states

ஓஎன்ஜிசி பணியாளர்களை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் அரபிக்கடலில் தரையிறங்கியது

மும்பை, ஜூன் 28- மும்பையிலிருந்து அரபிக்கடல் வழி யாக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி) பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று அரபிக்கடலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.  ஏழு பயணிகள் மற்றும் இரண்டு விமானி களுடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று, செவ்வாயன்று மும்பை ஓஎன்ஜிசி ரிக் சாகர் கிரண் அருகே அரபிக்கடலில் அவசர மாக தரையிறக்கப்பட்டது. பிற்பகல் 3.30 மணி வரை ஒன்பது பேர் மீட்கப்பட்டுள்ளதா கவும், தற்போது மீட்பு பணிகள் நடை பெற்று வருவதாகவும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி) தெரி வித்துள்ளது. இந்தியக் கடலோர காவல் படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள னர்.