states

420 கிலோ புகையிலை பறிமுதல்

சென்னை, ஜூலை 4 - திண்டுக்கல்லில் இருந்து ஈரோட்டுக்கு கடத்த முயன்ற 420 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.  மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராம பாண்டியன் தலைமையில் திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலக சாலையில்  அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு வாகனம் ஒன்றை சோதனை செய்ததில் மூட்டை, மூட்டையாக தடை செய்யப்பட்ட மெல்லும் புகை யிலை இருந்தது.இதைத்தொடர்ந்து சரக்கு வாகனத்தில் 18 மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட 420 கிலோ புகையிலையை அதிகாரிகள் பறி முதல் செய்தனர். இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

;