சென்னை,மே6- தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி களில் சனிக்கிழமை ( மே 6 ) ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி யுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி களில் வரும் 8ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகக் கூடும். இது 9ம்தேதி வாக்கில் காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக மே7, 8 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச் சேரிமற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 9 மற்றும் 10ம் தேதி தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக் கால்பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை படிப்படியாக 2 - 4 டிகிரி செல்சி யஸ் உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்க ளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சி யஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 27 டிகிரிசெல்சியஸை ஒட்டியே இருக்கும். மீனவர்களுக்கு எச்சரிக்கை 7ம்தேதி மற்றும் 8ம்தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதி களின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60கிலோ மீட்டர்வேகத்திலும் வீசக்கூடும்.9ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் மற்றும் அந்த மான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும்.10ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும்இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில்சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர்வேகத்திலும் வீசக்கூடும்.