தூத்துக்குடி, மார்ச்.8- இந்திய துறைமுகங்கள் சந்திக்கும் நெருக்கடிகள் குறித்து நீர்வழி போக்கு வரத்து ஊழியர் சம்மேளன (டபிள்யு டிடபிள்யு எப்ஐ) அகில இந்திய பொதுச் செயலாளர் டி.நரேந்திரராவ் செய்தியா ளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், இந்திய நாடு முழுவதும் உள்ள துறை முகங்களில் பணியாற்றக்கூடிய தொழி லாளர்களை ஒருங்கிணைத்து, 5 சம்மேள னங்களையும் ஒன்றிணைத்து ஓர் அணி யாக சேர்த்து வருகின்ற ஏப்ரல் மாத இறுதியில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு போராட்ட இயக்கங்கள் நடத்த உள்ளோம். வருகின்ற 2024, தேர்தல் ஆண்டு. கடந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் இது வரை நிறைவேற்றப்படவில்லை. கடந்த தேர்தலில் ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை தருவதாக கூறினார். தற்போது தேர்தல் வர இருப்பதால் பல்வேறு வாக்கு றுதிகளை கூறி வருகிறார். சமீபத்தில் ரோஜ்கர் மேளா திட்டத்தின் மூலம் நாட்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள துறைமுகங்க ளில் மட்டும் கடந்த 10ஆண்டுகளில் சுமார் 34ஆயிரம் காலி பணியிடங்கள் ஏற் பட்டுள்ளன. இந்த காலி பணியிடங்கள் அனைத்தும் நிரந்தரத் தன்மையுடைய பணியிடங்களாகும். இதில் ஆயிரக்க ணக்கான தொழிலாளர்கள் குறைந்த பட்ச ஊதியத்தில் காண்ட்ராக்ட் அடிப் படையில் பணியாற்றிவருகின்றனர். ரோஜ்கர் மேளா திட்டம் மூலம் இவர்களு க்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும்
இந்தியாவில் துறைமுகம் உள்ளிட்ட எல்லா துறைகளிலும் அதானி தலை யீடு உள்ளது.சென்னை அருகே உள்ள காமராஜர் துறைமுகத்தினை அதானி யிடம் விற்பனை செய்ய முயற்சி நடை பெற்றது. ஆனால் சிஐடியு தலையிட்டு அந்த துறைமுகத்தினை சென்னை துறைமுகமே வாங்க வேண்டும் என வலுவாக வலியுறுத்தியதன் காரணமாக அத்துறைமுகம் காப்பாற்றப்பட்டது. பெருந்துறைமுகங்களில் சரக்கு களை கையாளும் முனையங்கள் உள்ளன. இதனை பொதுத்துறை சொத்துக்களை பணமாக்குதல் என்ற பெயரில் தனியாருக்கு தாரை வார்க்க திட்டமிடுகிறார்கள். இந்த நாட்டில் 100-க்கு 90-சதவீதம் லாபம் கிடைப்பது துறைமுகங்கள் மூல மாகத்தான். எனவே துறைமுகங்களை பொறுத்தவரையில் அதானி தலை யீட்டைத்தடுக்க வேண்டும். துறை முகங்களில் இன்றைக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சவால் என்பது ‘மேஜர் போர்ட் ஆதாரிட்டி ஆக்ட் 2021’ (பெரும் துறைமுகங்கள் ஆணையச் சட்டம் 2021) என்பதை கொண்டு வந்துள்ளதுதான். தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இங்குள்ள கேண்டீனில் 40ஆண்டுக ளாகபணியாற்றும் பணியாளர்கள் இன்று வரை பணி நிரந்தரம் செய்யப்படாமல் ஒப்பந்தப் பணியாளர்களாகவே உள்ளனர். தூத்துக்குடி துறைமுகத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றும் பணி யாளர்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. துறைமுக தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து இந்தி யாவில் உள்ள அனைத்து துறைமுக ஊழியர்கள் சார்பிலும் சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஏப்ரல் மாதம் இறுதியில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த இருக்கின்றோம். இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி யடைந்து வருவதற்கு காரணம் அதானி குழுமத்தின் தலையீடு தான். இவ்வாறு நரேந்திரராவ் கூறினார். பேட்டியின்போது துறைமுக ஜன நாயக ஊழியர் சங்க தலைவரும், வ.உ.சி துறைமுக போர்ட் டிரஸ்டியுமான பால கிருஷ்ணன், செயலாளர் காசி, பொருளா ளர் மீனாட்சி சுந்தரம், அலுவலக செயலாளர் நாகராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.