கோட்டா, பிப்.25- ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த 17 வயது மாணவன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் அபிஷேக் யாதவ். கடந்த இரண்டு ஆண்டுகளாக, விடுதி ஒன்றில் தங்கியிருந்தபடி கோட்டா நகரில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார். இதனிடையே, அபிஷேக் யாதவ் கடந்த சில நாட்க ளாக பயிற்சி மையத்திற்கு செல்லாமல் இருந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று தனது விடுதி அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதி வைத்த குறிப்பை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில், தான் சிக்கலில் இருப்பதாகவும், படிப்பால் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறியிருக்கும் அபிஷேக் யாதவ், பெற்றோரிடம் தன்னை மன்னிக் கும்படி கூறியிருக்கிறார். இதனிடையே, தனது மகனின் படிப்பில் அழுத்தம் அதிகரித்ததற்கு நீட் பயிற்சி நிறுவனமே பொறுப்பு என மாணவரின் தந்தை கூறியுள்ளார். கோட்டா நகரில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 4 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.