states

சிறு குறு நிறுவனங்களின் உச்சபட்ச மின் கட்டண உயர்வை ரத்து செய்

சென்னை, டிச. 8- சிறு குறு நிறுவனங்களின் உச்சபட்ச மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு பாண்டி பிளாஸ்டிக் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் ஜி.சங்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பிளாஸ்டிக் தொழில் நேரடியாக 2 லட்சம் பேருக் கும், மறைமுகமாக 3 லட்சம் பேருக் கும் வேலை வாய்ப்பு வழங்கி வரு கிறது. பிளாஸ்டிக் தொழிலுக்கு அடிப்படை ஆதாரமே மின்சாரம் தான். இந்நிலையில் காலை 6 மணி  முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை உச்சகட்ட மின் நுகர்வு என்கின்ற அடிப்படை யில் 8 மணி நேரம் மின்சாரம் உபயோகித்தாலும், உபயோகிக்கா விட்டாலும் 15 விழுக்காடு அதிக பட்ச மின் கட்டணம் என்று அறிவிக் கப்பட்டுள்ளது. கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மிகவும் நலிவடைந் துள்ள சிறு, குறு தொழில்கள் நிறுவன ங்களை பகல் நேரங்களில் நடத்து வதே பெரும் பிரச்சனையாக உள்ளது,இரவு நேரங்களில் நடத்து வதே இல்லை.

இதைப் போன்ற  சூழ்நிலையில் உச்சபட்ச மின் நுகர்வு என்றபெயரில் ஓடாத 8 மணி நேரத்திற்கு தினசரி 15 விழுக்காடு மின் கட்டணம் கூடுத லாக செலுத்த வேண்டும் என்பது என்ன நியாயம். உச்சபட்ச மின் கட்டணம் என்பது இதுவரை பெரிய தொழிற்சாலை களுக்குத் தான் இருந்தது. பெரிய தொழிற்சாலைகள் மாற்று எரி சக்தியை பல்வேறு வழிகளில் பெற்று, அவர்கள் தங்களுடைய தேவைகளை உச்சபட்ச மின் நுகர்வு  நேரத்தில் பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஆனால் சிறு, குறு நிறு வனங்கள் அவ்வாறு செய்ய இய லாது. உச்சபட்ச நேரம் மின் நுகர் வுக்கு நாங்களே செலவு செய்து மீட்டர் வாங்கி பொருத்த வேண்டும் என்பதும், பிறகு அந்த மீட்டரின் படி 20 விழுக்காடு மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதும் மிகவும் வேதனையானது. எனவே இந்த உச்சபட்ச நேர 20 விழுக்காடு மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். அனைத்து எல்.டி. மின் இணைப்புகளுக்கும் நிலைத்த கட்டணம் ஒரு கிலோ வாட்டுக்கு 35 ரூபாய் என்று இருந்ததை மூன்று பிரிவாக பிரித்து  75 ரூபாய், 150 ரூபாய் மற்றும் 550 ரூபாய் என்று கட்டணம் விதித்தி ருப்பது சிறு தொழில்களை முற்றிலு மாக முடக்கச் செய்து விடும். எனவே தற்போது அறிவித்துள்ள நிலைத்த மின் கட்டண உயர்வை மட்டு மல்லாது ஏற்கனவே உள்ள ஒரு கிலோ வாட்டிற்கு 35 ரூபாய் என்று உள்ள நிலைத்த கட்டணத்தையும் ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.