states

img

இந்துத்துவா-கார்ப்பரேட் கூட்டணிக்கு எதிராக விரிவான கூட்டணி தேவை

கோழிக்கோடு, டிச. 31- இந்தியாவை ஆளும் இந்துத்து வா-கார்ப்பரேட் கூட்டணியை தோற் கடிக்க, தேர்தல் அரசியலுக்கு அப்பால் செயல்பட முடியும் என்று கேரள உள்ளாட்சித்துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் கூறினார். இந்திய தேசிய லீக் மாநில மாநாட் டின் ஒரு பகுதியாக கோழிக்கோடு முதல்குளத்தில் நடந்த ‘மதச்சார்பற்ற இந்தியாவின் எதிர்காலம்’ என்கிற தலைப்பிலான கருத்தரங்கை அமைச் சர் துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் மேலும் கூறியதா வது: தேர்தல்களில் பல்வேறு கட்சி கள் ஒன்றிணைவதால் மட்டும் மதச் சார்பற்ற இந்தியாவின் அச்சுறுத்தல் முடிவுக்கு வந்துவிடாது. அனைத்து நிலைகளையும் தொடும் நுட்பமான மற்றும் விரிவான அரசியலால் மட்டுமே இதை எதிர்கொள்ள முடியும் என்றும் ராஜேஷ் கூறினார். அரசியல் ரீதியாகவும், கருத்தி யல் மற்றும் பண்பாட்டு ரீதியாகவும் சங் பரிவாரத்தை எதிர்கொள்ள ஒருங்கி ணைந்த முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். மதச்சார்பற்ற இந்தியா,  மதவாத இந்தியாவாக பரிணமித்து வருகிறது. 2014இல் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இது தொடங்கி யுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம்  மதவாத அரசை உருவாக்கும் வழிக ளில் ஒன்றாகும். பாஜக சார்பில் இரண்டு முறை நாடாளுமன்றத்துக்கு வந்தவர்களில் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லை என்று அமைச்சர் ராஜேஷ் கூறினார். கருத்த ரங்கில் பேசியவர்கள், மதச்சார்பற்ற இந்தியாவையும், அரசியல் சாசனத் தையும் பாதுகாக்க விரிவான கூட்டணி தேவை என தெரிவித்தனர். அமைச்சர் அகமது தேவர்கோவில் தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பினோய் விஸ்வம், எம்.கே.ராகவன், சட்டமன்ற உறுப்பினர் கே.டி.ஜலீல், ஐஎன்எல் மாநில பொதுச் செயலாளர் காசிம் இரக்கூர், அஷ்ரப் அலி உள்ளிட்டோர் பேசினர்.

தொழிலாளர் மாநாடு

தொழிலாளர் சட்டங்களைத் தகர்த்து கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்காகச் சட்டங்களை இயற்றும் அர சுப் பயங்கரவாதத்தால் பாதிக்கப்படு வது நமது நாட்டில் உள்ள தொழி லாளர்கள் என்று மாநாட்டின் ஒரு பகுதி யாக நடைபெற்ற தொழிலாளர்கள் மாநாடு மதிப்பீடு செய்தது. தேசிய லீக் தொழிற்சங்கத்தின் தேசிய பொதுச் செயலாளர் எஸ்.எம்.பஷீர் மாநாட்டை துவக்கி வைத்தார். மாநில தலைவர் ஏ.பி.முஸ்தபா தலைமை வகித்தார். தொழிற்சங்க பிரதிநிதிகள் கே.ராஜீவ், ஏ.ஏ.ரஹ்மத்துல்லா, சதாத் சாரும் மூத், பஷீர் செளரி, இல்யாஸ் மட்டன் னூர், சி.எம்.ஏ.ஜலீல், உதயீப் உல்னம் ஆகியோர் பேசினர். தேசிய தலைவர் கள்,  புலம் பெயர்ந்தோர் குடும்ப சங்க மம் மற்றும் விருந்து நிகழ்ச்சி  நடை பெற்றது. ஐஎன்எல் மாநில மாநாடு வெள்ளி யன்று (டிச.30) நிறைவடைந்தது. நிறைவு நிகழ்ச்சியை ஐஎன்எல் தேசிய தலைவர் பேராசிரியர் முகமது சுலை மான் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தி னராக திமுக செயலாளர் கனிமொழி எம்.பி,. இடது ஜனநாயக முன்னணி அமைப்பாளர் ஈ.பி.ஜெயராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கானம் ராஜேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.