states

தமிழகத்தில் இன்று முதல் 500 மதுக்கடைகள் மூடல்

சென்னை, ஜூன் 21 - தமிழகத்தில் வியாழன் (ஜுன் 22) முதல் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்றும் மதுக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சி கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் வலி யுறுத்தி வந்தன. கல்வி நிறுவனங்கள் அருகேயும் கோவிலுக்கு அருகேயும் ஊருக்குள்ளும் அமைக்கப்பட்ட  மதுக்கடைகளை அகற்றக்கோரி மாண வர்கள், பெண்கள், பொதுமக்கள் போராட்டங்களை நடத்தினர். பொது மக்கள் மற்றும் மாணவர்களின் கோரிக் கையை முன்னெடுத்து, போதைக்கு எதி ராக மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மற்றும் கையெழுத்து இயக்கத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தியது. இதனைத்தொடர்ந்து, கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூடப் படும் என்று அப்போதைய மது விலக்கு-ஆயத் தீர்வைத்துறை அமை ச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.  மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்கள் அருகே  உள்ள மதுபானக்கடைகள் மற்றும்  மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதி களில் உள்ள மதுபானக்கடைகள் குறித்து கணக்கெடுக்கும் படி அர சாணை வெளியிடப்பட்டது. இதன்படி ஜூன் 22 முதல் தமிழ்நாட்டில் 500 மது பான சில்லரை விற்பனைக் கடைகள் செயல்படாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு  வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வரின் உத்தரவுக்கு இணங்க மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சரால் சட்டப் பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை மானியக் கோரிக்கையின் போது 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேற்படி, அறிவிப்பிற்கிணங்க 500  மதுபான சில்லரை விற்பனைக் கடை களைக் கண்டறிந்து மூடிட 20.04.2023 நாளிட்ட அரசாணை எண்.140, மது விலக்கு உள் மற்றும் ஆயத்தீர்வை துறை வெளியிட்டது. மேற்படி, அரசாணையை செயல் படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லரை விற்பனைக் கடைகளில் 500 கடைகளைக் கண்ட றிந்து அவற்றை 22.6.2023 அன்று முதல் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மேற்குறிப்பிட்ட 500 மதுபான சில்லரை விற்பனைக் கடை கள் 22.6.2023 முதல் செயல்படாது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று  கூறப்பட்டுள்ளது.

மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மண்டலத்தில் 138, கோவை மண்டலத்தில் 78, மதுரை மண்டலத்தில் 125, சேலம் மண்டலத்தில் 59, திருச்சி மண்டலத்தில் 100 டாஸ்மாக் கடைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாவட்ட வாரியாக தென் சென்னை-21 கடைகள், வட சென்னை-20, மத்திய சென்னை-20, வட காஞ்சிபுரம்-15, தென் காஞ்சிபுரம் -16, திரு வள்ளூர் கிழக்கு-32, திருவள்ளூர் மேற்கு-14, கோவை வடக்கு-10, கோவை தெற்கு-10, திருப்பூர்-24, ஈரோடு-24, நீலகிரி-3, கரூர்-7, மதுரை வடக்கு-9, மதுரை தெற்கு-12, திண்டுக்கல்-16, சிவகங்கை-14, ராமநாதபுரம்-8, விருதுநகர்-17, நெல்லை-13, தூத்துக்குடி-16, குமரி-12, தேனி-9, சேலம்-17, தர்மபுரி-4, கிருஷ்ணகிரி-2, நாமக்கல்-18, வேலூர்-8, திருவண்ணாமலை-8, அரக்கோணம்-2 கடைகள் ஆகியவை வியாழன் முதல் மூடப்படுகின்றன.

மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு

 கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் அறிவித்த படி ஜூன் 22 முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வரவேற்கிறது. படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் மற்றும் குட்கா உள்ளிட்டு போதைப் பொருள் விற்பனையை தடுப்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், இந்நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.