states

கருணாநிதிக்கு பிரம்மாண்ட பேனா நினைவுச்சின்னம்

சென்னை,ஜூலை 22- முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7 ஆம் தேதி வயது  முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு மெரினா கடற்கரை யில் அண்ணா நினைவிட வளாகத் தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ.39  கோடியில் அரசு சார்பில் நினை விடம் கட்டப்பட்டு வருகிறது. உதய சூரியன் வடிவத்தில் அமைக்கப்படும் நினைவிடத்தின் முகப்பில் பேனா வடிவத்தில் பிரம்மாண்ட தூண் ஒன்றும் அமைக்கப்படுகிறது. கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்க ளும் அந்த நினைவிடத்தில் அமைகி றது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.80 கோடி செலவில் பிரம்மாண்ட பேனா வடிவம் ஒன்றை 134 அடி உயரத்துக்கு (42 மீட்டர்) அமைக்க திட்டமிடப்பட் டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. மெரினா கடற்கரையில் கருணா நிதியின் நினைவிடத்தில் இருந்து 360  மீட்டர் தொலைவில் நடுக்கடலில் இந்த பிரம்மாண்ட பேனா வடிவிலான நினைவு சின்னத்தை அமைக்க அரசு திட்டம் வகுத்துள்ளது.

கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய கேட் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடையும் வகையில்  650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கவும் முடிவு செய்துள்ள னர். பாலத்தில் நடந்து செல்லும் பகுதி முழுவதும் கண்ணாடி தரையாக அமைக்கப்படும். இந்த பாலம் நிலத் தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டர் அமையும் வகையில் கட்டப்படும். கடல் மேல் 6 மீட்டர் உயரத்தில் இரும்பிலான இந்த கண்ணாடி பாலம் அமைக்கப்படும். கன்னியாகுமரியில் திருவள்ளூ வர் சிலையை பார்ப்பதற்கு படகில் சென்று வருவது போல்  மெரினாவில் இருந்து நடுக்கட லுக்கு கடலின் அழகை ரசித்தபடி நடந்து சென்று பேனா சின்னத்தை அடையும் வகையில் திட்டம் தீட்டப் பட்டுள்ளது.