திருச்சிராப்பள்ளி, ஜூலை 6- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தடயஅறிவியல் துறையின் பயன்பாட்டிற்காக குற்றம் நிகழ்விடத்திலேயே ஆய்வு களை மேற்கொள்ள ஏதுவாக ரூ. 3 கோடியே 92 லட்சத்து 70 ஆயிரம் செலவில் உருவாக்கப்பட்ட 14 நடமாடும் தடய அறி வியல் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நடமாடும் தடய அறிவியல் ஆய்வகங்கள் மூலம் ரத்தக்கறை, வெடிப்பொருட்கள், போதை பொருட்கள் மற்றும் துப்பாக்கிச்சூடு படிமங்கள் ஆகியவற்றை சம்பவம் நடைபெற்ற இடத்திலேயே பரிசோதிக்க முடியும். மேலும் குற்ற நிகழ்விடத்திலேயே குற்றச் செயலை அடையாளம் காணுவதற்கும், எவ்வித வெளிப்புற மாசுப்படுதலுக்கும் தடய பொருட்கள் உட்படாதவாறு ஆய்வு மேற்கொள்வ தற்கு வாகனத்தின் உட்கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள் ளது. இதனால் குற்ற சம்பவங்களை குறுகிய காலத்தில் புலனாய்வு செய்து, குற்றத்தை கண்டுப்பிடிக்க முடியும். இந்த வாகனங்கள் சென்னை திருச்சி, சேலம், திரு நெல்வேலி மற்றும் திருப்பூர் மாநகர ஆணையரகங்கள், வேலூர், தர்மபுரி, கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, விழுப் புரம், இராமநாதபுரம், தஞ்சை ஆகிய காவல் மாவட்டங்க ளின் தடய அறிவியல் ஆய்வக பயன்பாட்டிற்கு வழங்கப் பட்டுள்ளது. இந்த பிரத்யேக நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனம் செவ்வாய்க்கிழமை திருச்சிக்கு கொண்டு வரப் பட்டது. இதை திருச்சி மாநகராட்சி காவல் ஆணையர் கார்த்திகேயன் பார்வையிட்டு கூறுகையில், நடமாடும் தடய அறிவியல் வாகனத்தல் குற்றச்சம்பவங்கள் குறித்து துரித மான ஆய்வுகளின் முடிவுகள் பெறப்பட்டு, குற்றச்சம் பவங்களில் தெளிவாகவும், விரைவாகவும் முடிவு மேற் கொள்ள ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தார்.