானி குழுமம், தனது குடும்ப உறவினர்கள் மூலம் வெளிநாடு களில் போலி நிறுவனங்களைத் தொடங்கி, வரி ஏய்ப்பிலும், பண மோச டியிலும் ஈடுபட்டுள்ளது; அதிகப்படி யான வரிச் சலுகை கொண்ட வெளிநாடு களில் பணத்தை முறையற்ற வகை யில் முதலீடு செய்து அமெரிக்கப் பத்தி ரம் மற்றும் இந்தியர் அல்லாத வர்த்த கப் பத்திரம் மூலம் நிறுவனத்தில் ஷார்ட் பொசிஷன் (Short Position) வைத் துள்ளது; தங்கள் நிறுவனங்களின் பங்கு மதிப்பை மோசடியாக உயர்த்திக் காட்டியுள்ளது; டாப் 5 நிறு வனங்களில் மட்டும் அதானி குழுமம் சுமார் 2.1 லட்சம் கோடி ரூபாய் அள விற்கு கடன்பட்டுள்ளது” என்று அடுக்க டுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தது. இந்த அறிக்கை, அதானி குழும நிறு வனங்களில் முதலீடு செய்திருந்தவர் களை பெரும் அதிர்ச்சிக்கு உள் ளாக்கி யது. அதானி குழும பங்குகளின் மதிப்பு, இரண்டே நாட்களில் ரூ. 4 லட்சத்து 17 ஆயிரம் கோடியை இழந்தது. பலரும் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடவே, ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ அறிக்கை மோசடியானது என்று அதானி குழுமம் சமாளிக்கப் பார்த்தது.
அதானி குழுமத்திற்கு சவால்
அப்போது, அதானி குழுமம் நேர்மையாகத்தான் செயல்படுகிறது என்றால், நாங்கள் எழுப்பும் 88 கேள்விக ளுக்கு பதிலளிக்கத் தயாரா? என்று ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ மேலும் பிடியை இறுக்கியது. அதுமட்டுமல்லாமல், “அதானி குழுமம் எங்கள் மீது வழக்கு தொடர்வதாக இருந்தால், அதையும் நாங்கள் சந்திக்கத் தயாராகவே இருக்கிறோம்; ஏனெனில், எங்களின் ஆய்விற்கு கிடைக்காத சில தரவுகளை நாங்கள் அதானி குழுமத்திடமே நீதிமன்றம் மூலமாக கேட்டுப் பெறுவ தற்கும் உதவியாக இருக்கும்” என்று கேலி செய்தது. ஆனால், முதலீட்டாளர்களை திருப்திப்படுத்துவ தற்காக, அதானி குழுமம் 413 பக்க பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “ஹிண்டன்பர்க் அறிக்கை என்பது இந்தியா மீதான திட்டமிட்ட தாக்குதல். இந்திய அமைப்பு கள் மற்றும் அதன் வளர்ச்சி மீதான தாக்குதல்” என்று பக்கம் பக்கமாக அழுது கூப்பாடு போட்டது.
செல்லுபடியாகாத சமாளிப்பு
அப்போதும் ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’, விடவில்லை. “உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரால் மோசடி செய்யப்பட்டாலும், மோசடி என்பது மோசடிதான் என்று நாங்கள் நம்புகிறோம். அதானி குழுமத்தின் ‘413 பக்க’ பதிலில், எங்கள் அறிக்கைக்கு பதிலளிக்கும் விஷயங்கள், சுமார் 30 பக்கங்களில் மட்டுமே உள்ளன. 330 பக்கங்க ளில் நீதிமன்றப் பதிவுகள், 53 பக்கங்களில் உயர்மட்ட நிதி நிலை, பொதுத் தகவல்கள் மற்றும் பெண் தொழில் முனைவோர் மற்றும் பாதுகாப்பான காய்கறிகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் விதம் போன்ற எங்களின் கேள்விகளுக்கு சம்பந்தமே இல்லாத விவரங்களே இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, அதானி குழும பதிலின் பக்கம் 24-ஐ காணலாம். எங்களின் 88 கேள்விகளில் 62 கேள்விகளுக்கு அதானி குறிப்பாக பதிலளிக்கத் தவறி யுள்ளார். பதிலளித்த கேள்விகளிலும், எங்களின் குற்றச்சாட்டுகளிலிருந்து விலகி ஓடுவதற்கே முயன்றுள்ளார். இன்னும் சில கேள்விகளுக்கு அளிக்கப் பட்ட பதில்களில், எங்களின் குற்றச்சாட்டை அவரே மறை முகமாக உறுதிப்படுத்தியிருக்கிறார்” என்றும் அடுத்த டுத்து தாக்குதல்களை தொடர்ந்தது.
இந்தப் பின்னணியில், அதானி குழுமப் பங்குகள், கடந்த 2 வாரங்களில் ரூ. 10 லட்சத்து 28 ஆயிரம் கோடி அளவிற்கும் சரிந்து விட்டது. அதானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பில் மட்டும் சுமார் 4 லட்சத்து 92 ஆயிரம் கோடி கரைந்து விட்டது. உலகின் 3-ஆவது பணக் காரராக இருந்த அதானி, 17-ஆவது இடத்திற்கு கீழே தள்ளப்பட்டு விட்டார்.
காஸ்ட்லி வழக்கறிஞர்களின் காலைப் பிடித்த அதானி
இந்த பின்னணியில், ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ அறிக்கை யில் வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கூறி வழக்கு தொடர அதானி குழுமம் முடிவு செய்துள் ளதாகவும், இதற்காக, ‘டபிள்யு.எல்.ஆர்.கே.’ (WLRK) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த காஸ்ட்லியான ‘வாச்டெல், லிப்டன், ரோசன் & காட்ஸ்’ (Wachtell, Lipton, Rosen & Katz) நிறுவனத்தின் மூத்த வழக்கறிஞர்களை அதானி குழுமம் நியமித்துள்ளதாகவும், பிரிட்டனைச் சேர்ந்த ‘பைனான்சியல் டைம்ஸ்’ ஏடு செய்தி வெளியிட்டிருக்கிறது.
சம்பந்தியின் உதவி
மும்பையில் இயங்கி வரும் ‘சிரில் அமர்சந்த் மங்கள்தாஸ்’ நிறுவனத்தை நிர்வாகம் செய்யும் சிரில் ஷ்ராப் அதானியின் சம்பந்தி ஆவார். இவரது மகள் பரிதி யைத்தான், கவுதம் அதானி தனது மூத்த மகனான கரண் அதானி-க்கு மணமுடித்துள்ளார். அந்த வகையில், தனது சம்பந்தி தொடர்புடைய நிறுவனத்தின் மூலமாகவே ‘டபிள்யு.எல்.ஆர்.கே.’ (WLRK) நிறுவனத்தை அதானி அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஹிண்டன்பர்க்-கிற்கு இணையான டபிள்யு.எல்.ஆர்.கே.
பங்குச் சந்தை ஆய்வில், ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ எந்த அளவிற்கு திறமையான நிறுவனமோ, எந்த அளவிற்கு சாதனைப் பட்டியலை வைத்துள்ள நிறுவனமோ, அதே அளவிற்கு டபிள்யு.எல்.ஆர்.கே. (WLRK) நிறுவனமும், அது ஒரு வழக்கை கையில் எடுக்கிறது என்றால் வெற்றி நிச்சயம் என்ற அளவிற்கு கார்ப்பரேட் வணிக சட்ட நுணுக்கங்களுக்குள் புகுந்து விளையாடும் நிறுவனம் என்று கூறப்படுகிறது. பங்குச்சந்தையில் லாபமீட்டுவதற்கு ‘குறுகிய காலம்’ (Short Position) மற்றும் ‘நீண்டகாலம்’ (Long Postion) என இரண்டு நிலைகள் உள்ளன. இதில், குறுகிய கால நிலையைப் பொறுத்தவரை, ஒரு நிறுவனத்தின் பங்கு விலை குறையும் என உறுதி செய்து முதலீடு செய்வது ஆகும். இதில் பங்கு விலை குறைந்தால் மட்டுமே முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைக்கும். நீண்டகால நிலையைப் பொறுத்தவரை, பங்கு விலை உயரும் என முடிவு செய்து, அதில் முதலீடு செய்வது ஆகும். இதில், பங்கு விலை உயர்ந்தால் மட்டுமே லாபம். இந்த இரண்டிலும் பங்குகளை நேரடியாக வாங்க முடியாது. ஏற்கெனவே நிறுவன பங்குகளை வைத்திருப்பவர்களிடம் இருந்து கடனாகப் பெற்றுத்தான் வாங்க முடியும். ஆனால், ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறுவனமானது, இந்த இரண்டு நிலை முதலீட்டிலும் சிறந்து விளங்கும் ஒரு நிறுவனமாகும்.
அதுமட்டுமல்ல, சந்தையில் கோலோச்சும் கார்ப்ப ரேட் நிறுவனங்கள், முதலீட்டுச் சந்தையில் நியாயமாக நடந்து கொள்கின்றனவா, அவற்றின் உண்மையான மதிப்பு என்ன? முறைகேடு செய்து மதிப்பை உயர்த்தி யிருக்கிறார்களா? என்று ஆய்வு செய்து, தவறுகளைக் கண்டுபிடிப்பதிலும் ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறுவனம் கெட்டிக் கார நிறுவனமாகும். அதனாலேயே அது லாபமீட்டும் நிறுவனமாகவும் விளங்குகிறது. இவ்வாறு கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் முறை கேடுகளைக் கண்டுபிடிப்பதில் பெரிய ‘டிராக் ரெக்கார்டை’ ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ வைத்துள்ளது. 2017 முதல் சுமார் 16 நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டுபிடித்து ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அண்மையில் அமெரிக்காவைச் சேர்ந்த ‘எலக்ட்ரிக் டிரக்’ தயாரிப்பு நிறுவனமான ‘நிகோலா கார்ப்’ (Nikola Corp) நிறுவனம் ‘ஹிண்டன் பர்க் ரிசர்ச்’ ஆய்வில் சிக்கியது. அதன்மூலமாக, சுமார் 34 பில்லியன் டாலர் மதிப்புடைய ‘நிகோலா கார்ப்’ நிறுவனம் வெறும் 1.34 பில்லியன் டாலர் மதிப்பிற்கு அதலபாதாளத்தில் விழுந்தது. எனவே, ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ ஆய்வு என்றால், அதில் சந்தேகமே கொள்ள வேண்டியதில்லை என்ற அளவிற்கு உலக முதலீட்டா ளர்கள் கண்ணை மூடிக் கொண்டு நம்பிக்கை வைப்பார் கள்.
இதேபோலத்தான் டபிள்யு.எல்.ஆர்.கே. (WLRK) சட்ட நிறுவனமும். குறிப்பாக, மூலோபாய முதலீடுகள், டேக்ஓவர் மற்றும் டேக்ஓவர் டிபென்ஸ், பங்குதாரர் செயல்பாடு, கார்ப்பரேட் மற்றும் செக்யூரிட்டீஸ் சட்டம் மற்றும் கார்ப்பரேட் கவர்னன்ஸ் ஆகிய துறைகளில் அனுபவம் கொண்டதாகும். அண்மையில் 44 பில்லியன் டாலர் மதிப்பிலான டுவிட்டர் - எலான் மஸ்க் வழக்கில், டுவிட்டர் தரப்பில் இருந்து வாதிட்டு, எலான் மஸ்க் மீது அடுத்தடுத்து வழக்குகளைப் பதிவு செய்து, மஸ்க் டுவிட்டரை வாங்க வைக்கும் நிலைக்குத் தள்ளியது. இதேபோல டெஸ்லா பங்குதாரர்கள் சோலார் சிட்டி நிறு வனத்தை 2.6 பில்லியன் டாலருக்கு கைப்பற்றிய வழக்கில், எலான் மஸ்க் சார்பாகவும், டபிள்யு.எல்.ஆர்.கே. சட்ட நிறுவனம் ஆஜராகியுள்ளது. 2018-இல் டெஸ் லாவை தனியார் நிறுவனமான மாற்றவும் ஆலோசனை வழங்கியுள்ளது. நியூயார்க் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாண வர்கள் ஹெர்ப் வாச்டெல், மார்ட்டின் லிப்டன், லியோ னார்ட் ரோசன் மற்றும் ஜார்ஜ் காட்ஸ் ஆகியோர் இணைந்து 1965-ஆம் ஆண்டு உருவாக்கிய நிறுவ னம்தான் இந்த ‘டபிள்யு.எல்.ஆர்.கே. சட்ட நிறுவனம்’ ஆகும். இதுதான் தற்போது அமெரிக்காவின் மிகப் பெரிய மற்றும் காஸ்ட்லியான சட்ட நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. குறிப்பாக, கடந்த 20 ஆண்டுகளில் அதிகமான வெற்றிகளைப் பெற்று மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் கீழ், 500 - 1000 ஊழியர்கள் உள்ளனர். ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ அறிக்கையை முறியடிக்க, அந்த நிறுவனத்தைப் போலவே திறமையான ‘டபிள்யு.எல்.ஆர்.கே.’ சட்ட நிறுவனத்திடம் கவுதம் அதானி தற்போது தஞ்சம் அடைந்துள்ளார்.