states

மயிலாடுதுறை: 3,281 வீடுகள் சேதம் 1,200 கால்நடைகள் உயிரிழப்பு

மயிலாடுதுறை, நவ.17- சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக் களில் உள்ள சுமார் 1.61 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என  முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித் துள்ளார். இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்த  பின் செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் மெய்யநாதன், கார்டு தாரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம் தவிர, பகுதியளவில் அல்லது முழுமையாக வீடுகள் சேத மடைந்த குடும்பங்களுக்கு உரிய  இழப்பீடு வழங்கப்படும்.  இதுவரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 917 குடிசை வீடுகள் பகுதியளவிலும், 2,364 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.  இது தவிர, 586 ஓடு வேயப்பட்ட வீடுகளும் சேதமடைந்துள்ளன. இன்னும் கணக்கெடுப்பு  பணி நடந்து கொண்டிருந்தது. மாவட்டத்தில் 1,200க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளன. 

25 ஆயிரம் கனஅடி  திறப்பே சேதம்

சீர்காழி பகுதியில் உள்ள இரண்டு பெரிய வடிகால்களான உப்ப னாறு மற்றும் கல்மனையாறு ஆகிய வற்றின் அதிகபட்ச தண்ணீர் கடத்தும் திறன்  2,700 கனஅடி மட்டுமே. ஆனால், கனமழை காரணமாக 25  ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டதால் பெரும் சேதம் ஏற்பட்டது. அதே நேரத்தில் நீர்வளத்துறை 69 இடங்களில் ஏற்பட்ட உடைப்புகளை அடைத்துள் ளது என்றார்.

தூர்வாரியதால் சேதம் குறைவு

கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அமைச்சர், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும் என்றார். நீர்நிலை களை தூர்வாரத் தவறியதே வெள்ளத்திற்கு காரணம் என்ற  குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார். தூர்வாரும் பணி வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்பட்டது மற்றும் வண்டல் மண் அகற்றப்பட்ட தன் மூலம் சேதம் குறைந்துள்ளது என்றார்.

மோடி அரசு பாரபட்சம்

மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு  ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதியில் இருந்துதான் மாநில அரசு நிவாரணம் வழங்கியுள்ளது என்று  பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மெய்யநாதன், ஒன்றிய அரசு மாநி லத்திற்கு பாரபட்சம் காட்டுவதாகக் குற்றம்சாட்டினார். 

பிரதமர் கவலைப்படவில்லை

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்  அறிக்கையை வெளியிடு வது குறித்து கூட  பிரதமர்  மோடி கவலைப்படவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற சேதம் ஏற்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நேரில் ஆய்வு செய்திருப்பார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கூடுதல் நிதியைப் பெறுவதற்கு அண்ணாமலை பிரதமரிடம் கோரிக்கை வைக்க லாம் என்றார்.