தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா
சென்னை,டிச.30- வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தமிழகம் வந்த 2 பேருக்கும், மலேசியா, சீனாவில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் எதிரொலியாக, வெளிநாடுகளில் இருந்துவரும் விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அனைத்து பயணிகளும் பயணத்தின்போது முகக்கவசம் அணிய வேண்டும். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரேண்டம் பரிசோதனை தேவையில்லை என்று வழிகாட்டு தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 13 பேராக அதிகரித்துள்ளது.
கெளரவ விரிவுரையாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு
சென்னை,டிச.30- கெளரவ விரிவுரையாளர் பணிக்கு ஜனவரி 4 முதல் 12 ஆம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் செய்தியாளர் களிடம் கூறுகையில், தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத் தேர்வு ஜனவரி 4-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறும் . ஜனவரி 3-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு சென்னையில் அனைத்து பாடங்களையும் உள்ளடக்கிய நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது என்று தெரிவித்தார்.
டிசிஎஸ் ஊழியர்களுக்கு 20 சதவீதம் ஊதிய உயர்வு
மும்பை, டிச.30- டாடா கன்சல்டன்சி சர்வீஸ் எனப்படும் டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வைஅறிவித்துள்ளது. 70 சதவீத ஊழியர்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வும் 30 சதவீத ஊழியர்களுக்கு செயல் திறனை பொறுத்து ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றும் நிறுவனம் உறுதியளித்துள் ளது. நிறுவனத்தின் மொத்தமுள்ள 6 லட்சம் ஊழியர் களில் சுமார் 4 லட்சம் ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை யை முன்னிட்டு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை
புதுதில்லி,டிச.30- சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் மார்ச் 21-ஆம் தேதி வரையும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரையும் பொதுத்தேர்வு நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
ரூ.8,200 கோடி வசூல்
புதுதில்லி,டிச.30- அவதார் இரண்டாம் பாகமான “அவதார்- தி வே ஆஃப் வாட்டர்” திரைப்படம் வெளியான இரண்டே வாரங்களில் உலகளவில் ஒரு பில்லியன் டாலர் வசூலை (ரூ.8,200 கோடி) குவித்துள்ளது. டாம் க்ரூஸின் “டாப் கன்: மேவரிக்” சாதனையை முறியடித்துள்ளது.
காற்று மாசு : கட்டுமான பணிகளுக்கு தடை!
தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றின் தரம் கடுமையாக மோசமடைந்து வருகிறது. இந்நிலையில், “வெள்ளியன்று நடத்தப்பட்ட கூட்டத்தில், தேசிய தலைநகரின் நிலைமை, வானிலை துறை மற்றும் காற்றின் தரக் குறியீடுகள் மதிப்பீடு செய்யப்பட்டதாகவும், அதனடிப்படையில் தில்லி-என்சிஆர் பகுதி முழுவதும் அத்தியாவசியத் திட்டங்களைத் தவிர கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றும் தில்லி அரசு அறிவித்துள்ளது.
‘2022’ சாமானியரின் சமையலறைக்குத் துயரமான ஆண்டு!
பிரதமர் மோடி தனது ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில், ‘’இந்தியாவுக்கு 2022-ஆம் ஆண்டு அற்புதமான ஆண்டு’’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், அவருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதில், “நரேந்திர மோடிஜி, ஒரே ஆண்டில் சமையல் எரிவாயு விலை ரூ. 200 அதிகரித்துள்ளது. பால் விலை சராசரியாக 10 ரூபாயும், பருப்பு விலை 10 ரூபாயும், சமையல் எண்ணெய் விலை ரூ. 15 முதல் ரூ.20 வரையும், கோதுமை மாவு விலை 25 சதவிகிதமும் உயர்ந்துள்ளன. எனவே, இது அற்புதமான ஆண்டு அல்ல. சாமானியர்களின் சமையலறைக்கு துயரமான ஆண்டு” என்றுகுறிப்பிட்டுள்ளார்.
‘எடப்பாடி செயற்கையாக பதவிகளை உருவாக்கினார்’
“அதிமுக சட்ட விதிப்படியே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தொண்டர்கள் மூலம் தான் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இடையில் பல்வேறு பிரச்சனைகளை செயற்கையாக உருவாக்கினார்கள். ஒருங்கிணைப்பாளர்கள் பதவியை தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், எடப்பாடி பழனிசாமி செயற்கையாக புதிய பதவிகளை உருவாக்கினார்” என்று தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேட்டியில் கூறியுள்ளார்.
ஜனவரி 1-இல் புத்தாண்டு கொண்டாடுவது தவறாம்
“புத்தாண்டு கொண்டாடுவது இந்திய கலாச்சாரம் அல்ல, அது மேற்கத்திய கலாச்சாரம். 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட மக்களின் (ஆங்கிலேயர்கள்) கலாச்சாரம். இது தவறான நடைமுறை, இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்தியாவில் ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு கொண்டாடப்படக்கூடாது. ஏனெனில் வெவ்வேறு மாநிலங்களில் மாறுபட்ட பெயர்களில் மற்றும் வெவ்வேறு தேதிகளில்தான் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது” என்று தெலுங்கானா மாநில பாஜக எம்எல்ஏ ராஜா சிங் பேசியுள்ளார்.
மக்கள் மாறி வருகிறார்களாம் : மோகன் பகவத் பேச்சு
“விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் சைவம் நல்லது என்று நம்பப்படுகிறது. ஆனால் பழக்கங்களை மாற்றுவதற்கு நேரம் எடுக்கும். உணவுப் பழக்கத்தை யார் மீதும் திணிக்க முடியாது. மக்களின் மனம் மெதுவாக மாறுகிறது, அவர்கள் மாறுகிறார்கள். இறைச்சிக் கூடங்கள் மற்றும் தொடர்புடைய தொழில்களில் நிறைய தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இது மாசுபாட்டை அதிகரிக்கிறது. இது எந்த ஒரு நபரின் தவறும் அல்ல. ஆனால், ஒவ்வொரு நபரும் குடும்ப அளவில் தண்ணீர் பயன்பாட்டை குறைக்க வேண்டும்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.
தடய அறிவியல் பல்கலை : ஜெகன் மோகன் கோரிக்கை
தில்லிக்குப் பயணம் மேற்கொண்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்ளிட்டோரை புதன்கிழமை சந்தித்தார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வியாழக்கிழமை சந்தித்தார். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில், திருப்பதியில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் வளாகத்தை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: சரத் பவார் பேச்சு
சிலர் காங்கிரஸ் இல்லாத பாரதம் வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஆனால் காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்க முடியாது. அது சாத்தியமில்லை. காங்கிரசின் சித்தாந்தத்தை யும், பங்களிப்பையும் புறக்கணித்துவிட முடியாது. கொள்கைகளில் முரண் இருக்கலாம், ஆனாலும் நாங்கள் காங்கிரசுடன் இணைந்து பயணிப்போம். தற்போது ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து அவர்களை எதிர் கொள்ளவேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் நெருக்கமாகும் திரிணாமுல் - பாஜக!
“ஒரு ரயில் இயக்கத்தை நாட்டின் பிரதமர் தொடங்கி வைக்கிறார் என்பதை நாம் கேள்விப்பட்டதே இல்லை. நான் ரயில்வே அமைச்சராகவும் இருந்துள்ளேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கு வங்கத்திற்கு வந்தார். தற்போது மம்தாவுடன் சமரசம் செய்ய பிரதமர் மோடி வருகிறார். இதனால் மம்தா மற்றும் அவரது கட்சியினருக்கு எதிரான சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணையின் வேகம் குறையும்” என்று காங்கிரஸ் மக்களவைக்குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
மின்வாரிய ஊழியர் ஊதிய உயர்வு பேச்சு
சென்னை,டிச.30- தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர் ஊதிய உயர்வு தொடர்பாக ஜன. 3 அன்று பேச்சுவார்த்தை நடத்த தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது. ‘கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 1 முதல் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக தொழிலாளர் துணை ஆணையர் முன்னிலையில் ஜன.3 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள பேச்சு வார்த்தைக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் இருதரப்பினரும் ஆஜராக வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக இரட்டைத் தலைமைக்கு தேர்தல் அதிகாரி கடிதம்
சென்னை,டிச.30- ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மாதிரியுடன் அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துகேட்டு ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 16 அன்று தேர்தல் ஆணையம் நடத்து கிறது. இதற்காக அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாகு கடிதம் அனுப்பி வருகிறார். அதிமுக தலைமைக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், அதிமுக இரட்டை தலைமையை குறிப்பிடும் வகையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு கடிதத்தை அனுப்பியுள்ளார். ஏற்கனவே அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி பெயரில் வரவு -செலவு கணக்குஇந்திய தேர்தல் ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்டது. அவரது பெயரில் சமர்ப் பிக்கப்பட்ட கணக்கை ஏற்றுக் கொண்டு இணையதளத்திலும் பதி வேற்றம் செய்துள்ளது. அதே போல் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கருத்து கேட்கும் தேசிய சட்ட ஆணையத்தின் கடிதத்திலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டிருந்தது.
ஜன.13 ரேசன் கடைகள் செயல்படும்
சென்னை,டிச.30- தமிழ்நாட்டில் ஜனவரி 13 அன்று அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும் என்று தமிழ்நாடு அறிவித்துள்ளது. மாநிலம் முழுமைக்கும் அரிசி பெரும் அனைத்து குடும்ப அட்டை தார்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு ரூ. 1000 ரொக்கம், முழு கரும்பு வாங்கப்படும் என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறி வித்தார். இந்த தொகை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று கூட்டுறவு மற்றும் உணவு த்துறை தெரிவித்தது. குறுகிய நாட்களே உள்ளதால் ரேசன் கடை களில் வரிசையில் நிற்கும் பொது மக்கள் அனைவருக்கும் விடு படாமல் பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும் என அரசு உத்த ரவிட்டுள்ளது. யாருக்கும் பொங்கல் பரிசு பொருள்-பணம் வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பொங்கல் பரிசை பொங்கல் பண்டி கைக்கு முன்பே வழங்க வேண்டும் என்பதற்காக வருகிற 13 ஆம் தேதி ரேசன் கடைகள் அனைத்தும் செயல்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரூ.60 ஆயிரத்து 389 கோடி மோசடி மோடி அரசின் 2022-ஆம் ஆண்டு சாதனை
மும்பை, டிச.30- கடந்த நிதியாண்டில், வங்கி மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும் அவற்றில் சம்பந்தப்பட்ட தொகை பாதியாகக் குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த நிதியா ண்டில், மட்டும் மொத்தம் 9,102 மோசடிகள் நடைபெற்றுள்ளதாக வங்கிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 60 ஆயிரத்து, 389 கோடி ரூபாய் அளவுக்கு மோசடிகள் நடைபெற்றுள்ளன. இதுவே, அதற்கு முந்தைய நிதியாண்டில், மோசடிகளின் எண்ணிக்கை 8,702 ஆகவும், மதிப்பு 1.85 லட்சம் லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது. கடன் வாங்கியதில் நடைபெறும் மோசடிகளை விட கார்டுகள், ‘ஆன்லைன்’ பரிமாற்றங்களில் மோசடிகள் அதிகரித்துள்ளன. ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நடைபெற்ற மோசடிகள் குறித்து வங்கிகள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, பொதுத்துறை வங்கிகளை விட, தனியார் துறை வங்கிகள் அதிகமான மோசடிகளை சந்தித்துள்ளன. நடப்பு நிதி யாண்டின் முதல் பாதியில் 5,406 மோசடிகள் பதிவாகி உள்ளன. இவற்றின் மதிப்பு 19 ஆயிரத்து, 485 கோடி ரூபாயாகும். கடன் வழங்குபவர்களால் புகாரளிக்கப்பட்ட மோசடிகளைத் தவிர, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களால் இந்திய ரிசர்வ் வங்கியில் 3.04 லட்சம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பாம்பன் ரயில் போக்குவரத்து ஜனவரி 10 வரை ரத்து
மதுரை, டிச.30- பராமரிப்புப் பணிகள் காரணமாக, பாம்பன் பாலத்தில் ரயில் போக்கு வரத்து வரும் ஜனவரி 10-ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. பாம்பன் ரயில் பாலத்தில் டிச.23 அன்று எச்சரிக்கை மணி ஒலித்தது. இதையடுத்து ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதிகமான அதிர்வுகளால் எச்சரிக்கை மணி ஒலித் தது என ரயில்வே நிர்வாகம் கூறி யிருந்தது. இதையடுத்து சென்னை ஐஐடி வல்லுனர்கள் காலி ரயில் பெட்டி களை பாம்பன் பாலத்தில் இயக்கி ஆய்வு செய்தனர். ஆய்வு அறிக்கை யை லக்னோ ரயில்வே ஆராய்ச்சி வடி வமைப்பு தர நிறுவனத்திற்கு அனுப்பி யுள்ளனர். இதனால் பாம்பன் பாலம் வழியாக ரயில்கள் செல்ல, வருகிற டிசம்பர் 31 வரை தடை விதிக்கப்பட்டி ருந்தது. தற்போது இந்தத் தடை ஜன வரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இந்தத் தகவலை தென்னக ரயில்வேயின் மதுரைக் கோட்டம் தெரிவித்துள்ளது.
ஊரக இளைஞர் வேலைவாய்ப்புத் திட்டம்: 50 சதவீதம் பேருக்கு வேலையில்லை
புதுதில்லி, டிச.30- 2022-ஆம் ஆண்டில் பிரத மர் மோடி தலைமையிலான அரசு ஏழை-எளிய மக்களின் வாழ்நிலையை உயர்த்தி விட்டதாக தம்பட்டம் அடித்து வருகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத் தின் கீழ் 2022 -ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி வரை 11.37 கோடி குடும்பத்தினர் வேலை வாய்ப்பு பெற்றி ருப்பதாகவும். 289.24 கோடி தனிநபர் வேலைவாய்ப்புகள் உருவாக்க ப்பட்டுள்ள தாகவும் கூறுகிறது. தீன்தயாள் உபாத்யாயா ஊரக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 2022-23-ஆம் ஆண்டில் மொத்தம் 1,09,293 விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது. இதில் நவம்பர் 30-ஆம் தேதி வரை 52,456 பேருக்கு மட்டுமே பணிகள் வழங்கப்பட்டுள்ளன.