சென்னை, ஜூன் 8- திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 47 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்தார். சென்னையை அடுத்த ஒரகடத்தில் ரூ.762.30 கோடியில் 22 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள ‘தொழில் 4.0’ தொழில்நுட்ப மையங்களின் தொடக்க விழா வியாழனன்று (ஜூன் 8) நடைபெற்றது. டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்ட இந்த தொழில்நுட்ப மையங்களை முதல மைச்சர் தொடங்கி வைத்தார். அப்பொழுது பேசுகையில், “தமிழ்நாடு தொழிற் சாலைகள் நிறைந்த பல்வகை பொருளாதாரத்துடன் கூடிய மாநிலமாகும். யார் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக்கொள்ளா விட்டாலும், யார் மறைத்தாலும் தமிழ்நாடு என்பது அனைத்துத் துறைகளிலும் தலை சிறந்த மாநிலமாக தலை நிமிர்ந்து, ஏன் கம்பீரமாக இன்றைக்கு நின்று கொண்டிருக் கிறது” என்றார். அண்மையில் வெளியிடப்பட்ட தொழில் துறை ஆண்டறிக்கையின்படி நம்முடைய இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் தொழிற்சாலைகள் இருக்கின்றன. பணிபுரியும் தொழிலாளர்களும் இருக்கிறார் கள். வளர்ந்து வரும் புதிய துறைகளிலும் தமிழ்நாடு தான் முன்னணியில் இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார். திமுகஅரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூல மாக, 2022-2023 ஆம் ஆண்டில் நிறுவனங் களின் எண்ணிக்கை 7 லட்சத்து 33 ஆயிரத்து
296 ஆகவும், உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 47 லட்சத்து 14 ஆயிரத்து 148 ஆகவும் உயர்ந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு 71 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை 2 ஆயிரத்து 877 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில், தொழில் நுட்ப மையங்களாக தரம் உயர்த்த விரைந்து செயல்பட்டு வருகிறது. 71 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் இத்தகைய தொழில்நுட்ப மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில், முதற்கட்டமாக 22 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் தொழில்நுட்ப மையங்களை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு தொழிற் பயிற்சி நிலை யங்களில் ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரத்து 140 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு பயனடைவார்கள். ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரத்து 40 மாணவர்கள் தொழில் 4.0 தரத்திலான தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறுவார்கள். இதுபோன்ற நவீன தொழில்நுட்ப பிரிவு களில் பயிற்சி பெறுவோருக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் முன்னணி நிறுவ னங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா, டி.ஆர்.பாலு எம்.பி., கூடுதல் தலைமைச் செயலா ளர் முகமது நஜிமுதின், மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.