states

அமர்நாத் நிலச்சரிவில் தப்பிய 25 பேர் சென்னை வருகை

சென்னை,ஜூலை 10- தமிழ்நாட்டிலிருந்து அமர்நாத் யாத்திரை சென்று அங்கு ஏற்பட்ட நிலச்சரிவு ஆபத்திலிருந்து தப்பித்து, திருவாரூர், தஞ்சாவூர், நாகை தூத்துக்குடி, கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 25 பேர் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்தில்  செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் கூறியதாவது:- நாங்கள் ஒன்பது பெண்கள் உள்பட 25 பேர் ஜூலை 3ஆம் தேதி சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டோம். 4 ஆம் தேதி அமர் நாத் சென்றோம். அப்போது அங்கு நல்ல சீதோசன நிலை நிலவியது. பின்பு அமர்நாத்துக்கு 6 கி.மீ., முன்னதாக உள்ள பஞ்சதரணி என்ற  பகுதிக்கு சென்றோம். பின்னர் 4 ஆம் தேதி இரவு  பஞ்சதரணியில் முகாமில் தங்கி யிருந் தோம். அதன் பின்பு 5 ஆம் தேதி காலையில் கோயிலுக்கு கீழே இறங்கும்போதே மழை பெய்ய தொடங்கிவிட்டது. உடனடியாக அமர்நாத்திலிருந்து கீழே இறங்குவதையும் அமர்நாத்துக்கு மேலே ஏறுவதையும் தடை செய்து விட்டனர். நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கு தவித்துக் கொண்டிருந்தோம். 4 மணி  நேரத்தில் மழை ஓய்ந்து, வெயில்  அடிக்க தொடங்கியது. இதை யடுத்து எங்களை கீழே இறங்க அனு மதித்தனர். நாங்களும் அவசரமாக கீழே இறங்கி பஞ்சதருனி வந் தோம். அங்கிருந்து ஹெலிகாப்ட ரில் மீட்கப்பட்டோம். ஆனால் மீண்டும் 6, 7 ஆகிய தேதிகளில் பெய்த பலத்த மழை யால், நாங்கள் தங்கியிருந்த பகுதி முழுவதுமே மண் சரிவு ஏற்பட்டு அடித்து செல்லப்பட்டது என்பதை அறிந்தபோது பெரும் அதிர்ச்சி அடைந்தோம்.  ராணுவத்தினர் மிகச்  சிறப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு தெரிவித்தனர்.