states

3.26 லட்சம் வணிகர்கள் வரி செலுத்தவில்லை

சென்னை, மே 13- தமிழகத்தில் கடந்த நிதியாண்டில் 3.26 லட்சம் வணிகர்கள் ஒரு ரூபாய் கூட வரி செலுத்தவில்லை என வணிகவரி ஆணை யர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூடுதல் தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது: வணிகவரித்துறையால் சுமார் 3.26 லட்சம் வணிகர்கள் கடந்த நிதி ஆண்டில்  (2021 - 2022) ஒரு ரூபாய் கூட வரி  செலுத்தவில்லை என்பது கண்டறி யப்பட்டுள்ளது. அதேபோல், சுமார் 1.94 லட்சம் வணிகர்கள், ரூபாய் ஆயிரத்திற்கும் கீழ் மட்டுமே சரக்கு மற்றும் சேவைகள் வரி யினை கடந்த நிதி ஆண்டில் செலுத்தியி ருக்கிறார்கள். இத்தகைய வணிகர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டு அவர்களுடைய கணக்கை சரிபார்த்து உரிய வரிகளை செலுத்துமாறு தெரி விக்கப்பட்டுள்ளது. மேலும் வணிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது துறையால் கண்ட றியப்பட்டால் வரியுடன் வட்டி மற்றும் அபராதத்தொகை விதிக்கப்பட்டு  வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே அனைத்து வணிகர்களும் ஒரு மாதத்திற்குள் தங்களது கணக்கை சரிப்பார்த்து உரிய வரியை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.