அமராவதி, ஏப்.1- ஆந்திராவில் நீதிமன்ற அவமதிப்பு வழக் கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 8 ஐஏஎஸ் அதிகாரிகள் நீதிமன்றத்திடம் மன்றாடி யதால் தண்டனை குறைக்கப்பட்டது. ஆந்திராவில் அரசுப் பள்ளிகளில் இயங் கும் கிராம, வார்டு செயலகங்களை உடனே அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சி யர்களுக்கு 2020 ஆம் ஆண்டு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஐஏஎஸ் அதிகாரிகள் எம்.எம்.நாயக், விஜயகுமார், கோபாலகிருஷ்ண திரி வேதி, கிரிஜா சங்கர், ராஜசேகர், சின வீர பத்ருடு, சியாமளராவ், ஸ்ரீலட்சுமி ஆகிய 8 பேர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வில்லை என்று புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில், இந்த 8 ஐஏஎஸ் அதிகாரிகளும் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்ததாக உயர் நீதிமன்றம் கருதி யது. இதனால் 8 அதிகாரிகளுக்கும் 2 வார சிறை தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஐஏஎஸ் அதி காரிகள் உடனடியாக தங்கள் தவறுக்கு மன்னிக்க வேண்டும் என நீதிமன்றத்திடம் மன்றாடினர். இதனால், மனமிறங்கிய நீதி மன்றம், சிறை தண்டனையை ரத்து செய்தது. மாறாக சமூக நலத்துறையின் கீழ் செயல் படும் மாணவர் விடுதிகளுக்குச் சென்று, மாதத்திற்கு ஒருமுறை அங்குள்ள மாண வர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், அன்றைய தினம் மாணவ, மாணவியரின் 3 வேளை உணவுக் கான செலவையும் ஏற்க வேண்டும் என்று நீதி மன்றம் உத்தரவிட்டது.