states

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

36ஆவது ரபேல் போர் விமானமும் இந்தியா வந்து சேர்ந்தது!

பிரான்ஸ் நாட்டின் ‘டஸ்ஸால்ட்’ என்ற நிறுவனத்திடமிருந்து 58 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, 36 ரபேல் போர் விமானங்களை வாங்க 2016-இல் நரேந்திர மோடி அரசு ஒப்பந்தம் செய்தது. கடந்த 2020 ஜூலையில் முதற்கட்டமாக 10 விமானங்கள் இந்தியா வந்தன. அவை, இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டன. அடுத்து பல கட்டங்களாக ரபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், 36-ஆவது மற்றும் கடைசி ரபேல் விமா னமும் வியாழனன்று (டிச.15) இந்தியா வந்து சேர்ந்துள்ளது.

6 மாதத்தில் 68 முறை விபத்தில் சிக்கிய ‘வந்தே பாரத்’!

இந்தியாவின் புல்லட் ரயில் என்று அழைக்கப்படும் வந்தே பாரத் (vande bharat) ரயில் தொடர்  பாக கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில ளித்துள்ளார். அதில், கடந்த 6 மாதங்களில் ‘வந்தே பாரத்’ ரயில் 68 முறை விலங்குகள் மோதி யதில் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ஒருமுறை பிரேக் கோளாறு ஏற்பட்டுள்ளது என தெரி வித்துள்ளார். வந்தே பாரத் ரயில் சேவை மணிக்கு அதிகபட்சமாக 200 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. தற்போது இந்த ரயில் சேவை தில்லி - வாரணாசி, சென்னை - மைசூரு, மும்பை - காந்தி நகர் உள்ளிட்ட 6 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.

ஒன்றிய அரசுப் பணிகளில் 9.79 லட்சம் காலிப்பணியிடங்கள்!

ஒன்றிய அரசுப் பணிகளில் 9.79 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக மக்க ளவையில் ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். 2021 மார்ச் செல வினத் துறையின் ஊதிய ஆய்வு அறிக்கையின்படி ஒன்றிய அரசின் கீழ் உள்ள பல்வேறு அமைச்ச கங்கள் மற்றும் துறைகளில் 9 லட்சத்து 79 ஆயிரத்து 327 பணியிடங்கள் காலியாக உள்ளன.   அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்திய குடிமைப் பணிகளிலும் 1472 காலிப்பணியிடங்கள் உள்ளன என்று அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தியாவில் 3 ஆண்டுகளில் 659 ஆசிட் வீச்சு வழக்குகள்!

இந்தியாவில் 2018 மற்றும் 2020-க்கு இடையே பெண்களுக்கு எதிரான ஆசிட் தாக்கு தல்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 659 ஆக  உள்ளது. இதில், 160 வழக்குகளுடன் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசம் (115), ஒடிசா (35), மத்தியப் பிரதேசம் (34), பீகார் (30), பஞ்சாப் (29), குஜராத் (27), கேரளா (27), தில்லி  (23) என இடங்களைப் பெற்றுள்ளன. தமிழ்நாடு (18) பட்டியலில் 23 ஆவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் நாளொன்றுக்கு பதிவாகும் 20 வரதட்சணை சாவுகள்!

இந்தியாவில் கடந்த 2017 முதல் 2021 வரையிலான 5 ஆண்டுகளில் மொத்தம் 35 ஆயி ரத்து 493 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன. அதாவது சராசரியாக நாளொன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள் நடந்துள்ளன. இந்த 5 ஆண்டுகளில் அதிகபட்சமாக பாஜக உத்தரப்  பிரதேசத்தில் 11 ஆயிரத்து 874 வரதட்சணை மரணங்களும், இதற்கு அடுத்தபடியாக பீகாரில் 5 ஆயி ரத்து 354, மத்தியப் பிரதேசத்தில் 2 ஆயிரத்து 859,மேற்கு வங்கத்தில் 2 ஆயிரத்து 389, ராஜஸ்தா னில் 2 ஆயிரத்து 244 என்ற எண்ணிக்கையில் வரதட்சணை சாவுகள் பதிவாகியுள்ளன. தென்மாநி லங்களில் குறைந்த அளவாக கர்நாடகத்தில் 934, தமிழ்நாட்டில் 198, கேரளத்தில் 52 என்ற எண்ணிக்கையிலேயே வரதட்சணை மரணங்கள் இருந்துள்ளன. இதனை ஒன்றிய அரசின் உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

காஷ்மீரில் 3 ஆண்டுகளில் 9 பண்டிட்டுகள் கொலை!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு உரிமை ‘370’ ரத்து செய்யப்பட்டதற்கு பிந்தைய “கடந்த  3 ஆண்டுகளில் 9 காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 2022-ஆம் ஆண்டில் 4 பேரும், 2020-ஆம் ஆண்டில் ஒருவரும், 2021-ஆம் ஆண்டில் 4 பேரும் கொல்லப்  பட்டுள்ளனர். இதில், காஷ்மீர் ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் கொலை செய்யப்பட்டுள் ளார். இதனை ஒன்றிய இணையமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் தெரி வித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் ஜம்மு - காஷ்மீரின் பாதுகாப்பு திட்டங்களுக்காக சுமார்  2,815 கோடி ரூபாயை ஒன்றிய உள்துறை அமைச்சகம் செலவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

சிபிஐக்கான பொது ஒப்புதல் 9 மாநிலங்களில் ரத்து!

தில்லி சிறப்பு போலீஸ் நிறுவப்படுதல் சட்டம்-1946-இன் படி, மாநிலங்களின் அதிகார எல்லைக்கு உட்பட்ட விவகாரங்களில், சிபிஐ விசாரணை மேற்கொள்ள அந்தந்த மாநிலங்களின் ஒப்புதல் அவசியமாகும். இதன்படி மாநில அரசுகள் ஏற்கெனவே சிபிஐ-க்கு பொது அனுமதியை அளித்திருந்தன. ஆனால், நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, சிபிஐ எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த பின்னணியில் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், கேரளா, மேகாலயா, மிசோரம், பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் சிபிஐ-க்கான அனுமதியை ரத்து செய்துள்ளன. இதனை ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை சர்வதேச திரைப்பட விழா

சென்னை,டிச.15- இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில் ஆண்டு தோறும் சிஐஎப்எப் எனப்படும் சென்னை  சர்வதேச திரைப்பட விழா நடத்தப் பட்டு வருகிறது. 2003 ஆம் ஆண்டு முதல் நடை பெற்று வரும் இந்த திரைப்பட விழாவில் உலகம் முழுவதும் பல்வேறு  மொழிகளை சேர்ந்த சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான சென்னை சர்வதேச திரைப்பட விழா டிச.15 அன்று தொடங்கி 22 வரை சென்னையில் நடைபெறுகிறது. தமிழ்ப் படங்களுக்கான போட்டிப் பிரிவில் மொத்தம் 30 படங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் ஆதார், இரவின் நிழல், இறுதிப் பக்கம், மாமனிதன், கார்க்கி, கசட தபற,  நட்சத்திரம் நகர்கிறது, ஓ2, பிகினிங், கோட், பபூன், யுத்த காண்டம் ஆகிய 12 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதிலிருந்து சிறந்த படம், சிறந்த இரண்டாவது படம், நடுவர்கள் சிறப்பு விருது, சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த  ஒலிப்பதிவாளர் ஆகிய 8 விருதுக ளுடன் திரையுலகில் சிறந்து விளங்கி வரும் ஒருவருக்கு ‘அமிதாப் பச்சன் யூத் ஐகான் விருது’ உட்பட மொத்தம் 9 விருதுகள் வழங்கப்பட உள்ளன. தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திரைப்பட விழாவை தொடங்கி வைத்தார் அரசுத்திரைப்படக் கல்லூரி மாணவர்களின் 9 குறும்படங்கள் திரை யிடப்பட உள்ளன. சென்னை சத்யம்  சினிமா வளாகத்தில் உள்ள 4 திரை யரங்குகள், அண்ணா திரையரங்கம் உட்பட மொத்தம் 5 திரையரங்குகளில் 4 காட்சிகள் வீதம், ஒவ்வொரு நாளும் 20 படங்கள் திரையிடப்படவுள்ளன.

கிளாம்பாக்கம்  பேருந்து நிலையம் திறப்பு தாமதமாகும்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை,டிச.15- பொங்கலுக்கு முன்பு கிளாம் பாக்கம் பேருந்து நிலையம் திறக்க வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி  குழு அமைச்சர் பி.கே. சேகர்பாபு  வியாழனன்று (டிச.15) கிளாம்பாக்கத் தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகளை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தி யாளர்களிடம் பேசிய அவர், “பேருந்து  நிலைய கட்டுமானப் பணிகளை  விரைந்து முடிக்க அறிவுத்தப்பட்டு டுள்ளது”என்றார்.  கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 88 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. இங்கு 285 பேருந்துகள் வந்து செல்ல  முடியும். எந்த அளவுக்கு விரைந்து முடிக்க முடியுமோ அந்த அளவுக்கு விரைவாக  கட்டுமானப் பணிகளை முடித்து விரைவில் மக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார். புயல், மழையால் கட்டுமான பணி கள் பாதிக்கப்பட்டுள்ளதால் பொங்கல் பண்டிகைக்கு முன்பு  கிளாம்பாக்கம் பேருந்து நிலை யத்தை திறப்பது கடினம் என்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவையை விரி வாக்கம் செய்யவும் கோரிக்கை விடுத்திருக்கிறோம். இதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப் பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வடகிழக்கில் விமானப்படை பயிற்சி

வடகிழக்கு பிராந்தியத்தில் ஒட்டுமொத்த போர்-சண்டை திறன் மற்றும் இராணுவ தயார்நிலையை சோதிக்க இந்திய விமானப்படை (IAF) இரண்டு நாள் பயிற்சியைத் தொடங்கியுள்ளது. இந்த பயிற்சியானது, மிகவும் முன்னதாகவே திட்டமிடப்பட்டிருந்தாலும், அருணாச்சல பிரதேசத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை மோதல் பற்றிய செய்திகளுக்கு மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சுகோய்-30எம்கேஐ ரக விமானங்கள் மற்றும் ரஃபேல் உட்பட கிட்டத்தட்ட விமானப்படையின் அனைத்து முன்னணி ஜெட் விமானங்களும் இந்த பயிற்சியில் ஈடுபடும்.

ஆட்டோவிலிருந்து குதித்த செவிலியர்

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் செவிலியரை பலாத்காரம் செய்ய முயன்ற ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளனர். காரார்-குராலி சாலையில் உள்ள ராயத் பஹாரா மருத்துவமனை அருகே ஆட்டோவில் இருந்து குதித்து அந்தப் பெண் தன்னைக் காப்பாற்றிக் கொண்டதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் சந்தீப் கார்க் தெரிவித்தார். குற்றத்திற்கு பயன்படுத்திய ஆட்டோவையும் போலீசார் மீட்டனர்.

நவி மும்பையில் நகை பூங்கா

நவி மும்பையில் ரூ.60,000 கோடி முதலீட்டில் ரத்தினங்கள் மற்றும் நகை பூங்கா திறக்கப்படும் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார். இந்த பூங்கா திறமையான மற்றும் திறமையற்ற நிபுணர்களுக்கு மொத்தம் 1 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று ஃபட்னாவிஸ் கூறினார். 80 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப் படும் இந்த பூங்கா, உலகிலேயே மிகப்பெரிய பூங்காவாக இருக்கும் என்றார்.

மும்பையில் தாமதமான ரயில்கள்

மத்திய ரயில்வேயின் மும்பை துறைமுகம் மற்றும் டிரான்ஸ்-ஹார்பர் வழித்தடங்களில் உள்ள ரயில்கள் ஜுய்நகர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதமாக இயக்கப்பட்டன. ரயில்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, காலை 6 மணியளவில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் தீர்க்கப்பட்டது, ஆனால் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. ஹார்பர் லைனில் குறைந்தது 20 நிமிடங்களாவது தாமதமாக ஓடியதாக பயணிகள் தெரிவித்தனர்.

மும்பை பல மாடி கட்டிடத்தில் தீ

மும்பையின் லோயர் பரேல் பகுதியில் உள்ள ஒன் அவிக்னா பார்க் கட்டிடத்தின் 14வது மாடியில் வியாழக்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ஐந்து தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த ஆண்டில் இக்கட்டிடத்தில் ஏற்பட்ட மூன்றாவது தீ விபத்து இதுவாகும்.

2 ஆப்பிரிக்கர்கள் அச்சிட்ட கள்ளநோட்டு

பெங்களூரு நகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) ஒரு வாரத்திற்கு முன்பு ஹோரமாவுவில் உள்ள ராஜண்ணா லேஅவுட்டில் உள்ள ஒரு வீட்டில் இருந்து இரண்டு ஆப்பிரிக்கர்கள் நடத்திய கள்ளநோட்டு மோசடியை முறியடித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை அந்த வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. போலி நாணயங்கள், இரசாயன கரைசல்கள் மற்றும் பிற மதிப்பு மிக்க பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கரன்சி நோட்டுகளின் முகமதிப்பு ரூ.1.1 கோடி ஆகும்.

ஐநா தலைமையகத்தில் காந்தி சிலை

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த சிலை, ஐநாவின் வடக்கு புல்வெளி தோட்டத்தில் நிரந்தரமாக அமைக்கப்படும் முதல் காந்தி சிற்பம் ஆகும். “இந்த புனிதமான வளாகங்களில் அவரது இருப்பு ஐ.நா. அதன் ஸ்தாபக இலட்சியங்களுக்கு ஏற்ப செயல்பட உத்வேகம் அளிக்கட்டும்” என்று ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.

பனி படர்ந்த சாலை: 30 பேரை ராணுவம் மீட்டது

ஜம்மு-காஷ்மீரில் பனி படர்ந்த முகலாய சாலையில் 15 வாகனங்கள் சிக்கின. இதனால் தவித்த 30 பயணிகளை இந்திய ராணுவம் மீட்டுள்ளது. பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சிவில் நிர்வாகத்திடம் இருந்து உதவி கோரி ராணுவத்துக்கு ஒரு துயர அழைப்பு வந்தது. ஒரு டிரக்  கவிழ்ந்து.சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுத்தது என்றார்.

உ.பி. : 16 நகரங்களில் 5,000 சிசிடிவி

உத்தரப்பிரதேச அரசு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக என்று 16 நகரங்களில் 5,000 சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். “இப்போது ஒரு குற்றவாளி... ஒரு சந்திப்பில் நம் சகோதரிகள் மற்றும் மகள்களை துன்புறுத்தி, மற்றொரு சந்திப்பில் கொள்ளையடிக்கும் குற்றவாளி, அடுத்த சந்திப்பில் உடனடியாக பிடிபடுவார்”  என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். நகரங்கள் புத்திசாலித்தன மாகவும் பாதுகாப்பாகவும் மாறி வருகின்றன என்றும் அவர் கூறிக் கொண்டார்.

பள்ளி மாணவர்களிடையே ஆயுதக் குழுக்கள்

புனேயில் உள்ள ஒரு பள்ளியில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இடையே நடந்த சண்டையில் இரு ஆயுதக் குழுக்களும் இறங்கி மோதிக் கொண்டன. இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கள்கிழமை நடந்த மோதலைத் தொடர்ந்து சட்டம் -ஒழுங்கை நிலைநாட்ட அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

‘ரகுராம் ராஜனின் திறமைக்கு ஈடாகாது’

பாஜகவின் ஒட்டுமொத்த அமைச்சரவையும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனின் திறமைக்கு நிகராக முடியாது  என்று காங்கிரஸின் ஊடகத் துறைத் தலைவர் பவன் கேரா  விமர்சித்தார். பணமதிப்பிழப்பு முடிவு குறித்து ராஜன் போன்றவர்களிடம் பாஜக ஆலோசனை கேட்டிருந்தால் இந்தியாவின் பொருளாதாரம் “பேரழிவில்” இருந்து காப்பாற்றப்பட்டிருக்கும் என்று கேரா மேலும் கூறினார். பாரத் ஜோடோ யாத்ராவில் இணைந்ததற்காக ராஜனை, பாஜகவின் அமித் மாளவியா விமர்சித்ததை அடுத்து பவன்கேரா இவ்வாறு கூறினார்.

‘சொத்துக்களை பிரியுங்கள்’

தெலுங்கானாவுடனான சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை “நியாயமான, சமமான மற்றும் விரைவான” முறையில் மேற்கொள்ளக் கோரி ஆந்திரப் பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 2014இல் மாநிலம் பிரிக்கப்பட்டதிலிருந்து சொத்துக்களின் உண்மையான பிரிப்பு  தொடங்கவில்லை என்று ஆந்திரா கூறியுள்ளது. 91% சொத்துக்கள் ஹைதராபாத் தில் உள்ளன. இது ஆந்திர மக்களை கடுமையாக பாதிக்கிறது எனக்கூறியுள்ளது.

‘பின்லேடனுக்கு விருந்தளித்தீர்கள்’

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) பாகிஸ்தான் குறித்து கருத்து தெரிவித்த இந்தியா, ஒசாமா பின்லேடனுக்கு விருந்தளித்து, அண்டை நாடான இந்தியாவின் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்திய ஒரு நாட்டிற்கு, ஐநா  சபையில் “உபதேசம்” செய்வதற்கான தகுதி இல்லை என்று சாடியது. “பலதரப்பு வாதத்தின் வெற்றியை நீங்கள் காண விரும்பினால், காஷ்மீர் விஷயத்தில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் தீர்மானத்தை செயல்படுத்த அனுமதிக்கலாம்” என்று பாகிஸ்தான் கூறியதை அடுத்து இந்தியா இவ்வாறு கூறியது.

ராகுலுடன் நடந்த நகைச்சுவை நடிகர்

பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியுடன் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா கலந்து கொண்டார். ட்விட்டரில் ராகுலுடன் நடந்து செல்லும் படத்தைப் பகிர்ந்துள்ள கம்ரா,  “அதிகாரத்திற்கு எதிராக நிற்பதும் ஜனநாயகமானது, 2014 க்கு முன்பு இருந்ததைப் போல,” என்று கூறியுள்ளார்.

கர்நாடகா, மகா. முதல்வருடன் அமித் ஷா சந்திப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதன்கிழமை கர்நாடக முதல்வர்  பசவராஜ் பொம்மையையும், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை யும் சந்தித்து எல்லைப் பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தினார். மாநிலங்களில்  “அரசியலமைப்பு முறையில் ஒரு தீர்மானம் எட்டப்பட வேண்டும் என்று முதல்வர்கள்  ஒப்புக்கொண்டனர்,” என்று ஷா கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக ஒரு ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் ஒரு குழுவை அமைக்க இரு மாநிலங்களும் ஒப்புக்கொண்டுள்ளன என்று ஷா மேலும் கூறினார்.

2 ஆண்டுகள் குழந்தை பராமரிப்பு விடுப்பு

மாநில அரசில் பணிபுரியும் ‘ஒற்றைத் தந்தைகள்’ இரண்டு ஆண்டுகள் வரை குழந்தை பராமரிப்பு விடுப்பு எடுக்க அனுமதிக்கும் வகையில், ஹரியானா சிவில் சர்வீசஸ் (விடுப்பு) விதிகள், 2016-க்கான வரைவு திருத்தத்திற்கு ஹரியானா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குழந்தை பராமரிப்பு விடுப்பு க்கு தகுதியான ஆண் ஊழியர்கள் திருமணமாகாதவர்களாகவோ, மனைவியை இழந்தவர்களாகவோ அல்லது விவாகரத்து பெற்றவர்களாகவோ இருக்கலாம். இதற்கு முன்பு பெண் ஊழியர்களுக்கு மட்டுமே இந்த விடுமுறை அளிக்கப்பட்டது.

‘3 ஆண்டு படிப்பு தற்போதைக்கு தொடரும்’

நான்காண்டு படிப்புகள் முழுமையாக செயல்படுத்தப்படும் வரை மூன்றாண்டு இளங்கலைப் படிப்புகள் தொடரும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தலைவர் எம். ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார். மாணவர்கள் இனிமேல் ஹானர்ஸ் பட்டம் பெற நான்கு ஆண்டு பட்டப்படிப்பை தொடர வேண்டும் என்று யுஜிசி சமீபத்தில் அறிவித்த நிலையில், ஜெகதேஷ் குமாரின் கருத்து வெளியாகியுள்ளது. நான்கு ஆண்டு பட்டம் பெற்ற மாணவர்கள் நேரடியாக பிஎச்டி படிக்கலாம் என்றும் குமார் கூறினார்.

ஐரோப்பாவை சீர்குலைப்பதா? அமெரிக்காவுக்கு எதிராகப் போர்க்குரல்கள்

பெர்லின், டிச.15- அமெரிக்காவின் பணவீக்கக் குறைப்புச் சட்டத்தால் ஐரோப்பிய நாடு கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று  ஐரோப்பிய அரசியல்வாதிகள் மற்றும் முதலாளிகள் கவலை தெரிவித்துள்ளனர். மின்சாரத்தைப் பயன்படுத்தி இயங்கும் வண்டிகள் மற்றும் பசுமைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நடவடிக்கைகள் ஆகியவற்றிற்குப் பெரும் அளவில் மானியம் தரும் வகை யில் புதிய சட்டத்தை அமெரிக்கா இயற்றி யுள்ளது. இத்தகைய சட்டத்தின் மூலம் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தொழில்கள் சீர்குலைந்துவிடும் என்று  ஐரோப்பிய யூனியனும், பல முதலாளி களும் தெரிவித்திருக்கிறார்கள்.  இத்தகைய சட்டங்கள் ஐரோப்பிய நாடுகளைப் பின்னோக்கி அழைத்துச் சென்றுவிடும் என்று கூறும் முதலாளி கள், வாகனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறையில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்கிறார்கள். அமெரிக்காவின் மானியம் அந்த நாட்டில் தொழிற்சாலை களை அமைத்து உற்பத்தி நடவடிக்கை யை மேற்கொள்வதற்கே தரப்படும் என்பதால் ஜெர்மனியில் உள்ள தொழிற்சாலைகளை மூட வேண்டி வரலாம் என்று ஜெர்மனியின் வர்த்தக அமைப்பு எச்சரித்துள்ளது. உலக வர்த்தகக் கழகத்தின் கொள்கைக்கு எதிராக இத்தகைய சட்டங்கள் இருக்கும் என்றும், சுதந்திர வர்த்தகத்தை முன்னிறுத்தி வரும் அமெரிக்கா, மற்ற நாடுகளுக்கு நெருக்கடி யை ஏற்படுத்தக்கூடாது என்றும் ஜெர்மனி வர்த்தகர்கள் அமைப்பில் வெளி நாட்டு வர்த்தகப் பிரிவின் தலைவராக உள்ள வோல்கர் டிரெய்ரீர் கூறியுள் ளார். தங்கள் நாடுகளில் உள்ள நிறுவனங் களும், அமெரிக்கா தரும் மானியத் திற்காகத் தங்கள் தொழிற்சாலைகளை மாற்றலாம் என்று தங்கள் ஆய்வு சுட்டிக் காட்டுவதாகத் தெரிவித்திருக்கிறார்.