முதல்வர்களின் வீடு அருகே வெடிகுண்டு
சண்டிகர், ஜன. 2 - சண்டிகரின் உத்தம் மார்க் பகுதியில் உள்ள பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் வீடு அருகே 500 மீட்டர் தொலைவில் உள்ள ஹெலிபேடில் இருந்து வெடிகுண்டை சண்டிகர் போலீசார் கைப்பற்றினர். வெடிகுண்டு செய லிழக்கும் படை சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். வெடிகுண்டு கண்டுபிடிக்கப் பட்ட இடத்திற்கு அருகில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் வீடும் உள்ளது.
என்ஐஏ மோசடி : மேலும் ஒருவர் கைது
சென்னை, ஜன. 2 - சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் போல நடித்து பணம் கொள்ளையடித்த வழக்கில் வேம்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த கோபி என்பவர் 11-வது நபராக கைது செய்யப் பட்டுள்ளார். மதுபாட்டில் வாங்க ரூ.500 தந்தால் போதும் எனக்கூறி கும்பலில் இணைந்த கோபிக்கு, ரூ.25,000 பணத்தை கொள்ளைக் கும்பல் கொடுத்துள்ளதாகவும் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
6 நாடுகளின் விமானங்களுக்கு புதிய உத்தரவு
புதுதில்லி, ஜன. 2 - சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், தென் கொரியா, தாய்லாந்து, ஜப்பான் 6 ஆகிய நாடுகளில் இருந்து வரும் அனைத்து சர்வதேச விமானங்கள் பயணிகளை விமா னத்தில் ஏற்றும் முன் கொரோனா பரிசோதனை சான்றிதழை பெற்றபின் ஏற்ற வேண்டும். முக்கியமாக பரிசோதனை சான்றிதழ் 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்டிருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட 6 நாடுகளின் வழியாகச் செல்லும் பயணிகளுக்கும், இந்திய விமான நிலையத்தில் இறங்குவதற்கும் வரு வதற்கும் 72 மணி நேர கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
‘வரலாற்று வரிசையில் இடம்பெறும் மாறுபட்ட தீர்ப்பு’
“பணமதிப்பு நீக்க விவகாரத்தில் சட்டவிரோதம் மற்றும் முறைகேடுகளை மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி சுட்டிக்காட்டி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது இது அரசின் மணிக்கட்டு பகுதியில் மட்டுமே அறைந்துள்ளது. ஆனாலும், அது வரவேற்கக் கூடியது. மாண்புமிக்க உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றில், இந்த மாறுபட்ட தீர்ப்பானது, புகழ்பெற்ற மாறு பாடான தீர்ப்புகளின் வரிசையில் இடம்பெறும். ஒரு நீதிபதியின் இந்த மாறுபட்ட தீர்ப்பு, நாடாளு மன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரம் மற்றும் அதனை செயல்படுத்தும் அரசின் வரைமுறைக்கு உட்பட்ட அதிகாரம் ஆகியவற்றுக்கு இடையேயான உள்ளார்ந்த வேறுபாட்டை முன்னே கொண்டு வந்துள்ளது. ஜனநாயகத்தில் நாடாளுமன்றத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அந்த ஒரு நீதிபதியின் மாறுபட்ட தீர்ப்பு வலியுறுத்தி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இன்று மீண்டும் ராகுல் நடைபயணம்: அகிலேஷ் வாழ்த்து!
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம், ஒருவார ஓய்வுக்குப் பின், செவ்வாயன்று மீண்டும் துவங்குகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் வழியாக பஞ்சாப்பைக் கடந்து காஷ்மீரை நோக்கி இந்த பயணம் புறப்படுகிறது. முன்னதாக, உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் நடைபயணத்தில் கலந்து கொள்ளுமாறு உ.பி. முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ், மாயாவதி ஆகியோருக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், நடைபயணத்திற்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி தெரிவித்து அகிலேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “நடைபயணம் வெற்றிபெற வாழ்த்துகிறேன். நம் நாட்டின் கலாச் சாரத்தை பாதுகாக்கும் இலக்கை இந்த நடைபயணம் அடையும் என்று நம்புகிறேன்” எனத் தெரி வித்துள்ளார்.
பொருளாதார ஆலோசனைக் குழுவில் அம்பானி, அதானி மகன்கள்!
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானியின் மகன் கரண் அதானி ஆகியோர், மகாராஷ்டிர பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மகாராஷ்டிர பொருளாதார ஆலோசனைக் குழுவில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் அம்பானி மின் துறை பிரதிநிதியாக செயல்படுவார். அதானி துறைமுகத்தின் தலைமை செயல் அதி காரியான கரன் அதானி, துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதாரப் பிரிவுகளுக்கு பிரதிநிதியாக செயலாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல வேறுபல முதலாளிகளும் ஆலோசனைக் குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
2-ஆவது வாரமாக அந்நிய செலாவணியில் சரிவு!
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2022 டிசம்பர் 23-ஆம் தேதியுடன் நிறை வடைந்த வாரத்தில் 56,280.8 கோடி டாலராக சரிந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பு 57.1 கோடி டாலர் குறைந்து 56,349.9 கோடி டாலராக இருந்தது. இது 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், மேலும், 69.1 கோடி டாலர் குறைந்து 56,280.8 கோடி டாலராக உள்ளது. அந்த வகையில், அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரிவைக் கண்டுள்ளது.
கேஸ் சிலிண்டர் விலை உயர்வுதான் புத்தாண்டு பரிசா?
2023ஆம் ஆண்டின் முதல் நாளிலேயே, வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை மோடி அரசு ரூ. 25 உயர்த்தியது. இதன் காரணமாக சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ. 1,892-இல் இருந்து, ரூ. 1,917 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலை யில், வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. மோடி அரசின் “புத்தாண்டுப் பரிசுதான் இது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 25 உயர்ந்துள்ளது. இது ஒரு தொடக்கமே” என்று தெரிவித்துள்ளது.
புதிய இந்தியாவின் புதிய தந்தை நாட்டிற்கு என்ன செய்தார்?
‘‘நாட்டில் இரண்டு தேசப்பிதாக்கள் உள்ளனர். ஒருவர் இந்தியாவின் முந்தைய காலத்தின் தந்தை. மற்றொருவர், நவீன இந்தியாவின் தேசத் தந்தை. முந்தைய காலத்தின் தேசத் தந்தை மகாத்மா காந்தி. நவீன இந்தியாவின் தேசத் தந்தை பிரதமர் நரேந்திர மோடி’’ என்று மகா ராஷ்டிர மாநில பாஜக துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் மனைவி அம்ருதா பட்னவிஸ் அண்மையில் பேசியிருந்தார். இதற்கு ஏற்கெனவே பலர் கண்டனங்களைத் தெரிவித்திருந்த நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் தற்போது கண்டனம் தெரிவித்துள்ளார். “சுதந்திரப் போராட்டத்திற்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆர்எஸ்எஸ் சுதந்திரப் போராட்டத்தில் பங்களிக்கவில்லை. ‘தேசத்தின் புதிய தந்தை’ என்ற கருத்தைப் பற்றி நாம் படித்தோம். ‘புதிய இந்தியாவின்’ ‘புதிய தந்தை’ தேசத்திற்கு என்ன செய்தார்? யாராவது தெரிந்தால் தயவுசெய்து கூறுங்கள்” என நிதிஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.
அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்: சித்தராமையா
“கர்நாடகத்தில் சித்தராமையா முதல்வராக இருந்தபோது, தற்போது தடை செய்யப்பட்டி ருக்கும் ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’வின் 1,700 உறுப்பினர்கள் மீதான வழக்கு களைத் திரும்ப பெற்றார்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். இதற்கு, சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார். “மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பொய்யான குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் அல்லது தான் கூறியது பொய் என்று மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஐடிபிஐ வங்கியில் கடன் மோசடி ரூ.20.31 கோடி சொத்துக்கள் பறிமுதல்
குண்டூர், ஜன.2- ஆந்திர மாநிலம் குண்டூர் கிளையில் உள்ள ஐடிபிஐ வங்கியில் மீன் வளர்ப் பிற்கு என்று கூறி சுப்ரமணியம், சீனிவாச ராவ், கந்தூரி மல்லிகார்ஜுன ராவ், எலூரி பிரசாத ராவ் ஆகிய 4 பேர், அப்போ தைய ஐடிபிஐ வங்கி மேலாளர் சந்திரசேகர் ஹரிஷ் சென்னப்பகாரியுடன் சேர்ந்து கிசான் கிரெடிட் கார்டு (கேசிசி) மூலம் 247 கடனாளிகளின் பெயர்களில் மோசடியாக ரூ.57.10 கோடி கடன் பெற்றுள்ளனர்.இந்த விவகாரம் வெளியே கசிய மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாகப்பட்டி னம், ஹைதராபாத் ஆகிய இடங்களில் சோதனை மூலம் விசாரணை நடத்தியது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ரூ.20.31 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை அமலாக்கத்துறை தற்காலி கமாக முடக்கியுள்ளது.
நான் இந்தியக் குடிமகன் என்பதுதான் எனது அரசியல்!
புதுதில்லி, ஜன.2- “நமது மிகப்பெரிய பலம் ஜனநாயகம் என்று நான் நம்பு கிறேன். மத நல்லிணக்கம்தான் நமது மிகப்பெரிய பலம் என்று நான் நம்புகிறேன். விவாதம்தான் நமது மிகப்பெரிய பலம் என்று நான் நம்புகிறேன். இவை அனைத்தும் தற்போது அச்சுறுத்த லில் இருப்பதாக நான் நம்புகிறேன். எனவே, ஜனநாயகம், மத நல்லிணக்கத்தை வலுப்படுத்துவோம் என்று கூறுபவர்களோடு, எனது குரலையும் சேர்க்க விரும்புகிறேன், எனவே ஒரு குடி மகனாக இது (ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கலந்து கொண்டது) ஒரு சிறிய நடை. நான் அரசியல் நோக்கத்தை பிரதிபலிக்கவில்லை” என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
சத்தீஸ்கரில் அடித்து நொறுக்கப்பட்ட தேவாலயம்
ராய்ப்பூர், ஜன. 2 - சத்தீஸ்கர் நாராயண்பூர் மாவட்டத்திற்குட்பட்ட எட்கா கிராமத்தில் தேவாலயம் ஒன்றில் மதமாற்றம் நடப்பதாக பரப்பப்பட்ட செய்தியால் பழங்குடியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் ஒரு கட்டத்தில் மோதலாக வெடிக்க அருகில் இருந்த தேவாலயம் அடித்து நொறுக் கப்பட்டது. மோதலை கட்டுக்குள் கொண்ட வர போலீசார் முயற்சித்த பொழுது, தாக்குதலில் சிக்கி நாராயண்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதானந்த் குமார் காயமடைந்தார்.
அன்பழகன் சிலைக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்
சென்னை,ஜன.2- சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவை உடையாம்பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமி தாக்கல் செய்த பொதுநல மனுவில், “மறைந்த தலை வர்களை கவுரவிக்க அவர்கள் பெயரில் நலத் திட்டங்களை தொடங்கி னால், பொதுமக்களுக்கு பயன ளிக்கும். அதை விடுத்து சிலைகளை அமைப்பதால் அரசுக்கு செலவு ஏற்படுவதுடன், எதிர்க்கட்சியினரின் விரோதத்தையும் ஏற்படுத்தும். ஏற்கெனவே சென்னை நந்தனத்திலுள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் அன்பழகனுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, டிபிஐ வளாகத்தில் அவரது சிலையை அமைக்க தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். அந்த வழக்கை அவரே திரும்பப்பெற்றுக் கொண்டதால் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பொங்கல் கரும்பு வழக்கு முடித்துவைப்பு
சென்னை, ஜன.2- சென்னை உயர் நீதிமன்றத் தில், கடலூர் மாவட்டம், மதனகோபால புரத்தைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் பொங் கல் பண்டிகையையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதில் கரும்பு இடம் பெறாதது குறித்து பல தரப்பி னரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற னர். இந்நிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கர வர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்தி ரன், “பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என தமிழக முதல் வர் அறிவித்திருக்கிறார்” என்று தெரி வித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு செல் லத்தக்கதல்ல எனக்கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.
உ.பி.யில் அம்பேத்கர் சிலை உடைப்பு
லக்னோ, ஜன. 2 - பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ரத்தன் புரி காவல் நிலைய எல்லைக் குட்பட்ட கிராமத்தில் ஞாயி றன்று அம்பேத்கரின் சிலை யை அடையாளம் தெரியாத சிலர் சேதப்படுத்தினர். கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி யில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் ஹெலிகாப்டர்கள் மோதல்
சிட்னி, ஜன. 2 - ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகா ணத்தில் உள்ள “சீ வேர்ல்டு (SEA WORLD)” கேளிக் கை விடுதி அருகே நிலப்பரப் பில் இருந்து வானத்திற்கு பறக்க தயாரான ஹெலி காப்டரும், தரையிறங்க முயற்சித்த ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். 3 பேர் கவலைக்கிடமான நிலை யில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காரில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்
புதுதில்லி, ஜன. 2 - புத்தாண்டு தினத்தன்று தில்லியில் மது அருந்தி விட்டு கார் ஓட்டிச் சென்ற 5 பேர், தங்களது கார் ஒரு இளம்பெண்ணை அடித்து இழுத்துச் சென்று வந்த தைக் கூட அறியாமல் கொண்டாட்ட போதையில் இருந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22 வய தான அஞ்சலி என்ற பெண் ணை அந்தக் கார் மோதி ஒன்றரை மணி நேரம் இழுத் துச் சென்றது. அப்பெண் அதில் மரணமடைந்தார்.