சென்னை,மே 22- மிதிவண்டி வீராங்கனைக்கு ரூ. 14 லட்சம் மதிப்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட் டுத்துறை அமைச்சர் சைக்கிள் வழங்கி னார். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வரும் ஷா. தபித்தா, சைக்கிளிங் வீராங்கனை யாவார். இவர் 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் அசாம் மாநிலம் கவுகாத்தி யில் நடைபெற்ற 14 வயதிற்குட் பட்டோருக் கான தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். இந்த ஆண்டில், ஜனவரி மாதத்தில் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் நடைபெற்ற 27-வது தேசிய அளவிலான மிக இளையோர் (மகளிர்) சைக்கிளிங் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். தேசிய அளவில் நடைபெற்ற சைக்கிளிங் போட்டியில் வெற்றி பெற்று,
தற்பொழுது, பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவதற்குரிய பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அதற்கு ஏதுவாக போட்டிகளுக் கென்று பிரத்யேகமாக வடிவமை க்கப்பட்ட மிதிவண்டி வழங்கினால் பல்வேறு சாதனைகளை படைத்து நமது மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க முடியும் என்று அமைச்சர் உதயநிதியிடம் கோரிக்கை வைத்திருந்தார். அவரது கோரிக்கையை பரி சீலித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மிதிவண்டி வழங்கும் நட வடிக்கையை மேற்கொள்ள தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிக ளுக்கு உத்தர விட்டார். இதனை தொடர்ந்து, குறிப் பிட்ட மிதிவண்டியை, சைக்கிளிங் வீராங்கனை செல்வி ஷா தபித்தா கேட்டுக்கொண்டபடி தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.13.99 லட்சம் மதிப்பிலான மிதிவண்டியை திங்களன்று (மே 22) தலைமைச் செயலகத்தில் வழங்கி னார் அமைச்சர் உதயநிதி. இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட் டுத்துறை கூடுதல் தலைமைச் செய லாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாதரெட்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தனது கோரிக்கையினை ஏற்று மிதிவண்டி வழங்கிய அமைச்சர் உதயநிதிக்கும் அதிகாரிகளுக்கும் நன்றி சொன்னதோடு, “சர்வதேச அளவில் நடக்கும் போட்டியில் கலந்து கொண்டு, வெற்றி பெற்று நம் தமிழ்நாட்டிற்கு பெருமைத் தேடி தருவேன்” என்றார் வீராங்கனை ஷா.தபித்தா.