உலக அரங்கில் தமிழுக்கென்று ஒரு தனித்த நிலையான இடத்தைப் பெற்றுத்தந்தவர் திருவள்ளுவர். யாம் அறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளு வனைப்போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை. என்று பாடி அதி சயித்து மகிழ்ந்தான் பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி. உரையாசிரியர் மணக்குடவரால் தொகுக் கப்பட்ட 1330 குறட்பாக்களுக்குரிய 42,194 எழுத் துக்களையும், கடந்த நூற்றாண்டில் தஞ்சையை சேர்ந்த ஞானபிரகாசம் என்பவர் அச்சேற்றம் செய்துள்ளார். தற்போது தமிழ், இந்தி, குஜராத்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 13 இந்திய மொழிகள் உட்பட 80 மொழிகளில் திருக்குறள் அச்சிடப்பட்டுள்ளது. தமிழ் வரலாற்று பெருமை விளங்கும் வகை யில் தமிழில் தொடர் ஆண்டு மேற்கொள்ளப்படாத குறையை உணர்ந்த தமிழ் அறிஞர்களும், சான்றோர்களும், 1921-ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் கடல் மறை மலையடிகளார் தலைமையில் கூடி ஒரு தீர்மா னத்தை நிறைவேற்றினர்.
திருவள்ளுவர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31-ஆண்டுகளுக்கு முன்பே பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது என்றும் முடிவு செய்தனர். திருவள்ளுவர் ஆண்டு முறையை தமிழ் நாடு அரசு ஏற்று 1971-ஆம் ஆண்டு முதல் நாட்குறிப்பிலும் 1972-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசிதழிலும், 1981-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலு வலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தைத் திங்களுக்கு அடுத்த நாள் தை 2-ஆம் தேதியை திருவள்ளுவர் திருநாள் என்றும் அன்று பொது விடுமுறை கொடுப்பது என்றும் 01-01-1970-ஆம் ஆண்டு முதல் செயல்முறைக்கு வருகி றது என்றும் தமிழக அமைச்சரவை 1969-ஆம் ஆண்டு முடிவு செய்தது. இந்த முடிவு அரசாணை எண் 27, 23, பொதுத்துறை உரிமைப் பாதுகாப்பு நாள் 03-11-1969 மூலமாக வெளியிடப்பட்டது.
முதன் முதலில் 1912-ஆம் ஆண்டு ஓலைச் சுவடியிலிருந்து அச்சடிக்கப்பட்டது. 1730-ஆம் ஆண்டு திருக்குறள் முதன்முதலில் லத்தின் மொழி யில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. ஆனால் இன்று அறிஞர் பெருமக்களால் இதுவரை ஏராள மான உலக மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 12-05-1957 மற்றும் பிற தேதிகளில் புரட்சி கவிஞர் பாரதிதாசன் மயிலாடுதுறைக்கு மூன்று முறை வந்து கே.ஆர்.வேணுகோபால்சர்மா வரைந்த ராட்டினத்துடன் கூடிய திருவள்ளுவர் படத்தில் சில திருத்தங்களை செய்ய சொல்லி அறி வுறுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து சர்மா வரைந்த ஓவியம் தஞ்சையில் உள்ள ராமநாதன் ஹாலில் வைக்கப்பட்டு தமிழக புலவர் குழுவை சேர்ந்த பன்மொழிப்புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தர னார், கி.ஆ.பெ.விசுநாதம் அடங்கிய குழுவினர் திருவள்ளுவர் படம் குறித்து எழுப்பப்பட்ட பல வினாக்களுக்கு பாரதிதாசனே விளக்கம் அளித் துள்ளார். ஒன்றிய அமைச்சராக இருந்த டாக்டர் சுப்பு ராயன் முன்முயற்சியால் 15-02-1960-இல் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. பின்னர் 1964-இல் மார்ச் 3-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவையில் திருவள்ளுவரின் உருவப்படத்தை அப்போதைய குடியரசு துணைத்தலைவர் ஜாகீர் உசேன் திறந்துவைத்தார். சனாதன சக்திகளின் ஆக்கிரமிப்பு முயற்சிகளிலிருந்து திருவள்ளுவரை பாதுகாப்பது தமிழ்நாட்டின் கடமை.