states

7ஆயிரம் பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் தேர்வு எழுதினர்

சென்னை, ஜூலை 24- அரசுத் துறைகளில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 301 குரூப்-4 பணியி டங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வ தற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவித்து இருந்தது.   அதன்படி தமிழ்நாடு முழு வதும் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4  தேர்வு ஞாயிறன்று (ஜூலை 24) நடந்தது. இந்த தேர்வை 22 லட்சத் த்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதி னார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட திரு நங்கைகளும் தேர்வு எழுதினார்கள். அவர்களில் மொத்தம் 131 பேர் விண் ணப்பித்து இருந்தார்கள். இந்த தேர்வு தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 639 மையங்களில் நடந்தது. சென்னையில் 503 மையங்களில் 1 லட்சத்து 56 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள்.

கடும்கட்டுப்பாடுகள்

தேர்வு மையங்கள் வழியாக சென்ற அனைத்து பஸ்களும் அந்த பகுதி யில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது. தேர்வு எழுத வந்த வர்களுக்கான கட்டுப்பாடுகள், விதி முறைகள் முன்கூட்டியே தேர்வ ர்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. பல இடங்களில் நூற்றுக்கணக்கான வர்கள் 9 மணிக்கு பிறகு தேர்வு எழுத வந்தார்கள் அவர்களை தேர்வு கூடத்து க்குள் அனுமதிக்கவில்லை. மறியல் திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூ ரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மற்றும் பொன்னேரியில் உள்ள உலக நாதன் கல்லூரி, ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளி, பாரத் மெட்ரிக் பள்ளி, வேலம்மாள் பள்ளி ஆகிய மையங்களில் தாமதமாக வந்த வர்களை அனுமதிக்காததால் மறிய லில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் எச்சரித்து விரட்டி விட்டனர். சென்னை புதுக்கல்லூரி, நீலாங்கரை யிலும் தாமதமாக வந்தவர்கள் போரா ட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வு எழுதி முடித்த பிறகு ஓ.எம்.ஆர். தாளில் இடது கை பெருவிரல் ரேகையை ஒவ்வொரு வரும் பதிவு செய்தனர். தேர்வில் முறை கேடுகளை தடுக்க 7689 மையங்க ளிலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது.