states

வெண்மணி தியாகிகள் 54 ஆம் ஆண்டு நினைவுதினம்

நாகப்பட்டினம், டிச.23- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் கீழவெண்மணியில் டிசம்பர் 25 அன்று வெண்மணித் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற உள்ளது. 1968 டிசம்பர் 25 அன்று நிலப்பிரபுத்துவ கொடுமையால் உயர்நீத்த தியாகிகளுக்கு 54-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு கீழ்வெண்மணியில் நடைபெற இருக்கிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய தொழிற்சங்க மையத்தின் மாநிலத்  தலைவர் அ.சவுந்தரராசன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம், நாகை மாவட்டச் செயலா ளர் வி.மாரிமுத்து, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.பி.நாகைமாலி உள்ளிட்ட தலைவர்களோடு உழைப்பாளி வர்க்கத்தின் பல்வேறு முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தவுள்ளனர். இதனை முன்னிட்டு, பகல் 11.30 மணி அளவில்   கீழ்வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் மக்கள் விரோத, தேச  விரோத, பாசிச பாஜக அரசை அகற்றிட தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள்  சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் 2023 ஏப்ரல் 5 அன்று தில்லி யில் நடைபெறும் பேரணியை விளக்கி மாபெரும் மண்டல கருத்தரங்கமும் நடைபெறுகிறது.

 இன்று மாணவர் கருத்தரங்கம் டிசம்பர் 24 (சனிக்கிழமை) அன்று இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் தேவூரில் மாநில கருத்தரங்கம் நடைபெறு கிறது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில  தலைவர் பெ.சண்முகம், சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, மாணவர் சங்க மாநிலத் தலைவர் ஜி.அரவிந்தசாமி, மாநிலச் செயலாளர் ஜி.நிருபன் சக்கரவர்த்தி, மாநிலத் துணைத் தலைவர் சம்சீர் அகமது, மத்திய குழு உறுப்பினர்கள் பிருந்தா, மிருதுளா மற்றும் ஹரி சுர்ஜித், மாவட்டச் செயலாளர் மு.ஜோதிபாசு ஆகியோர் பங்கேற்கின்றனர்.