சென்னை, ஜூலை 10- சுதந்திர தினத்தன்று அனைத்து தலித் ஊராட்சிமன்றத் தலைவர்களும் தடையின்றி தேசியக் கொடி ஏற்றுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கூட்டம் ஜூலை 7 அன்று விழுப்புரத்தில் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. மாநிலப் பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், பொருளாளர் இ.மோகனா,துணைத் தலைவர் ஜி.ஆனந்தன்,துணைப்பொதுச் செயலாளர் ப.செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடு சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.தேசத்தின் இறையாண்மைக்கும் தற்சார்புக்கும் அடித்தளமான பொதுத்துறை நிறுவனங் களும், நிதி ஆதாரங்களும், இயற்கை வளங்களும் ஒரு சில பெருமுதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது.
எனவே தேசத்தின் விடுதலை விழுமியங்களை பாது காக்க ஒன்றுபட்டு போராடவேண்டிய காலம் இது.இந்நிலை யில் மக்களில் ஒரு பகுதியினரின் உரிமையை மற்றொரு பகுதியினர் மறுதலிக்கிற கொடுமையும் தொடர்கிறது. குறிப்பாக சுதந்திர தினத்தன்று, தேசியக் கொடி ஏற்று வதற்குக் கூட தமிழகத்தின் பல தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 2020 இல் திருவள்ளூர் ஆத்துப்பாக்கம், 2021 இல் வில்லிசேரி, அயன்வடமலபுரம் மற்றும் ராமநூத்து, அரியநாயகிபுரம், முத்தையாபுரம், கே.துரைசாமிபுரம் ஆகிய 6 ஊராட்சிகளில் தலித் தலைவர்கள் கொடி ஏற்றமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொடியேற்ற விடாமல் தடுக்கப்பட்ட செய்தியே கூட வெளிவராமல் இன்னும் பல மாவட்டங் களில் தடுக்கப்பட்டிருக்கக்கூடும். எனவே, தமிழக அரசு உடனடியாக அனைத்து தலித் ஊராட்சி மன்றத் தலைவர்களையும் தொடர்பு கொண்டு, தகுந்த பாதுகாப்பு வழங்கி தலித் ஊராட்சி மன்றத் தலை வர்கள் தேசியக்கொடி ஏற்றுவதை உறுதி செய்திடவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.