புதுக்கோட்டை, ஜன.17 - ஆலங்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி யில் 542 காளைகளும், 290 மாடுபிடி வீரர்களும் பங்கேற்ற னர். 25 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 542 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காணும் பொங்கலையொட்டி வன்னியன்விடுதி பெருமாள் கோயில் திடலில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.செல்வி தலைமையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை, மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதலில் கோயில் காளையும் அதன்பிறகு, புதுக் கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 542 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அடக்குவதற்கு 200 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். காளை கள் முட்டியதில் 25 பேர் காயமடைந்தனர்.
இதில் 7 பேர் ஆலங்குடி மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்தனர். மஞ்சுவிரட்டு திருமயம் அருகே கே.ராயவரம் நொண்டியய்யா கோயில் திடலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 218 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில் காளை முட்டி, வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் புதுவயலைச் சேர்ந்த கணேசன் (50) உயிரிழந்தார்.