states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பத்திரிகையாளர் நல வாரியத்தில் 3300 பேர் : அமைச்சர் தகவல்

சென்னை, நவ.29- திமுக ஆட்சிக்கு வந்ததும் பத்திரி கையாளர்களின் நலனைக் காக்கும் பொருட்டு ஏராளமான பணிகளை செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:  பத்திரிகையாளர்களின் நலனைக் காக்கும் பொருட்டு இந்த அரசு ஆட்சிப்  பொறுப்பேற்றவுடன் ‘பத்திரிகை யாளர் நலவாரியம்’ உருவாக்கப் பட்டது. இந்த நலவாரியத்தில் 3300  பேர் உறுப்பினர்களாக இணைக்கப் பட்டுள்ளனர். நலவாரிய உறுப்பினர் களுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட 21  வகையான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்கி வருகின்றது. 446 செய்தியாளர்களுக்கு சுகா தார அடையாள அட்டைகள் வழங்கப் பட்டுள்ளன. பத்திரிகையாளர் நலவாரி யக் குழுவின் பரிந்துரைகளின் அடிப் படையில் செய்தியாளர்களுக்கு ஓய்வூதியம், மறைந்த செய்தியா ளர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி போன்ற பத்திரிகையாளர்களின் நலன்காக்கும் பல்வேறு நடவடிக்கை களை அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நாகை, கடலூரிலிருந்து  மாலத்தீவு, இலங்கைக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து விரைவில் தொடக்கம்

 சென்னை,நவ.29- நாகை, கடலூர் துறைமுகங்களில் இருந்து மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு விரைவில் சரக்கு கப்பல் போக்கு வரத்து தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டு, தற்போது 150 பயணிகளுடன் வாரத்துக்கு 5 நாட்களுக்கு இருவழிகளிலும் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மாலத்தீவுகள், இலங்கை யாழ்ப்பாணம், கொழும்பு, காங்கேசன்துறை உள்ளிட்ட இடங்களுக்கு கடலூர், நாகை துறைமுகங்களில் இருந்து சரக்குகளைக் கையாள தமிழ்நாடு கடல்சார் வாரியம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இலங்கைக்கு வேளாண் பொருட்கள், மீன்சார் பொருட்கள் மற்றும் இதர நுகர்வுப் பொருட்கள் என ஆண்டுக்கு 75 ஆயிரம் டன் சரக்குகளைக் கையாளவும், வரும் ஆண்டுகளில் இது பன்மடங்காக அதிகரிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக தெரியவருகிறது. சிறிய அளவிலான பாய்மரக் கப்பல்கள், மிதவைகளைக் கையாள்வதற்குத் தேவையான கட்டமைப்புகள் மற்றும் சுங்கம், குடிவரவு, சுகாதாரத் துறை ஆகிய அனைத்து அனுமதிகளுடன் கடலூர் மற்றும் நாகை துறைமுகங்கள் தயாராக உள்ளன. இந்த வசதிகளை சரக்கு இறக்குமதி-ஏற்றுமதியாளர்கள், முகவர்கள் மற்றும் மரக்கல மிதவை உரிமையாளர்கள் பயன்படுத்திக்கொண்டு, சரக்கு இறக்குமதி- ஏற்றுமதி செய்து, குறைந்த செலவில் திருப்திகரமான சேவைகளை பெற்றுப் பயன்பெறலாம். இதன் மூலம் அவர்களுக்கு வருவாய் பெருகக்கூடும். இந்த துறைமுகங்களின் வாயிலாக சரக்கு இறக்குமதி- ஏற்றுமதி செய்வது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு துறைமுக அலுவலர்களை கடலூர்- 94422 43225, நாகை- 94425 59978 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று நாகை ஆட்சியர் ஆகாஷ் தெரி வித்துள்ளார்.

குழந்தைகள் சமூக ஊடகத்தை பயன்படுத்தத் தடை!
உலகில் முதல் முறையாக சட்டம் கொண்டு வந்தது ஆஸ்திரேலியா

கான்பெரா,நவ.29-   16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டம் ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டுள்ளது.  இதன் மூலம் உலகிலேயே முதல் முறையாக 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் முகநூல், இன்ஸ்டா கிராம், டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை ஆஸ்தி ரேலியா உருவாக்கியுள்ளது. இந்த தடையின் காரணமாக எதிர்மறையான சில விளைவுகள் உருவாகும் எனவும் அதுபற்றி எந்த விவாதங்களும் இன்றி நாடாளுமன்றம் இச்சட்டத்தை அவசரமாக இயற்றி விட்டது என இந்த தடை சட்டத்திற்கு எதிராக பல்வேறு தொழில் நுட்ப நிறுவனங்களும், கல்வியாளர்களும் விமர்சனங்கள் எழுப்பி வருகின்றனர். அந்நாட்டின் ரிசர்வ் வங்கியின் சீர்திருத்தங்கள், வரி வெளிப்படைத்தன்மை சட்டம் என கிட்டத்தட்ட 30 க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களில் 16 வய துக்குட்பட்ட குழந்தைகளை சமூக ஊடக பயன் பாட்டில் இருந்து விலக்கி வைக்கும் தடை சட்ட மும் ஒன்றாகும். இந்த சட்டங்கள் அனைத்தும் வியாழக்கிழமையன்று அந்நாட்டு நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்தின்படி சிறுவர்கள் ஏதேனும் சமூக ஊடகத்தில் புதிய கணக்குகளை உருவாக்கும் போது அந்த ஊடகம் அதனை தடுக்காமல் விட்டால் சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கு 32 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (270 கோடி ரூபாய்) வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் சோதனை முறையில் 2025 ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட உள்ளது. சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வர ஒரு வருடம் கூட ஆகலாம் என்று கூறப்படுகிறது.  பிரான்ஸ், அமெரிக்காவின் சில மாகாணங்க ளில் பெற்றோரின் அனுமதியின்றி சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால் உலகிலேயே முதல் முறையாக ஆஸ்தி ரேலிய அரசு தான் முழுமையாகத் தடை செய்யும் சட்டத்தை அமல்படுத்துகிறது.    இந்த சட்டத்திற்கு எதிர்ப்புகள் வந்தாலும் 77 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக சில கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த சமூக ஊடகத் தடை மட்டுமல்லாது பள்ளிகளில் கைபேசி பயன்படுத்துவதை  தடை செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டபோது இது போன்றே  பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அந்த சட்ட அமலாக்கத்திற்குப் பிறகு குழந்தைகளின் மன ஆரோக்கியத்தில் ஆக்கப்பூர்வமான மற்றம் ஏற்பட்டு  வருகிறது என அந்நாட்டு பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுக, பாஜக நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை

புதுக்கோட்டை, நவ.29 - புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கடுக்காக்காடு கிராமச் தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (53), புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பாஜக பொருளாளராக உள்ளார். இவரது அண் ணன் ரவிச்சந்திரன் (55), தம்பி பழனி வேல் (50).  இவர்களில் பழனிவேல் அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச்  செயலாளராக உள்ளார். ரவிச்சந்திரன் கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராகப்  பணியாற்றி வருகிறார். முருகானந்த மும், பழனிவேலும் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதும்  சோலார் தெரு விளக்குகள் அமைக்கும் ஒப்பந்தம் மற்றும் பல்வேறு பொதுப் பணித் துறை ஒப்பந்தம் எடுத்து வேலை செய்து வந்தனர். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முருகானந்தம் உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு  போலீசார் வழக்குத் தொடர்ந்து 2021இல் சோதனை நடத்தியுள்ளனர். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை சுமார் 7.30 மணிக்கு, மதுரையில் இருந்து 9 வாகனங்களில் வந்த மத்திய அமலாக்கத் துறையினர் 20 பேர், முருகானந்தத்தின் புதுக்கோட்டை சார்லஸ் நகர் வீடு, கறம்பக்குடி அருகே யுள்ள கடுக்காக்காட்டிலுள்ள முருகா னந்தம், ரவிச்சந்திரன் மற்றும் பழனி வேல் ஆகியோரின் வீடுகள் மற்றும் ஆலங்குடி கேவிஎஸ் தெருவிலுள்ள மற்றொரு பழனிவேல் என்பவரின் வீடு ஆகிய 5 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். கடுக்காக்காட்டில் நடைபெற்ற சோதனை பிற்பகல் 2.30 மணியுடன் நிறைவடைந்தது.