சு.வெங்கடேசன் எம்.பி.யின் கேள்விக்கு அமைச்சர் பதில்
புதுதில்லி, டிச.24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பெட்ரோலிய நிறுவனங்கள் உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து வெளி நாடுகளுக்கு கச்சா எண்ணெய், டீசல், விமான எரிபொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் மீது “கூரையை பிய்த்து கொட்டும் லாபத் தின் மீதான வரி” (Windfall tax) அறி விக்கப்பட்டது. இதனால் தனியார் நிறுவ னங்களும் பயன் பெற்றன. அந்த வரி அண் மையில் கணிசமாக குறைக்கப்பட்டது. இது நிறுவன வாரியாக எவ்வளவு சலுகை களை தந்துள்ளது? அரசுக்கு இதனால் ஏற் படும் வரி இழப்பு எவ்வளவு? என்ற கேள்வி களை (2711/22.12.2022) எழுப்பி இருந்தேன். இதற்கு ஒன்றிய பெட்ரோலிய? இயற்கை வாயு இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி பதில் அளித்துள்ளார்.
அமைச்சர் பதில்
அந்த வரி கடந்த நவம்பர் 17, 2022-க்கும், டிசம்பர் 16, 2022 க்கும் இடையில் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு டன் கச்சா எண் ணெய் மீது போடப்பட்ட வரி ரூ .10500 தற் போது ரூ. 1700 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் மீது போடப்பட்ட ரூ. 10.50 தற்போது ரூ. 5 ஆகவும், 1 லிட்டர் விமான எரிபொருள் மீது போடப்பட்ட ரூ .5 தற்போது ரூ. 1.50 ஆகவும் குறைக்கப்பட்டு இருக்கிறது; இது சர்வ தேச சந்தையின் விலைகள், நாணயப் பரி மாற்ற விகித மாற்றங்களை, ஏற்றுமதி அளவு உள்ளிட்ட காரணிகளைப் பொருத்து 15 நாட்களுக்கு ஒரு முறை மறு நிர்ணயம் செய்யப்படுகிறது; இது குறித்த நிறுவன வாரி, சரக்கு வாரி விவரங்கள் நிதி அமைச்சகத்தின் வருவாய் துறையிடம் இல்லை என்று அமைச் சர் தெரிவித்துள்ளார்.
சு.வெங்கடேசன் கருத்து
அமைச்சரின் பதில் வியப்பை தரு கிறது. சாமானிய மக்களுக்கான மானியம் என்றால் துல்லியமான கணக்கை (?) அரசு கூறுகிறது. மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணசலுகை கேட்டால் நாங்கள் எல்லோ ருக்குமே 53 சதவீத மானியம் தருகிறோம் என்று உடனே அரசால் சொல்ல முடிகிறது. ஆனால் எவ்வளவு வரி நிறுவன வாரியாக திரட்டப்பட்டது? வரிக் குறைப்பால் அரசுக்கு எவ்வளவு இழப்பு? எந்தெந்த நிறுவனங்கள் பயன் பெற்றுள்ளன, எவ்வளவு? என்றால் அதற்கான கணக்கு அரசிடம் இல்லை என்று பதில் வருகிறது. ஏழை எளிய மக்கள் எனில் அது மானியம். கணக்கு துல்லியமாக இருக் கும். கார்ப்பரேட்டுகளுக்கு வரிக் குறைப்பு எனில் அதற்கு பெயர் ஊக்குவிப்பு. கணக்கே இல்லை. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.